முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்யாணம்ம்ம்....ஆகா கல்யாணம்!

 


1500 பேருக்கு மேலே கலந்துகொண்ட ஒரு திருமண விழாவில் எனக்கு ஏனோ இந்த படம் மட்டுமே எடுக்கத்தோன்றியது.


ஏராளமான விருந்தினர்கள் விதம் விதமான அலங்காரத்தில். தலைக்கு மேலே மெல்ல whirஇட்டு செல்லும் Drone கேமராக்கள், நன்கு ஒத்திகை பார்க்கப்பட்டு நிகழ்ந்த நடனங்கள், flash mob dances, மெல்லிசை, வான வேடிக்கைகள் இவை எதுவுமே என்னை ஈர்க்கவில்லை.


நாற்பது கடந்த event management பெண்கள், கேரள பெண்கள் போல உடை உடுத்து உடலை வளைத்து கஷ்டப்பட்டு ஆடிய மாப்பிள்ளை வரவேற்பு நடனங்களும், மாப்பிள்ளையை எதிர்கொண்டு 'நகரும் பூப்பந்தல்' கீழே வரவேற்ற மணப்பெண்ணும், வரவேற்பு மேடையில் அத்தனை பேருக்கு முன் மாப்பிள்ளை, பெண் + நட்புகள் ஆடிய நடனமும், அங்கங்கே முறுக்கேறிய தசைகளுடன் இறுகிய முகத்துடன் நின்றிருந்த சீருடை Bouncerகளும் கவனம் ஈர்க்கவில்லை. இந்த மனிதர் மட்டுமே.


தன் கடமையை (உணவு சமைப்பது) முடித்துவிட்ட நிம்மதியில் தன்னை சுற்றி நடக்கும் ஆரவாரங்களுக்கு மத்தியில் தனக்கு பிடித்த ஏதோவொரு காட்சியை தன் கைபேசியில் ஒன்றிப்போய் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த மனிதர் எனக்கு ஏகாந்தமான ஒரு உணர்வை தருவது தெரியாமலே தந்துபோனார். சுற்றி நிகழும் ஆரவாரங்கள் துளி கூட இவரது சிந்தனையை கலைக்கவில்லை!


ஆயிரம் வாசல் இதயம். ஆனால் உணவு அறைக்கு ஒற்றை வாசல். நுழைவாயிலில் அரை கதவை மூடி, திறந்திருந்த அரை கதவிற்கு ஒரு Bouncer காவல். மேடையில் முழு கவனத்துடன் இருந்த இருமண வீட்டாருக்கு இங்கு நிகழ்ந்த 1500+ தள்ளுமுள்ளுகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் டெல்டா நிலத்தில் நிகழும் திருமணங்களில் இந்த 'கூட்டத்தை கட்டுப்படுத்தும்' மனிதர்களை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. அங்கு இன்னும் 'Package Marriages' பெரிதாய் நுழையவில்லை. ஒவ்வொரு திருமணத்திலும் உறவினர் சிலராவது உணவு அறை சேவையில் இருந்துகொண்டு, வரும் அனைவரையும் உறவு சொல்லி அழைத்து அவ்வளவு இயல்பாய் regulate செய்வதை பலமுறை அருகில் இருந்து பார்த்த அனுபவம் உண்டு. வரும் கூட்டமும் தானே self regulate செய்துகொள்வதும் இயல்பாய் நடக்கும்.


மணமகன் தந்தையும் தமையனும் 1980களில் வரும் தமிழ் சினிமா ஜமீந்தார் போலதொரு உடை உடுத்து பம்பரமாய் சுற்றி வியர்த்துக்கொண்டிருந்தனர். மணமகள் தந்தை இன்னொரு ஜமீந்தார் போன்ற உடையில். 


இவை இவர்களின் இயல்பே இல்லையே. நம்ம ஊர் கல்யாணம் போல இல்லயே. வடக்கு, மேற்கு எல்லாமும் கலந்து கட்டிய நிகழ்வாக இருக்கிறதே , ஒருவரையும் வேட்டி சட்டையில் காண முடியவில்லையே என்று நண்பரிடம் வினவினேன்.


'இது ரிஷப்ஸன் ஈவன்ட். அதான் இப்படி. இவங்க பரவாயில்லை பாபு, சென்னையில் பல கல்யாணங்கள்ல இதவிட ஜோரா அலப்பறை நடக்கும்' என்றார்.


நான் கடந்த இருபத்தைந்து வருடங்களில் சென்னையில் கண்ட முதல் திருமண நிகழ்வு இது என்கிற Culture Shock இன்னும் என்னை விட்டு அகலாத பிரமிப்பில் பார்த்துக்கொண்டிருந்தேன்.


மறு நாள் காலை முகூர்த்தத்தில் அனைவரும் தமிழ் பாரம்பரிய உடையணிந்து சிவனடியார் (தாடி, சடைமுடி கேசம்) தோற்றத்திலிருந்த ஐயர் மந்திரங்கள் ஓத, சுபமாய் திருமணம் நிகழ்ந்தேறியது. 'அடுத்த பத்து நிமிஷத்துக்கு யாரையும் பொண்ணு மாப்ளகிட்ட கிஃப்ட. குடுக்க விடமாட்டேன். சடங்குல்லாம் தாமதமாயிடும்' என ஸ்ட்ரிக்டான வாத்தியார் குரலில் அவர் அரைமணி நேரமாக சொல்லிக்கொண்டிருந்தார்!


மிக சாதாரண பின்புலத்திலிருந்து தொழில் தொடங்கி கடின உழைப்பால் முன்னேறிய மனிதரின் மகளுக்கு திருமணம், இவ்வாறு இனிதே சுற்றமும் நட்பும் சூழ நடந்தேறியது.


ஆனாலும் நெருங்கிய சுற்றமும் நட்புகளும் மட்டுமே கலந்துகொண்டு வாழ்த்தும் Intimate Ceremonyயில் உள்ள நிறைவு இதில் கிடைக்குமா என தெரியவில்லை.


இதுபோன்ற திருமண நடைமுறைகளின் நகைமுரண் என்ன தெரியுமா? 


பத்து இருபது ஆண்டுகள் முன்பு இரண்டாயிரம் பேரை வரவேற்று நிகழ்ந்த திருமணங்களின் குழந்தைகள் இன்று தங்கள் திருமணங்களை நமது பழைய Intimate Ceremony போல மிகச்சிலரை மட்டுமே அழைத்து நிகழ்த்துகின்றனர், ஆனால் வேற்று நிலங்களில், Destination Wedding என்கிற பெயரில்.


திருமணம் என்பது ஆயிரம் காலப்பயிரென்றால் அது தழைக்க அதனுடைய நிலம்தானே வேண்டும்?!


பேரன்புடன்,

பாபுஜி


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...