முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காற்றில்...எந்தன் கீதம்...

காலை செய்தித்தாளை அவசரமாய் புரட்டிப்படித்த ஆனிக்காற்று, வாசித்த செய்திகளின் தாக்கத்தால் சித்தம் கலங்கி எங்கெங்கோ சுற்றி அலைந்துகொண்டிருக்கிறது இப்போது வரை.

இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அப்படித்தானாம்.


காற்று காணாதா போரா, வன்முறையா, கோரமா, சோகமா, கோபமா, அழுகையா, ஓலமா? ஆனாலும் அவற்றையெல்லாம் மறுபடி மறுபடி அச்சில் படிக்கும் சோகம் அதனை கனத்த போர்வையாய் கவ்வும்.


இன்னும் எத்தனை தலைமுறைகளுக்குதான் இந்த மனிதர்கள் இங்கே இப்படி என நொந்துபோய் சற்றே இளைப்பாற தவிக்கும் காற்றுக்கு இப்போதெல்லாம் மரங்கள் கூட இல்லை மனிதர்கள் உலகில்.


காற்று காணாத செய்திகளையா தாள்கள் மனிதரிடம் கொண்டுசேர்க்க முடியும்?


செய்தித்தாள்களின் தலைப்புச்செய்திகளை மிஞ்சுமளவு காற்றின் குரல் ரகசியம் பேசும், கொஞ்சும், குழையும், ஓங்காரமிடும், ரீங்காரமிடும், கேட்க விரும்பும் செவிகளில் எல்லாம். 

கேட்பவர்கள்தான் அதிகமில்லை இங்கு.


தப்பித்தவறி செவி வழி நுழைந்த காற்றின் குரலும் மனித இதயங்களில் புதைந்துபோகும், நாசிகள் கூட அடைபட்டுப்போன உலகில். மனிதர்கள் துளையாத மூங்கிலா என்ன காற்று வழிந்தோட!


உறங்கும் மனிதர்கள் அனிச்சையாய் எழுப்பும் ஒலிகளில் மட்டுமே விடுபடும் காற்று அவ்வப்போது நதிகளின் ஆழத்தில் சன்னமாய் விசும்பும், மலை முகடுகளில் இருந்து ஓவென்று இரைந்து தரைபாயும், கடல் சேரும், கடலின் மடியில் அலையாய் புரளும், அதன் கண்ணீர் தண்ணீர் பரப்பின் மீது விள்ளலாய் மேலேறி விழுமுன் கரைந்துபோகும், மறுபடி காற்றாகும்...


ஒரு நாள் காற்று நீதி பெறும். 

ஒரு நாள் காற்று நீதி தரும் 

திருநாள் நிகழும் சேதி தரும். 

அன்றேனும் காற்றுக்கு உரக்கம் கிட்டுமா?


காற்றுக்கு உருவமில்லை. அதை காணாதோர் எவருமில்லை. இதை நான் உனக்கு எப்படி சொல்வேன்? இந்த கவிதை மட்டும் அதற்கு போதுமா என்ன?


பேரன்புடன்,

பாபுஜி


PC:  Royal Meteorological Society

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...