சரிவுகளி்ல் பச்சை மஞ்சள் சிவப்பு
வெண்மை கருமை கருநீலம் என
வண்ண வண்ணமாய் வண்ணம் சிந்தி
அவ்வப்போது அதிகாலை அந்தி வானிலும்
வண்ணங்கள் தூவி தாவித்தாவி தூவித்தூவி
ஓய்வென்பதே அறியாத தொடர் பயணமாய்
இவள் செல்லுமிடமெல்லாம் வண்ணம் சிந்தி
மூச்சின் காற்றிலும் வண்ணங்கள் வழிய
அதில் திளைத்த தும்பிகளும் வண்ணமற்ற
பூச்சிகளும் பறவைகளும் வண்ணம் பெற...
நினைவிலும் கனவிலும் இவள் சிந்தும்
நிறங்களினூடே பறக்குது கால
காலமாய் காலப்பறவையும் சேர்ந்தே
வாழ்வை மட்டும் ஏன் அவ்விதமாய்?
மழை வெயில் புணர்வில்மட்டுமே வானவில்
என கற்பிக்கப்பட்டதை மட்டும் மனதிலிருத்தி
மழை வெயில் மேனியில் படாமல்
வண்ணங்களை வாழ்வினுள் நுழைய விடாமல்
திரையிட்டு நாம் மறைத்து இருள்
வண்ணத்தில் வாழ்வதல்ல நல வாழ்வு
விடுகதையல்ல இந்த வாழ்க்கை
விடை தேடும் கதையுமல்ல
சுமை சேர்த்து சோர்ந்துபோக.
சற்றே கண் திறந்து பாருங்கள்.
நொடி ஒன்றிலும் பழுதின்றி நமைச்சுற்றி
எத்தனை எத்தனை வானவில் ஜாலம்!
சற்றே கண் திறந்து பாருங்கள்
மாயவண்ணக்காரி காத்திருக்கிறாள் வண்ணங்களற்ற உங்கள் கடிகாரத்தை இட்டு நிரப்பவும் உருட்டிச்செல்லவும்...
(Images may be bound by copyrights)
கருத்துகள்
கருத்துரையிடுக