அன்பே சிவம்.
வாழ்வே தவம்.
உள்ளங்கைக்குள் உயிர்ப்பொதியாய் வாழ்வு,
உறவு, நட்பு, சுற்றம், சூழல், அனைத்தும்.
நொறுங்கப்பற்றின் சிக்கல்.
விரல்பிரித்து விட்டால் 'போச்சு'.
குழந்தைபோலே எனில் இதம்,
வாழும் நாள் வரை.
இது கடினமென்று நினைப்பவர்,
உள்ளங்கை குழந்தையாய்
நமை தாங்கும்
பூமிப்பந்திடம் கற்கலாம்.
பற்றறும்வரை பற்றும் கலை பயில்வோம்.
ஏனெனில்,
அன்பே சிவம், வாழ்தல் தவம்.
கருத்துகள்
கருத்துரையிடுக