முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜென்னிக்கு என்ன ஆச்சி?

ஜென்னிக்கு என்ன ஆச்சி?
அதுக்கப்புறம் ஆலிவருக்கு என்ன ஆச்சி?

லவ் ஸ்டோரி.

ஒரு நாட்டையே, ஒரு தலைமுறையையே காதல்வயப்படவைத்த புத்தகம்.

ஆலிவர், ஐஸ் ஹாக்கி ப்ளேயர். ஒரு கல்லூரியில் விளையாடச்சென்ற இடத்தில் ஜென்னியை பார்க்கிறான். பார்த்தவுடன் பற்றிக்கொள்கிறது பெருநெருப்பு. 

அறிமுகம் செய்து உரையாடி விடைபெறும் முன்பு அடுத்தவாரம் அவளது கல்லூரிக்கு எதிரான போட்டியில் விளையாடப்போவதை கூறி அவளை போட்டி பார்க்க அழைக்கிறான்.

'எந்த'பக்கத்துக்கு ஆடப்போற?' என கலாய்க்கிறாள் ஜென்னி.

தாயிழந்த பெண். இத்தாலிய தந்தை, செல்ல மகள்.

ஆலிவரின் அப்பா வணிக காந்தம், அம்மா இல்லை, அப்பா இருந்தும் இல்லை என்பதாகவே அவனது உறவு.

அவர் எதிர்க்க, அந்த எதிர்ப்பை எதிர்த்து ஜென்னியின் கரம் பற்றுகிறான். தேனாய் இனிக்கும் தனிக்குடித்தனம். 

ஒரு நாள் அவளுக்கு உடல்நலம் குறைகிறது. மருத்துவர் ஆராய்ந்து சொல்வது, கேன்சர்; சொற்ப நாட்களே வாழ விதித்திருக்கிறது.

இந்த இளம் தம்பதி என்ன செய்கிறார்கள்? ஜென்னியின் தந்தை என்ன செய்கிறார்? ஆலிவரின் தந்தை, 'I won't even give you time of the day' என முழங்கியவர் ('சொத்து உறவு எதிலும் பங்கில்லை. ஒட்டுமில்லை, உறவுமில்லை' என்பதாக பொருள்) என்ன செய்கிறார்? ஜென்னியின் விடைபெறும் நாட்களை ஆலிவரும் ஜென்னியும் எப்படி எதிர்கொள்கிறார்கள்?

படித்துதான் பாருங்களேன்? நூற்று சொச்ச பக்கங்களே கொண்ட இந்த புத்தகத்தின் 'எடை' மிகப்பெரிது.

திரைப்படமாக வந்தபோது ஒரு தேசமே அந்த நாயகன் நாயகி மேல் காதலாச்சி. Bach இன் Symphony இசை அங்கங்கே ஒலிக்க, அந்தப்படம் 'வேற லெவலில்' கொண்டாடப்பட்டது.

Erich Segal, இந்தப்புத்தகத்தின் ஆசிரியர், ஜென்னி இல்லாத ஆலிவரின் உலகை பற்றி எழுதிய புத்தகம், இன்னொரு நாளில் வாசிப்போம் :-)

Love means never ever having to say You are Sorry; முயற்சியாவது செய்வோம், எவ்வளவு கடினமானாலும், எத்தனை காயங்கள் பட்டாலும், because, our life is worth living every second for that special "some one", period!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...