முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிழல் யுத்தம்


பெரிதினும் பெரிது கேள்!

கேட்டோம், கேட்கிறோம், கேட்போம்!!


"கனிம வளங்கள் கொள்ளை!"

"விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிகிறது!"

"நீர்நிலைகள் காணாமல் போகின்றன!"

"பல்லாயிரம் மரம் பணால்!"

"பல்லாயிரம் கோடி ஊழல்!"

"வளர்ச்சின்னா இதெல்லாம் தாங்கிதான் ஆகணும்."

"அழிவு இல்லாம வளர்ச்சி இல்லையே!"

"யாருதான் ஊழல் பண்ணல?"

"அவன் தின்னுட்டு கொஞ்சமாவது செய்றான்ல!"

"நாடு சரியில்ல சார். சிஸ்டமே கரப்ட். நாடு உருப்படாது."

"ஓட்டுக்கு ரெண்டாயிரம்னு பேசுனானுவோ, கையில வாங்கிட்டுதான் குத்துவம்."

"இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்."



ஹலோ!  TAKE A BREAK!!



உலகின் மிகப்பெரிய உணவுக்கிண்ணமாக இருந்த நாடு, நம் நுகர்வு மோகத்தால், உலகின் மிகப்பெரிய சந்தையாகிக்கொண்டிருப்பது உங்களது சிந்தனைக்கு எட்டவே இல்லையா!

ஒவ்வொரு எட்டு வழிச்சாலையும், ஒவ்வொரு துறைமுகமும், ஒவ்வொரு உலக வணிக ஆலையும் வரும்போதெல்லாம் கூப்பாடு போட்டுவிட்டு கோலாவும் பர்கரும், வாஷிங்டன் ஆப்பிள், ஏடன் தோட்டத்து மாங்கனி என நாம் தேடித்தேடி துகரும் வரை, நுகர்தலை மட்டுமே தேடும் வரை நம் வளங்கள் சுரண்டப்பட்டு ஏராளமான நோயூக்கிகள் சேர்க்கப்பட்டு, மூச்சு முட்ட ப்ளாஸ்டிக் பைகளில் அடைபட்டு, தமக்கே திரும்ப வரும். 

இந்த சாலைகள், துறைமுகங்கள், ஆலைகள் எல்லாம் நம் நுகர்வை, உலகெங்குமுள்ள நம் போன்றோரின் நுகர்வு விருப்பத்தை விரைந்து நிறைவேற்றவே, மலிவாய் நிறைவேற்றவே!

பெரிதினும் பெரிது கேட்போம், 
அதையும் விரைந்து பெறுவோம்,
நுகர்வின் மிச்சங்களை விசிறியடிப்போம், 
நோய்க்கூடாரமாக மாறுவோம்.
நம்மோடு நாம் நடத்தும்
நிழல் யுத்தத்தில் களைத்து
உறுப்புகள் நோக வீழ்வோம்.
கவலை வேண்டாம்!
நாம் அனுமதித்த ஆலைகள்/சாலைகள்
விரைவாய் நம் உயிர்காக்கும்!
மீண்டும் நம்மிடையில்
நுகர்வு கொண்டு சேர்க்கும்!

இத்தனைக்கும் இடையில், நம் வாழ்வு மாற்றமின்றி தொடரும்!

"கனிம வளங்கள் கொள்ளை!"

"விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிகிறது!"

"நீர்நிலைகள் காணாமல் போகின்றன!"

"பல்லாயிரம் மரம் பணால்!"

"பல்லாயிரம் கோடி ஊழல்!"

"வளர்ச்சின்னா இதெல்லாம் தாங்கிதான் ஆகணும்."

"அழிவு இல்லாம வளர்ச்சி இல்லையே!"

"யாருதான் ஊழல் பண்ணல?"

"அவன் தின்னுட்டு கொஞ்சமாவது செய்றான்ல!"

"நாடு சரியில்ல சார். சிஸ்டமே கரப்ட். நாடு உருப்படாது."

"ஓட்டுக்கு ரெண்டாயிரம்னு பேசுனானுவோ, கையில வாங்கிட்டுதான் குத்துவம்."

"இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்."
"

தீதும் நன்றும்... நமக்கு நாமே!

பின் குறிப்பு:

1.

கடவுளுடன் நேரடித்தொடர்பில் இருந்துகொண்டு, 'வெறுமையான' நுகர்வு வாழ்விலிருந்து நம்மை மீட்பதாக நம்பிக்கை தரும் ஆன்மீகர்களும் அழுத்தம் தாளாது தற்கொலை செய்துகொள்ளும் சூழலில்... பாத்து சூதானமா இருந்துக்குங்க!

2.

எஞ்சியிருக்கும் ஒரு இந்திய கானகத்தில் 'நேர்படப்பேசு' நிகழ்ச்சியில், 'அவங்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா????' என யானைகள் கட்சித்தலைவர் முழக்கம். இன்று மாலை 'வளர்ச்சி' சேனலில் ஒளிபரப்பு. காணத்தவறாதீர்!!!!




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...