காக்கும் தொழிலை செய்பவன் அழிக்கிறான், அழிக்கும் தொழில் செய்பவன் காக்கிறான்! என்னதான் நடக்குது நாட்டுல???
குஷ்பூவுக்கு கோயில் கட்டியவனும், நட்சத்திர ஹோட்டலில் வாலெட் பார்க்கிங் வேலை செய்து (அந்த வேலையையும்) இழந்தவனும், ஐடி நிறுவனத்தில் காதலிக்கச்சொல்லி மிரட்டிய பெண்ணால் மணிக்கட்டு நரம்பு வெட்டுப்பட்டு(!) வேலை போனவனும் வேலை தேடி சேருமிடம் 'கிட்நாப்பிங்' க்கு ஆங்கில ஸ்பெல்லிங் கூட ஒழுங்காய் தெரியாத, நான்கு கட்டளைகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஒரு 'நிறுவனம்'.
ப்ராக்டிகலான டீம் லீடருடன் ப்ராக்டிகலான(!) ப்ராஜக்டுகள் / விக்டிம்களுடன் நன்கு வளர்ந்து வரும் நிறுவனம் ஓரிடத்தில் சறுக்குகிறது.
பிழைக்கத்தெரியாத (i.e. நேர்மையான) அமைச்சரின் மகனுக்கு பல பிசினஸ் தொடங்க அவசரமாய் முதலீடு வேண்டி அம்மா வழியே விண்ணப்பித்து நேர்மை அமைச்ச அப்பா மேலும் அவமானப்படுத்த 'தன்னைத்தானே' கடத்த ஒரு கும்பலுடன் ப்ளான் போட...
இந்த அமைச்சரின் 'நேர்மையினால்' அவமானப்பட்ட பிசினஸ் புள்ளி ஒருவர் அமைச்சரை பழிவாங்க அமைச்சர் மகனை கடத்தி தருமாறு 'நிறுவனத்தை' அணுக...
முதல் கும்பலால் 'கடத்தப்பட்ட' மகனை 'நிறுவன' கும்பல் தூக்கிப்போக, அவர்களையும் தன் ப்ளானில் இணைத்து அமைச்சர் மகன் போன் வழியே அம்மாவை மேனிபுலேட் செய்து தலைவரே கட்சி நிதியிலிருந்து பணம் தந்ததால் ரிலீஸ் ஆகி வந்து, நிறுவனம் எதிர்பார்க்காத பலப்பல திருப்பங்களுக்கு பின் நேர்மை அமைச்சருக்கு பதிலாய் தலைவரிடம் சீட்டு பெற்று தேர்தலில் ஜெயிக்க...
சூது கவ்வியதே!!!!!
என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்ட் பெயர் ப்ரம்மா!
(செடி வளர்த்து விற்கும்) நர்சரியின் பெயர் 'சொக்கன்' நர்சரி :-)
படம் நெடுக முரண்குறியீடுகள், இருட்டு அறையில் சைகோவிடம் முரட்டு குத்து வாங்கி, அலறி அலறி ஒரு கட்டத்தில் அதையும் என்ஜாய் பண்ணும் கிட்நேப்பிங் கும்பல்!
அந்த க்ளைமாக்ஸ்!!
இந்தப்படம் உண்டாக்கிய அதிர்வுகள் இன்று புதிதாய் பார்ப்பவரையும் கவ்விக்கொள்ளும்.
விஜய் சேதுபதி! தமிழில் எத்தனை சூப்பர் நடிகர்கள் இருந்தாலும் அவர்களாலெல்லாம் இட்டு நிரப்ப முடியாத புகழிடம் ஒன்று எம். கே. தியாகராஜ பாகவதரின் இடம், இன்னும் நிரப்பப்படாமலே இருக்கிறது. காலமும் நேரமும் ஒத்துழைத்தால் சூது கவ்விய அந்த இடத்தை இவர் இட்டு நிரப்பலாம்!
ஒரு மழை நாளில், நல்ல நட்புகளோடு, மிதமான சிற்றுண்டியோடு செட்டில் ஆகி ரசித்து ரசித்து பார்க்கவேண்டிய படம்!



2013 ல் வந்த படத்துக்கு 2018 ல் ஒரு விமர்சனம்.அந்த பையன் அதற்கு அப்புறம் சில படங்கள் எடுத்து விட்டான் ஆனால் சூது கவ்வும் பார்த்து விட்டு அவனது மற்ற படங்களை பார்க்க பிடிக்கவில்லை.
பதிலளிநீக்கு