முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீயெனக்கு வேணுமடி தங்கமே தங்கம், தங்கம்!


நீயெனக்கு வேணுமடி தங்கமே தங்கம், தங்கம்!

ஆழக்குழி தோண்டி ஆளு, வண்டி, வாகனம் உள்ள அனுப்பி, தோண்டி எடுத்து, தரைக்கு கொண்டு வந்து, சுத்தம் பண்ணி உருக்கி பாளம் பாளமா வார்த்து எடுத்து. பல ஊருக்கு துப்பாக்கி பாதுகாப்புல பத்திரமா அனுப்பி, சின்ன துண்டுகளாக்கி, பல ஆளுங்க பல வேல செஞ்சி விதம் விதமா உருவத்த மாத்தி, கடை கடையா கடை விரிச்சி...

ஓடி ஓடி உழச்சத பக்குவமா அங்க குடுத்து சிறுகச்சிறுக சேத்து... சேத்ததை திருடனுக்கு பயந்து கடுங்காவல் கொண்ட சொரங்கத்தில அரசு அனுமதியோட பதுக்கி வப்பமே, அதுக்காகவா இம்புட்டு மெனக்கெடலு? இம்புட்டு செலவு???!!!!!

யாரையுமே நம்பமுடியாம போனாலும், யாரு கைவிட்டாலும் தங்கம் வச்சிருக்கவன் தப்பிச்சுக்குவான்னு நம்பிக்கை...

இந்த நம்பிக்கை நமக்கு இருக்கிற மாதிரி அரசாங்கத்துக்கும் இருக்குங்க!

ரொம்ப நெருக்கடியான கட்டத்தில நாட்டு மக்கள்கிட்டேந்து தங்கத்த அரசாங்கமே பிடுங்கறது காலகாலமா நடக்குதுன்னு நமக்கு தெரியாதுங்க!

ரோமாபுரில ஒரு ராசா இருந்தாராம். கஜானா காலின்னு அமைச்சருங்க சொல்ல, குருதைல ஏறி கெளம்பி நாட்டிலயே பெரிய்ய்ய கோயிலாண்ட போனாராம். 'சாமிக்கு எதுக்கு இவ்ளோ கோல்டு? ரிமூவு எவ்ரிதிங்கு அண்டு ப்ரிங்கு பேக்கு' ன்னு புடிங்கிட்டு போய்ட்டாராம்.

அதுவும் பத்தாம போவ, அவரு மக்களுக்கு குடுக்கிற தங்க காசுலயே தங்கத்த சொரண்டுனாராம். மக்கள் அந்த காசாலயே வரிப்பணம் கட்டச்சொல்ல, நிதியமைச்சரு தலைல துண்ட போட்டுகினு ஓஓஓஓஓஓன்னு அளுதாராம்!

பின்ன ஒரு காலத்துல அரசுக்கு பயந்து கதவு, நிலப்படிக்குள்ளல்லாம் சைனாக்காரனுங்கோ தங்கத்த ஒளிச்சு வச்சாங்கோ, ஆனாலும் மாட்டிகிட்டாங்கோ!

'இது..... ரொம்ப காலத்துக்கு முன்னேதான நடந்தது, இப்ப இல்லயே இல்லயே!'ன்னு கூவாதீங்கோ! மேல படிங்கோ!

1929 ல அமெரிக்க பொருளாதாரம் அடியோட சரிஞ்சி பெரும்பஞ்ச காலம்... வீட்டுக்கு வீடு அரசு புகுந்து 'தலைக்கு 180 கிராமு. அதுக்கு மேல ஒரு குந்துமணி பதுக்குனாலும் கொண்டேபுடுவன் படவா' என மிரட்டி எக்சஸ் தங்கத்தை புடிங்கிட்டு போனாங்கோ!!!!

1980கள்ல தென்னமெரிக்க நாடுகள்ல...

"விடுங்க பாசு, நாங்க என்ன கணக்கு காட்டியா தங்கம் வச்சிருக்கம்? நாங்கள்லாம் யாரூஊஊஊஊ?!!!" ங்கிறீங்களா!

சாரி பாசு, இந்தப்பதிவு ஒங்களுக்கில்லீங்க!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...