முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கங்காணி! உஷார்!!!!


ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது!

உலகெங்கும் இன்றைய கவலை அரசுகள் மக்களை (எல்லை தாண்டியும்) கண்காணிப்பது. 

அரசு நம் தனிமனித சுதந்திர செயல்களை (privacy) கண்காணிப்பது சரியா தவறா என்ற விவாதங்கள் நாட்டுக்கு நாடு அனல் பறக்கிறது.

டி வி வரும்முன் குழந்தைகள் வாழ்வில் குழப்பமில்லை. மக்களும் நல்லவராய்.

டி வி வந்தபின் பெரியவர் தணிக்கையின்பின்பே சிறுவர் பார்க்கலாம் என்பதாய் ஏற்பாடு. டெக்னாலஜி வளர வளர குழந்தைகள் மற்றும் சுற்றம் மீதான நம் கண்காணிப்பும் அவ்வாறே.

இன்று நம்மில் எத்தனை பேர் சமுதாயத்தை / social network எனப்படும் நிகர் சமுதாயத்தை நம்பி நம் குழந்தைகளை இவற்றில் தனியே உலவ விடுவோம்?

நமக்கு நம் அளவில், நம் சமுதாய அளவில் கண்காணிப்பு அவசியமாகிறது. அரசுகளுக்கும் அவ்வாறே ஆனால் அவற்றின் எல்லை பெரிது.

The biggest difference is, பெற்றோரின் கண்காணிப்பு அன்பு, அக்கறை, அறம் சார்ந்தது. அரசுகள் அவ்வாறல்ல :-)

தொழில்நுட்ப வளர்ச்சி அவசியமென்றால் 'ஒப்பனை அறையில் ரகசிய கேமராவை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பமும், பதிவிடுவதை தடுக்கும் தொழில்நுட்பமும்' அவசியம்தான்.

கங்காணி யார்? எதற்காக? என்ற கேள்வி இன்று உலகம் முழுதும் விடையின்றி அலைகிறது.

ராவணனுக்கு பத்து தலை; ராமன் வேலை சுலபமாச்சு.

இங்கு வெட்டினால் அங்கு முளைக்கும்.ய, அங்கு வெட்டினால் வேறெங்கோ முளைக்கும் அரசுகளை எத்தனை பேர் எப்படி...?

எதிர்காலத்திற்கு நம்மை விரைவாய் இட்டுச்செல்ல காடு கழனி அழித்து ஆலைகள் சாலைகள் செய்து உணவு பஞ்சமாகிப்போய் இந்த சாலைகள் வழியே வெளிநாட்டு தானியங்கள் விரைந்து ஆலை சேர்ந்து, ப்ளாஸ்டிக் பைகளில் அடைபட்டு, சுருங்கிய வயிறை சுமக்கும் கைகளில் விரைந்து சேர்ந்து பசியாற்றி... "பார்! எதிர்கால பஞ்சம் தீர்ப்பதற்காகவே நாம் அன்றே தீட்டிய திட்டங்களால்தான் இது சாத்தியமானது" என அப்போது ஆளும் அரசுகள் மார்தட்டுவதற்கும், நம் தினசரி வாழ்வு கண்காணிக்கப்படுவதற்கும் பெரிதாய் வித்தியாசமில்லை.

ஏற்கனவே தனியார் கங்காணிகள் நம் அசைவுகளை கண்காணிக்கின்றனர். அரசின் திட்டம் அவர்களுடனான தொழில்நுட்ப யுத்தம். யுத்தமென்றால் சேனை நாமே...

'இது யுத்தமல்ல. எதிர்கால தொழில்நுட்பங்களை சோதனை செய்து பார்க்கிறோம். அவ்வளவே' என அவர்கள் சொல்லலாம். சோதனை சாலை யாருடையதாய் இருந்தால் என்ன எலிகளுக்கு? எலிகளும் நாமே!

அடுத்தமுறை 'நான் இப்போது ஆஸ்திரேலியாவில் கங்காருகளுடன் குதித்துக்கொண்டிருக்கிறேன்' என நிகர் உலகில் லைவ் / ஸ்டேட்டஸ் போட்ட அடுத்த நொடியில் உங்கள் இந்திய வீட்டின் முகவரி மற்றும் அது பூட்டிக்கிடக்கிறது என்ற தகவல் ஒரு திருடனுக்கு யார் மூலமோ அனுப்பப்படலாம். நீங்கள் ஊர் / வீடு திரும்புவதற்குள் உங்கள் வீடு துடைத்து எடுக்கப்படலாம்!!

தீதும் நன்றும் பிறர்தர வாரா!

கருத்துகள்

  1. தாெ ழில் நு.ட்..ப்...ப....ம் நீண்ட நெடும் பயணம் செல்ல இயற்கை ஒருபாேதும் அனுமதிக்காது.பரிணாம வளர்ச்சியில் அசுர வளர்ச்சி ஏற்படாமல் தடுக்க 'டெலாேமர்' களையும் 'டெலாேமரேஸ்' களையும் படைத்ததைப் பாேல மனிதன் இயற்கையின் வரம்பை மீறி அசுரனாக மாறிவிடாமல் இருக்க ஒரு ஏற்பாடு செய்ய மறந்திருக்காது:பூரணமாக நம்புவாேம்! நமது பங்கையும் ஆற்றுவாேம்!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...