#onemoresong
ஏழைக்குப்பத்து மீனவ இளைஞன். மீன்பிடி பழகியவன் படிப்பு பழகவில்லை.
ஊருக்கு படிப்பு சொல்லித்தர வந்த பவழமல்லித்தோட்டத்திடம் மனசை பறிகொடுக்கிறான். மீட்பனிடம் ஒண்டிக்கொள்ளும் ஆட்டுக்குட்டியாய் அவன் மனது...
மீனும் மல்லியப்பூவாய் மணக்க காதலா இல்லையா என இருவருமே குழம்பி தெளிந்தும் தெளியாத நிலையில் வழிந்து ஓடும் பாடல்:
கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்
கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல இன்ப துன்பம் யாரால
பறக்கும் திசையேது இந்த பறவை அறியாது
உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது
பாறையிலே பூமொளைச்சு பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
-----
பொத்தி வச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தான தெம்பு இல்ல... !!
பறக்கும் திசையேது இந்த பறவை அறியாது
உறவோ தெரியாது... !!
பாடல் வரிகள் சூப்பர். இசையும் சூப்பர். காட்சிப்படுத்துதல்ல என்ன செஞ்சிட முடியும்?
செய்தார்!
மீனவனின் இயல்பில் அதீத கற்பனை. அதன் வெளிப்பாடாய் அவன் பல்லை விளக்காமல் விளக்கி வாய் கொப்பளிக்காமல் கொப்பளிக்க, அவளது வீட்டில் உணவு மேசையில் குடும்பமும் அவளை விரும்பும் இன்னொருவனும் காத்திருக்க, நிதானம் பழகும் ஜெனிஃபர் டீச்சர், அடுக்களையில் பித்த நிலையில். அவர்கள் குரல்கள் கேட்காத மோனவெளியில் அவள்!
#onemoresong

கருத்துகள்
கருத்துரையிடுக