இங்க இருந்த மலைய யாரோ ஆட்டைய போட்டுட்டாங்க ஏட்டய்யா!!!!!!"
'என்ன இது சின்னப்புள்ளத்தனமா?!'
"நெசம்மா ஏட்டய்யா!!!"
'ஆஹா...கிளம்பிட்டாய்ங்களே!!! ஏம்ப்பா அதுக்கு பதிலாதான் இந்த மலைய வச்சிருக்காய்ங்களே...'
"ஏட்டயா, இது வேற ஏட்டயா!"
'அப்புடீங்கிற?....
"ஏட்டயா!!!! அது வேற மல இது வேற மல ஏட்டயா!!!!!"
'அட எடுபட்ட பயலே! கூட்டிக்கழிச்சி பாரு, கணக்கு சரியாதான் வருது. அதான் இந்த மல வந்திடுச்சில்ல. போயி சோலியப்பாரு....போ போ!'
-------
"ஏட்டயா!!!!!!!
ஆத்தக்காணும் ஏட்டயா!!!!!"
'எவன்டாவன்!!!!! காலங்காத்தால ஸ்டேசன தொறக்கறதுக்குள்ள மலயக்காணும், ஆத்தக்காணும்னுட்டு!
ஓ நீஈஈஈயா... அது வந்து... ஒரே பாதயில ஓடி ஓடி அலுப்பாயி... வேற எங்கனா ஓடிருக்கும்... வந்துரும்.
கம்ப்ளெய்ண்டெல்லாம் தேவயில்ல. அது திரும்பி வந்ததும் நானே சொல்லியனுப்பறேன். பேசாம போவியா!!!!'




கருத்துகள்
கருத்துரையிடுக