முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பட்டுப்புடவைக்கு எத்தனை கால்?!


கழுதை மிட்டாய் பதிவில் பாம்புபோல் தோல் உறித்துக்கொள்ளும் கழுதையை கற்பனையாய் எழுதியிருந்தேன்.

அது நனவாகும் நாள் தொலைவில் இல்லை போலிருக்கிறது!


பட்டுப்புழு, காலங்காலமாய் பட்டு நூலிழை செய்துகொண்டிருக்கிறது.

எட்டுக்கால் பூச்சி காலங்காலமாய் வலைப்பொறி பின்னி வயிறு வளர்க்கிறது.

'எல்லாம் ஒழுங்காத்தான போய்க்கிட்டிருக்கு' என்றுதான் இருந்தேன், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அந்த அறிவியல் அறிக்கை வரும்வரை...

'எட்டுக்கால் பூச்சியின் எச்சில் இழை எஃகை விட உறுதியானது, ரப்பரை விட அதிக  'சுருங்கி விரியும்' தன்மை (elasticity) கொண்டது. அதாவது அந்த இழையளவு தடிமனுள்ள எஃகு/ரப்பர் இழையுடன் ஒப்புநோக்கும்போது)'.

அடுத்த நாட்களில் நான் நண்பர்களிடம் வேடிக்கையாய் 'அடுத்த பெரிய factory இந்த yarn பண்ணத்தான். என்ன...சங்கு ஊதி factory gate திறந்ததும் வரிசையா spidersதான் வெளில போகும், நொந்து நூலாய்ப்போய் :-)' என்று சொன்னதும், இதையே கார்ட்டூனாய் வரைய முயன்றதும் இன்றும் நினைவில் உள்ளது.

சரி, நிகழ்காலத்திற்கு வருவோம். இந்த செய்தியை அறிவியல் என்ன செய்ததென்று அறியும் ஆவலில் நிகர் உலக வலையை வீசினால் சிக்கியதென்னவோ பட்டுப்புழுக்கள், புற ஊதா வெளிச்சத்தில் ஒளிரும் கால்களுடன்!

உலகெங்கிலுமுள்ள அ(ழி)றிவியலாளர்கள் பல்வேறு சோதனைகள் செய்து பார்த்து இப்போது 'வெற்றியிழையை' எட்டிப்பறிக்கும் தூரத்துக்கு வந்துவிட்டனர், அப்பாவிப்பட்டுப்புழு துணையுடன்...
ஆரம்பத்தில் ஆய்வுச்சாலையில் கூட்டமாய் 8கால் பூச்சி வளர்த்து இழை எடுக்க முயன்றால், 'எனக்கு கூட்டம்னாலே பிடிக்காது. அதனால மிச்ச எல்ல்லாரையும் சாப்ப்ட்டேன்' என ஒற்றை 8கால் பூச்சி மட்டுமே ஏப்பம் விட்டபடி இழை பின்னியதாம்.

'8காலனின் மரபணுவை புடிக்குறோம், கத்திரிக்கோல்ல லைட்டா நறுக்குறோம். சமத்தா வேலை செய்ற அப்ரெண்டிசை புடிக்குறோம், ஒட்றோம், இழை பிண்றோம், பிண்றோம், பணம் பண்றோம்' என மிஷன் மோடில் கையில் கத்தரிக்கோலுடன் திரிந்தவர்களின் கையில் வசமாய் சிக்கியது பட்டுப்புழு...



சில பல ஆபரேஷன்களுக்குப்பிறகு இன்று உலகின் சில பகுதிகளில் வணிக நிறுவனங்களின் லேப்களில் இந்த அப்பிராணிகள் Spider Silk ஐ உமிழ்ந்துகொண்டிருக்கின்றன, நீல நிற ஒளி உமிழும் கால்களுடன் (ஆபரேஷன்னா...சைடு effect லாம் சகஜமப்பா!). போர் என்ற பெரு வணிகச சந்தையில் இந்த இழையின் பயன்பாடுகள் ஏராளம், எளிமையாய் மலிவாய்...உயிர் காக்கும் ஆடைகளில் இருந்து உயிர் எடுக்கும் ஆயுதங்கள் வரை...

'ஆபரேஷன் சக்சஸ்!' என சந்தைப்படுத்தலை நோக்கிய ஓட்டத்தில் முன்னிலை வகிக்கும் ஒரு சிறு நிறுவனத்திடம் அமெரிக்க இராணுவம் 100 மில்லியன் டாலர்களுக்கு purchase agreement செய்துள்ளதாம்.

பட்டுப்புழுவெல்லாம் எப்போதும் போல மல்பெரி இழைகளை தின்று ஆனால் Spider Silk உமிழ ஆரம்பித்தால், பட்டுப்புடவைக்கு என்ன ஆகும் என்பதை தாண்டி உயிர்ச்சூழல் பாதிப்புகள், உணவுச்சங்கிலி பாதிப்புகள் பற்றி யாராவது கவலைப்படுவாங்களா என்ன பாஸ்!

ஒரு நாள் வரும், ஒளி உமிழும் கால்களுடன் பறந்துவரும் கொசுக்கூட்டம் ஒன்று நம்மை கடிக்கும். அதன்பின்னால் நாமும் எச்சில் வழியே இழை உமிழத்தொடங்குவோம். அதற்கு என்ன பெயர் வைப்பதென்று அப்போதும் பட்டிமன்றம் நடத்துவோம், நாம யாரு!!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்