முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ராங் நம்பர் but ரைட் நம்பர்!

வருடம் 1977. முந்தைய வருடம் 14 படங்கள். இந்த வருடம் 18 படங்கள்! வயது 22 மட்டுமே! இரவு பகலாய் உழைக்கும் தாகம், நடிப்பின்மீது மாளாத காதல், எந்த பாத்திரமானாலும் குருநாதர் இயக்கத்தில் நடிக்க தயார், தனக்கு ஸ்கோப்பே இல்லாத கதையானாலும் பரவாயில்லை! குருநாதர் பார்த்தார், 'இவனை ஒரு வழி பண்ணிடலாம்!' என ஒரு ரோல் தந்தார். திருமண வாழ்வை சில வருடங்கள் சுகித்தபின்னும், மனைவி மீது மாறாத காதல் இருந்தும், கண்ணில் படும் பெண்களையெல்லாம் மயக்க எந்த எல்லையையும் மீறக்கூடிய, உண்மை அறிந்த மனைவியிடம்கூட தன் குணம் மாறாமலே வசியத்தை தொடரக்கூடிய ஒரு ரோல். காமம் மட்டுமே உணர்வாய் சுற்றும் இவரது வலையில் சிக்குபவர் எந்தப்பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை, அந்தப்பெண்களே மனம் மாறி வேறு திருமண பந்தத்தில் இருந்தாலும்கூட! இவரிடம் வேலை செய்யும் குமாஸ்தா, ஒரு கட்டத்தில் இவரது பாவச்சுமைகளை சுமக்கத்தொடங்கி, நோயாளியாகி, வாழ்வு வெறுத்து, கோவில்களில் உபந்யாசம் செய்வார். அங்கும் துரத்திச்சென்ற இவரை கண்டதுமே அவருக்கு மனக்கொதிப்பு அதிகமாகி கன்னாபின்னாவென திட்டி மயங்கி சாய்வார். மன்மதனாய் வலம்

இவந்தான்யா போராளி!!

இரண்டாம் உலகப்போர் பரவிக்கொண்டிருந்த நேரம்.  ஆண்டு 1941. க்ரீஸ் நாடு, உலக நாகரீகத்தின் தொட்டில் என மேற்கத்திய தொல்லியலாளர்கள் கொண்டாடிய நாடு, ஹிட்லரின் நாஜி படையிடனரிடம் வீழ்ந்தது.  நாடு ஆக்கிரமிக்கப்பட்டது.   தனது வெற்றியை உலகிற்கு உரக்க தெரிவிக்க நாஜி படையினர் தேர்ந்தெடுத்தது அக்ரோபோலிஸ் எனப்படும் (அந்நாட்டின் தொன்மையின் சின்னமாய் நிற்கும்) ஒரு கட்டிடம். Akropolis? கிரேக்க நாகரிகத்தின் உச்சம். ஏதென்ஸ் நகரின் மிக உயர்ந்த குன்றின் உச்சியில் மூன்று ஹெக்டேர் நிலத்தில் நிறுவப்பட்ட உன்னதமான கோட்டை போன்ற வசிப்பிடம். பண்டைய கட்டிட கலைகளின் உச்சம்! மிச்சத்துக்கு கூகுள் செய்வீர் :-) அதன் உச்சியில் அது வரை பறந்துகொண்டிருந்த கிரேக்க கொடியை இறக்கி நாஜி சின்னமான ஸ்வஸ்திகா கொடியை ஏற்ற அவர்கள் முடிவு செய்து, அந்த உயர்ந்த கட்டிடத்தின் உச்சிக்கு ஒரு கிரேக்க வீரனை அனுப்புகின்றனர், 'உனது தேசியக்கொடியை இறக்கிவிட்டு, கழற்றிவிட்டு, அதே கம்பத்தில் எங்களது கொடியை பறக்கவிடு' என்ற உத்தரவுடன். ஏறியவன் இறக்கினான் தனது தேசியக்கொடியை, கழற்றினான்... ஸ்வஸ்திகா கொடிய

உரசிட்டு, எதிர்த்ததும் தங்கச்சி மாதிரின்னான்...

இன்றைய ஜனதா ஊரடங்கின் பகல் பொழுது ருத்ராவோடு கழிந்தது... என்று முடிக்கும் முன்பே மஞ்சுவும், அருணும், தியாகுவும் போட்டி போட்டுக்கொண்டு சண்டை பிடித்தனர். இவர்களை எனக்கு சில வருடங்களாய் தெரியும். பல நாள் பழகிய நட்பு போல ஏதோ ஒரு உணர்வு. வாருங்கள், இவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். அவர்களது நட்பு உங்களையும் தொற்றட்டும்! தியாகு, ஒரு விளம்பர நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர். பெண் பித்தன். பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு அடங்கியே, போகப்பொருளாகவே இருக்கவேண்டும் என்று ஆணித்தரமாய் நம்புகிறவன். அதன்படியே வாழ்கிறவன். அருண், அவனது நெருங்கிய நண்பன். விளம்பர பட டைரக்டர். பெண்கள் பற்றிய டாகுமெண்டரி படமும் எடுப்பவன். புரட்சிகரமான கருத்துகளை வாழ்வாகவே மாற்றிக்கொண்டவன். பெண்களை சக உயிர்களாய், உயர்வாய் பார்ப்பவன். தியாகுவின் பார்வையில் அவன் சாமி படங்கள் மட்டுமே பார்க்கும் 'ர்ர்ரொம்ப ஜென்டில்மேன்'. மஞ்சு, தியாகுவின் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு புதுமைப்பெண். தளைகள் இன்றி, தனக்கான உலகம் என்கிற பார்வையோடு வளையவருபவள்.  தியாகு அவளை அருணுக்கு உதவி செய்ய பணிக்கிறான்

ஒன்றென்பது யாதெனின்...

கையில் விரிந்திருக்கும் புத்தக பக்கங்களின்வழி என்னை வாசித்துக்கொண்டிருக்கிறார் ஓஷோ. உயிர்சுமந்து உள்நுழைந்து  அழுக்காய் வெளியேறும் இடைவெளியில் என்னை வாசிக்குது மூச்சுக்காற்று. சுற்றியிருக்கும் மரங்களும் பெயர்தெரியா உயிரனைத்தும் ஐம்பூதங்களும் என்னை  இடையறாது வாசிக்க நானெங்கே தனியனாவேன்? எங்கோ பால்வெளியில் காலம் துவங்குமுன் ஒரு பெருநிகழ்வில் சிதறிய சிறுபுள்ளியின் துகளனைத்தும் ஒன்றுதானே? ஆமெனில் ஒன்றென்பது  தனியா இல்லையா? காலம் விடைதரும்...

காதலை காதலிப்போம், அப்படியே ரூமியையும்!

உனக்கும் எனக்குமான இடைவெளியில் நாம் இதுவரை புதைத்த சொற்கள் மீது இன்று மௌனம் வளர்ந்து நிற்கிறது அடர்பச்சையாய். பச்சை பாசியாகி புதிய சொற்களை இலக்கு சேரவிடாது வழுக்கி விழவைத்து தன்னுள் புதைத்துக்கொள்கிறது, புதைந்தவை மீதும் மௌனம் வளர்கிறது. இலக்கு தைக்காத அம்புகள் உயிர் காக்கும். இலக்கு தைக்கா சொற்கள் உறவு காக்கும். மௌன வெளியை அனுபவக்காற்று அவ்வப்போது கலைத்துப்போட்டு ஒற்றையடிப்பாதை காட்டும். அதையும் நாம் சொற்கள் இட்டு நிரப்ப, அவையும் அங்கு புதைந்துபோய் பச்சை கட்டி நிற்கும் மௌனமாய். ஒரு நாள் இப்படி ஒரு பாதை காட்டியபின் காற்று நிற்கக்கூடும், அன்று நாம் சொற்களேதும் வீசாமல் ஒருவரை ஒருவர் நோக்கி நடக்கக்கூடும். ஏதாவது ஒரு புள்ளியில் சந்திக்கக்கூடும். அந்தப்புள்ளியில் இருந்து நம் இணைபயணம் மீண்டும் தொடங்கக்கூடும். அது நிகழும் தருணம் முதல் மௌனமாய் நடப்போம் சொற்களேதுமின்றி. சொற்களற்ற இடங்களில் பாசிகள் படராது, வழுக்கலும் இராது. சொற்களால் உரமேறாத பழைய பச்சை தானே கறைந்துபோய் புதியதொரு நிலப்பரப்பு நம் கண்முன் விரியக்கூடும். அங்கு நாம் அன்பை விதைப்போம், அ

கான்ஃபிடன்ஸ்!

கோல்கேட் வேதசக்திக்கு மாறியாச்சே! சில ஆண்டுகள் முன் என் பொறியியல் கல்லூரி மாணவர்க்காக முன்னாள் மாணவர்கள் + க.நிர்வாகம் சேர்ந்து நடத்திய ஒரு கலந்துரையாடலில் பழைய மாணவனாய் கலந்துகொண்டேன். மாணவர்களை ஊக்குவிக்க, எதிர்காலத்திற்கு வழிகாட்ட என சில தொழில்முனைவோரும் பெறுநிறுவனங்களின் மேலாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். மாணவர்கள் எளிதாய் வேலைவாய்ப்பு பெற என்னவெல்லாம் செய்யவேண்டும்? என்ற மையப்புள்ளியின் மீது நடந்த உரையாடல். அனுபவப்பகிர்தல்கள், வினாக்களுக்கு தெளிவுதரும் விடைகள் என நகர்ந்த நிகழ்வின் இறுதியில் ஒரு இறுதி ஆண்டு மாணவன் தயங்கி எழுந்து, கையில் மைக்கை வைத்துக்கொண்டு ஒரு வினா எழுப்பினான்; 'மூன்றாமாண்டு, நான்காமாண்டில் மட்டுமே எங்களுக்கு வழிகாட்டுதல்கள் கிடைக்கின்றன. அது போதாது. குறிப்பாய் ஆங்கிலமொழி ஆளுமையின் அவசியம். தமிழ்மொழியில் பள்ளி கற்ற என்போன்றோர் தடுமாறுகிறோமே?' தலைமை வகித்தவர், 'கவலை வேண்டாம். நம் கல்லூரி நூலகத்தில் ஆங்கில சிறார்கதை நூல்கள் வைத்துள்ளோம். படிக்க முயலலாம், தேவைப்பட்டால் கல்லூரி முடிந்த பொழுதுகளில் தனி வகுப்புகள் நடத்தலாம்...'

பூமித்திருவிழாவில் தொலைந்துபோன குழந்தைகள்

நம்மை வீட்டுக்கு இட்டுச்செல்லும் சாலைகள் வேறெங்கும் செல்வதில்லை. கிணற்றில் நீர்வாளி நகர்த்தும் உருளை வேறெங்கும் நகர்வதில்லை. வெளிச்சத்திலும் இருளிலும் அங்கேயே அவ்வண்ணமே. அவை வெறும் கருவிகள்தானே என்றால், நாமும் அவ்வாறுதானே? உணவுச்சங்கிலியில், வாழ்வியல் சங்கிலியில், நமக்கென ஒரு இடம், ஒரு வேலை, தெளிவாக வகுத்துத்தந்திருக்கிறது இயற்கை. சாலைகள் ஓய்வு விரும்பி புரண்டு ஒருபுறம் சாய்ந்து படுத்தாலோ, கிணற்று சகடை ஒரு திசையில்  மட்டுமே சுற்ற முடிவுசெய்தாலோ அதன் படைப்பிற்கான பயன் கெட்டுவிடுமல்லவா? இந்த தெளிவை நமக்கு தந்த அறிவு மட்டும் ஏனோ நம்மை ஒரு திசையில் மட்டுமே சுற்ற, நிலைமாறிப்படுக்க சொல்கிறதே அது ஏன்? நாமும் அவ்வாறு செய்ய முயல்கிறோமே அது ஏன்? மனிதர்போலவே சிந்தித்து 'சுயநலம்' மட்டுமே போற்றும் ஆற்றல் இன்னொரு உயிருக்கு நம் பூமியில் கிடைத்துவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? வண்டிகளில் மாடுகளின் இடத்தில் நாம் பிணைக்கப்பட்டு வண்டி இழுக்க நேரலாம்... நாய் எஜமானர் தூக்கி வீசும் பிஸ்கட்டை தாவி வாயில் கவ்வி விலங்குகள் போலே நான்கு 'கால்களில்' நடக்

தங்கப்ப தக்கம்!

கத கேளு கத கேளு: கூட்டுக்குடும்பம் கூட்டுக்கு டம்பம் ஆன கத கேளு! 1980 களில் ஒரு டிபிகல் கிராமத்து வீட்டில் குறைந்தது ஏழெட்டு பெரியவர்கள், ஐந்தாறு சிறார்கள், சில கால்நடைகள், கையகல காய்கறி தோட்டம்... நிலத்தில் உழைக்க வீட்டாரே வேலையாட்கள், எஜமானர் எல்லாம். வீட்டுத்தேவைக்காக மட்டுமே நிலத்தைக்கெடுக்காத மெனக்கெடல் நிறைந்த வாழ்வு. சிறார்கள் பள்ளி செல்லுமுன்னரே  தங்களை சுற்றியிருந்த அனைத்துயிர்களிடமிருந்தும் வாழ்க்கைக்கல்வி கற்று வளர்ந்தனர். Hindu Undivided Family - HUF - பல நன்மைகளையும் சில கெடுதல்களையும் (ஆணாதிக்க சமுதாயம்...) கொண்டிருந்தது. நதியில் விளையாடி கொடியில் தலைசீவி வளர்ந்த இவர்களது பால்யகாலத்தில் மேலைநாடுகள் வளர்த்தெடுத்த பெருநுகர்வு வணிகத்தின் கரியநிழல் படியவில்லை.  Hindu Growth of Rate (3% GDP வளர்ச்சி, அதில் 2% விவசாயம் சார்ந்து, 1% மட்டுமே மற்றது) என மேலைநாடுகள் எள்ளி நகையாடிய இந்த 3% வளர்ச்சிகூட அந்த நாடுகளில் இன்று இல்லை.... மருத்துவம், மன நல கவுன்சிலிங், பொது நலம், இன்சூரன்ஸ், பென்ஷன் என அனைத்துமாயிருந்த HUF ஒவ்வொன்றும் ஒரு அரசு சாரா தன்னார்வு