முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தங்கப்ப தக்கம்!

கத கேளு கத கேளு: கூட்டுக்குடும்பம் கூட்டுக்கு டம்பம் ஆன கத கேளு!

1980 களில் ஒரு டிபிகல் கிராமத்து வீட்டில் குறைந்தது ஏழெட்டு பெரியவர்கள், ஐந்தாறு சிறார்கள், சில கால்நடைகள், கையகல காய்கறி தோட்டம்...

நிலத்தில் உழைக்க வீட்டாரே வேலையாட்கள், எஜமானர் எல்லாம். வீட்டுத்தேவைக்காக மட்டுமே நிலத்தைக்கெடுக்காத மெனக்கெடல் நிறைந்த வாழ்வு.

சிறார்கள் பள்ளி செல்லுமுன்னரே  தங்களை சுற்றியிருந்த அனைத்துயிர்களிடமிருந்தும் வாழ்க்கைக்கல்வி கற்று வளர்ந்தனர்.

Hindu Undivided Family - HUF - பல நன்மைகளையும் சில கெடுதல்களையும் (ஆணாதிக்க சமுதாயம்...) கொண்டிருந்தது.

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி வளர்ந்த இவர்களது பால்யகாலத்தில் மேலைநாடுகள் வளர்த்தெடுத்த பெருநுகர்வு வணிகத்தின் கரியநிழல் படியவில்லை. 

Hindu Growth of Rate (3% GDP வளர்ச்சி, அதில் 2% விவசாயம் சார்ந்து, 1% மட்டுமே மற்றது) என மேலைநாடுகள் எள்ளி நகையாடிய இந்த 3% வளர்ச்சிகூட அந்த நாடுகளில் இன்று இல்லை....

மருத்துவம், மன நல கவுன்சிலிங், பொது நலம், இன்சூரன்ஸ், பென்ஷன் என அனைத்துமாயிருந்த HUF ஒவ்வொன்றும் ஒரு அரசு சாரா தன்னார்வு நிறுவனமாகவே இயங்கிக்கொண்டிருந்தது. செம்மை வாழ்வே இதன் இலக்காக இருந்தது, லாப நோக்கம் துளியும் இன்றி.

"இந்த மூன்றெழுத்தில் எம் மூச்சிருக்கும் அந்த 3% இல் எம் உழைப்பிருக்கும் அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும்" என்று பாட்டாய் மாறி, பாடாய் பட்டு இன்று 'பேச்சில்' மட்டுமே இருக்கிறது.

ஒட்டகம் நுழைந்த கூடாரம் கதையாய் பணப்பயிர்களும், சந்தைப்பொருளாதாரமும், அவை சார்ந்த பேராசையும் பேரச்சமும் ( Greed and Fear) இந்தப்பெருவாழ்வுக்குள் நுழைந்து கலைத்துப்போட இன்று H, U, F மூன்றுமே சிதறிப்போய் சரத்குமாரும் வடிவேலும் தங்கப்பதக்கம் பட போஸ்டரை வைத்துக்கொண்டு மண்டையைப்பிய்த்துக்கொள்வது போன்ற நிலையில் நம்மை நிறுத்தியிருக்கின்றன.
பிரிந்தோம், சிற்றூர் வாழ்விலிருந்து.

பிரிந்தோம், மண்சார்ந்த வாழ்விலிருந்து.

பிரித்தோம் சிறார்களை பாசமான முதியோரிடமிருந்து. இன்று இரு சாராரும் அவரவர்க்கான காப்பகங்களில்.

சேர்த்தோம் பெருநுகர்வு தருணங்களை, உடல்நடக்கேடெனும் freebie ஐயும் தான்.

...

பத்துப்பேருக்கு மேலாய் வாழ்ந்த குடும்பங்கள், ஒரே ஒருமுறை வரலாறு காணாத பஞ்சத்தை எதிர்கொள்ளும் சூழல் வரவும், பஞ்ச காரணங்களை ஆயாமல் தெளியாமல், band aid தீர்வுகள் பின்னே சென்று, Demand அதிகமானால் Supply அதிகமாகவேண்டும் என்ற அடிப்படை பொருளாதார விதியை உடைத்து 'Demand side ஐ குறைத்து' பொருளாதாரத்தை சரிசெய்வோமென முழங்கி...

நாமிருவர், நமக்கிருவர்...

நாமிருவர், நமக்கு ஒருவர்....

நாமிருவர், நமக்கெதற்கு இன்னொருவர்...

என திட்டங்கள் வகுத்து செயல்படுத்தி...

நான் தனி ஒருவன். என் உழைப்பு மொத்தத்தையும் நானே நுகர்வேன். எனக்கெதற்கு இன்னொருவர்? அலெக்சா போதும் குடும்பம் நடத்த...

என்ற புள்ளியில் இன்று ஊசலாடிக்கொண்டிருக்கிறோம்.

வளர்ந்த நாடுகளில் பணமிருக்கு, உழைக்க ஆளில்லை. என்னதான் இயந்திரங்கள் வந்தாலும் மனித உழைப்பு தேவையான இடங்கள் இருக்கின்றனவே. எனவே, நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்வோர்க்கு வரிச்சலுகைகள், அரசே அவர்களை வளர்க்கும், நமக்கு தேவை Productivity என ஊக்கம் கொடுத்து அந்த நாடுகள் இப்போது Community Farming ஐ முன்னிறுத்தி... இன்னும் சில ஆண்டுகளில் 'ஓய்வூதியம் பெறுபவர்க்கு எங்களால் பென்ஷன் தொடர்ந்து தரமுடியுமா என்பதே சந்தேகம். வீடுநிறைய குழந்தைகள் வேண்டும். (அவர்கள் சீக்கிரமே படித்து வேலைக்கு வரவேண்டும். அப்படி வந்தால்தான் அவர்கள் வருமானத்தில் வரி வசூலித்து, சாகாமல் வயதாகிக்கொண்டேயிருக்கும் மற்றவர்களுக்கு பென்ஷன், நலத்திட்டங்கள் செயலாக்கமுடியும்). எனவே கூட்டுக்குடும்பமே மேல்' என்ற நிலைக்கு இப்பவே வந்தாச்சு.

ஒரு வருஷம் 7%, ஒரு வருஷம் 2%, ஒரு வருஷம் -3% ன்னு பொருளாதாரம் தாறுமாறாய் ஆடுதே, இதுக்கு consistent ஆய் வருஷா வருஷம் 3% எவ்வளவோ மேலாச்சே என அவர்கள் இன்னும் சில வருடங்களில் 'Hindu Rate of Growth is THE benchmark growth rate'' என அறிவிக்கப்போகிறார்கள்.

"சூப்பர்ல, நாமளும் அவங்கள பாத்து காப்பியடிச்சி அதையே செஞ்சிடலாம்!' என, தன் மாணவனது தேர்வுத்தாளை பார்த்து காப்பியடிக்கும் ஆசிரியராய் நம்மை நிறுத்தப்போவது எவை?

Produce சார்ந்த எகானமிக்கும் productivity சார்ந்த எகானமிக்கும் உள்ள மலை மடு இடைவெளியை நுகர்வு போதையில் மறந்த நமது பேராசையும் பேரச்சமுமே அவை.

மூலப்பொருள் சார்ந்த பொருளாதாரம்தான் produce சார்ந்த எகானமி. பொருள்தானே ஆதாரம்? productivity அல்லவே? productivity என்பதே சந்தை நோக்கி நம்மை மந்தைகளாய் நடக்கவைக்க கண்டுபிடிக்கப்பட்ட மந்திரம்தானே!
...

"மரங்கள் சாய்ந்து
கூடு வீழ்ந்தபின்னும்
குயில்கள் ராகம் பாடும்"
என்பதாய் கூட்டுக்குடும்ப நினைவுகள்,
தனிக்குடங்களில் (குடித்தனங்களில்) சிதறிப்போன நம் பெருவாழ்வின் குயில்ராகமாய் மட்டுமே  கசிந்தோடும்.

"கூவுங்க, கூவுங்க, கூவிகிட்டேயிருங்க...இது கூட்டுக்குடும்ப மேன்மைய, அதன் இழப்பின் வலியை உணர்ந்தவர்க்கான பண்பலை அறிக்கை!"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்