முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலை காதலிப்போம், அப்படியே ரூமியையும்!


உனக்கும் எனக்குமான இடைவெளியில்
நாம் இதுவரை புதைத்த சொற்கள் மீது
இன்று மௌனம் வளர்ந்து நிற்கிறது அடர்பச்சையாய்.

பச்சை பாசியாகி புதிய சொற்களை இலக்கு சேரவிடாது வழுக்கி விழவைத்து தன்னுள் புதைத்துக்கொள்கிறது, புதைந்தவை மீதும் மௌனம் வளர்கிறது.

இலக்கு தைக்காத அம்புகள் உயிர் காக்கும்.

இலக்கு தைக்கா சொற்கள் உறவு காக்கும்.

மௌன வெளியை அனுபவக்காற்று அவ்வப்போது கலைத்துப்போட்டு ஒற்றையடிப்பாதை காட்டும். அதையும் நாம் சொற்கள் இட்டு நிரப்ப, அவையும் அங்கு புதைந்துபோய் பச்சை கட்டி நிற்கும் மௌனமாய்.

ஒரு நாள் இப்படி ஒரு பாதை காட்டியபின் காற்று நிற்கக்கூடும், அன்று நாம் சொற்களேதும் வீசாமல் ஒருவரை ஒருவர் நோக்கி நடக்கக்கூடும். ஏதாவது ஒரு புள்ளியில் சந்திக்கக்கூடும்.

அந்தப்புள்ளியில் இருந்து நம் இணைபயணம் மீண்டும் தொடங்கக்கூடும்.

அது நிகழும் தருணம் முதல் மௌனமாய் நடப்போம் சொற்களேதுமின்றி.

சொற்களற்ற இடங்களில் பாசிகள் படராது, வழுக்கலும் இராது.

சொற்களால் உரமேறாத பழைய பச்சை தானே கறைந்துபோய் புதியதொரு நிலப்பரப்பு நம் கண்முன் விரியக்கூடும்.

அங்கு நாம் அன்பை விதைப்போம், அன்பு மட்டுமே விதைப்போம்.

என் அம்பறாத்தூணியிலிருந்து அம்புகளை கொட்டிவிட்டு அன்பை இட்டு நிறைக்கத்தொடங்கியுள்ளேன், அப்படி ஒரு தருணத்தை எதிர்நோக்கி.

அன்பு, அம்பு கீறிய அம்பறாத்ததூணியின் காயங்களை ஆற்றுவதை உணர்ந்த முதுகு நனைகிறது ஆனந்தமாய்.

ஆயுதங்கள் வாழ்க்கைக்கு ஆகா(து)...

--------

ரூமியின்

“Out beyond ideas of wrongdoing  and rightdoing there is a field. I’ll meet you there. When the soul lies down in that grass the world is too full to talk about.”

என்கிற கவிதை தந்த இன்ஸ்பிரேஷனில், அதை தமிழில் மொழிபெயர்க்க நெடுநாட்கள் ஆவலாய் என் நினைவில் உருவேறிக்கொண்டிருந்த எண்ணம் இன்று இப்படி வெளிப்பட்டது.

Faithful translation என்பது சொல்லுக்கு சொல் மொழிபெயர்ப்பதல்ல. அது கவிதையின் ஆன்மாவை நகலெடுப்பதாய் இருக்கவேண்டும் என்ற பேரன்பின் வெளிப்பாடாகவும் இப்பதிவு இருக்கலாம் :-)

(அம்பறாத்தூணி - வில்லுக்குத்தேவையான அம்புகளை சுமக்கும் கூடு)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்