முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராங் நம்பர் but ரைட் நம்பர்!


வருடம் 1977.

முந்தைய வருடம் 14 படங்கள்.

இந்த வருடம் 18 படங்கள்! வயது 22 மட்டுமே!

இரவு பகலாய் உழைக்கும் தாகம், நடிப்பின்மீது மாளாத காதல், எந்த பாத்திரமானாலும் குருநாதர் இயக்கத்தில் நடிக்க தயார், தனக்கு ஸ்கோப்பே இல்லாத கதையானாலும் பரவாயில்லை!

குருநாதர் பார்த்தார், 'இவனை ஒரு வழி பண்ணிடலாம்!' என ஒரு ரோல் தந்தார்.

திருமண வாழ்வை சில வருடங்கள் சுகித்தபின்னும், மனைவி மீது மாறாத காதல் இருந்தும், கண்ணில் படும் பெண்களையெல்லாம் மயக்க எந்த எல்லையையும் மீறக்கூடிய, உண்மை அறிந்த மனைவியிடம்கூட தன் குணம் மாறாமலே வசியத்தை தொடரக்கூடிய ஒரு ரோல்.

காமம் மட்டுமே உணர்வாய் சுற்றும் இவரது வலையில் சிக்குபவர் எந்தப்பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை, அந்தப்பெண்களே மனம் மாறி வேறு திருமண பந்தத்தில் இருந்தாலும்கூட!

இவரிடம் வேலை செய்யும் குமாஸ்தா, ஒரு கட்டத்தில் இவரது பாவச்சுமைகளை சுமக்கத்தொடங்கி, நோயாளியாகி, வாழ்வு வெறுத்து, கோவில்களில் உபந்யாசம் செய்வார். அங்கும் துரத்திச்சென்ற இவரை கண்டதுமே அவருக்கு மனக்கொதிப்பு அதிகமாகி கன்னாபின்னாவென திட்டி மயங்கி சாய்வார்.

மன்மதனாய் வலம் வரும் மதுவின் மனைவி விவாகரத்து கேட்டு கேஸ் போட, மது சார்பாய் வாதாடும் வக்கீல், தனக்கு குழந்தை பிறந்தால் 108 தேங்காய் உடைப்பதாக பிள்ளையாரிடம் வேண்ட, மது அதை நிறைவேற்றுகிறார், வக்கீலின் மனைவி என்று தெரியாமலே!

இதையும் கேட்டுத்தவிக்கும் குமாஸ்தா சபிக்கிறார், ஊரில் பிறக்கும் குழந்தைகளெல்லாம் மதுவின் குழந்தைகளாகவே இருக்கப்போகிறது என!

22 வயதில் இப்போதைய சூப்பர் ஸ்டார்கள் எப்படி இருந்தார்கள்? இதுபோன்றதொரு கதையோடு அவர்களை இன்றைய உச்ச இயக்குநர்கள் யாராவது அணுகியிருந்தால், ஸ்டார்கள் தலைதெரிக்க ஓடியிருப்பார்கள், தம் இமேஜை காப்பாற்றிக்கொள்ள!

அந்த 22 வயது இளைஞன் மதுவாகவே மாறி நடத்திய லீலைகள், வேற லெவல், வேற லெவல்!

இன்றும்கூட நமது comfort zone ஐ ஓட்டையிட்டு நம்மை நெளியவைக்கும் காட்சிகள், அவற்றுள் பொதிந்த நகைச்சுவை, brilliantly unapolegetic embrace of the role by the actor and the story by the director... சமீபத்தில் Wolf of Wall Street என்கிற புகழ்பெற்ற ஹாலிவுட் படத்தில் லியார்னடோ டி காப்ரியோவின் நடிப்பு என்னை அவ்வளவாக வியக்கவைக்கவில்லை, 'அதான் நாப்பத்து நாலு வருசத்துக்கு முன்னாடியே 22 வயசிலயே இவரு பண்ணிட்டாரே!'.

இயக்குநர் தன் திறமையின்மீது வைத்திருந்த அசாத்ய நம்பிக்கை, காபரே நடனத்துக்கு மட்டுமே இந்தியில் பயன்படுத்தப்பட்ட ஒரு நடிகையை மதனின் நாயகியாக மாற்றியது!

அந்த வக்கீல் ஒரு 'கேரக்டர்'!

ஜோடி மாறிப்போன செருப்புகளை காலில் அணிந்தவண்ணம் க்ளையண்ட் மீட்டிங்கில் 'ஒரு அம்பது நிமிஷமா நான் முட்டாளாயிட்டேன், இந்த ஜோடி மாறிப்போன செருப்பால!' என தனது கால்களை மதுவிடம் காட்ட, பயத்தில் உறைந்துபோய் மது தனது ஒரு கால் செருப்பை இன்னொரு செருப்பால் மறைக்க முயலும் அந்த நொடிகளில் நாயகன் மதுவாய் கூடுபாய்ந்திருப்பதை நாமும் பயத்துடன் உணர்வோம். இந்தப்புள்ளியில்தான் நடிப்பும், இயக்கமும் நம் ரசனையும் கூட்டாய் வென்றது. இந்த ரசவாதம் நிகழ்த்த அடிநாதமாய் நடித்தவர் இன்றும் தொடர்கிறார், அன்றுபோலவே!

There are too many such moments in this movie that highlight the confluence of energies from the Guru (Director) and Sishya (actor) so am not listing any :-)

படம் முடிந்தபின்னுள் என்னுள் தொடர்ந்த வியப்பு, இனலறுவரை தொடரும் வியப்பு, ஹரிஹர சுப்ரமண்யம்! அதாங்க, அந்த குமாஸ்தா!



சிறு வேடங்கள் மட்டுமே நடிப்பவராக இருந்தாலும் அவருக்கும்கூட கதாநாயகன் அளவுக்கு முக்கியத்துவம் தந்து அவரிடமும் மிகப்பிரம்மாதமான நடிப்பை ('காமாந்தகாரா!', 'துச்சா!') வெளிக்கொணர்ந்த குரு... எந்தரோ மகானுபவலு!!!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்