முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காலருகே கானகம், காதருகே கானகம்...

சிட்டுக்குருவியும் செம்போத்தும் இன்னும் பல பெயர் தெரியா பறவைகளும் சுமந்து வந்து நம்மிடம் சேர்க்கும் கானகத்தின் பேரமைதி, அவற்றின் குரல்வழி பரவும் கேட்பவருள்ளும். யாருமற்ற வெளிகளிலும் இவ்வாறே அவை கானக அமைதியை கசியவிட்டு செல்கின்றன, துணைக்கு சில இறகுகளையும் சேர்த்தே... இறகின் வண்ணக்குவியல் என்றேனும் காற்றில் மிதந்து உங்கள் கரையில் ஒதுங்கலாம். கையில் எடுத்து காதருகில் வைத்துப்பாருங்கள் கானகத்தின் குரல்கள் கேட்கும். கன்னத்தை வருடிப்பாருங்கள், வாழ்வு சிலிர்க்கும்.  பிரமீளின் இந்தக்கவிதை படித்தால் இறகு கையில் இல்லாவிட்டாலும் சிலிர்க்கும்! சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று  காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது.

என் விழித்திரையில் - 5 Before Sunrise

One of the greatest ever love stories, life stories... ஐரோப்பாவில், ஓடும் ரயிலில் ஒரு அமெரிக்க இளைஞனும் ஒரு பிரெஞ்சு இளைஞியும் வெவ்வேறு இருக்கைகளில். ஒரு மத்திம வயது தம்பதியின் ஒவ்வாமை (incompatibility) கோபம், உடைந்த உரையாடலில் ஆரம்பித்து சுற்றியிருப்போரின் எண்ணங்களில் பொங்கி வழியுமளவு பெரிதாகவும், இளையவர் இருவரும் இடம் மாறி எதிர் எதிரில் அமர்கின்றனர். அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பிக்கிறார்கள். பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக்கொண்டே இருக்கிறார்கள், இன்று கூட, இப்படம் பார்த்தவர்கள் மனதில்! எந்த டாபிக் என்று இல்லாமல் சகலமும் போலித்தனமின்றி, பொய்யின்றி பேசிக்கொள்ளும் அளவு வேவ் லென்ந்த் செட் ஆகிப்போகிறது.  ரயில் வியன்னாவில் (ஆஸ்திரியாவின் தலைநகரம்) நிற்கிறது. அந்த இளைஞன் இறங்கவேண்டிய இடம் அது. அவளிடம் விடைபெற்று இறங்குகையில் ஒரு உந்துதலில் மீண்டும் ரயிலேறி ஒரு வேண்டுகோள் வைக்கிறான், 'இன்று ஒரு நாள் இரவு மட்டும் நான் வியன்னாவில் கழிக்கவேண்டியிருக்கிறது. காலையில் அமெரிக்காவுக்கு விமானம். இன்று இராத்தங்க ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. நகரை நடந்து சுற்றியே இரவைக

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந

மர மூர்த்தி

"தின்ன மீன் தராதே; பிடிக்க கற்றுத்தா." இந்த வரிகளை தம் வாழ்நாளில் கேட்டிராதவர் மிக மிக குறைவு. யார் வாழ்வோ வளர யாரோ கற்றுத்தருவது மேற்கத்திய நவீன சரக்கு.  கற்பிப்பதற்கும் கற்பதற்கும் மொழி பல இருந்தும் கற்பது முழுமையற்றுத்தானே உள்ளது... நாம் அனைவரும் படிக்க மறந்த மிகப்பெரிய கல்விக்கூடம் நம்மைச்சூழும் உலகு. பாடத்திட்டம் , அட்டவணை, பாடம் என்று வரையறுக்கப்பட்ட எதுவுமில்லை, தேர்வுமில்லை. இங்கு ஆசிரியர்களே இல்லை; ஆனால் கற்பதற்கு என்னவோ ஏராளம்! இத்தனை அற்புதமான பள்ளியில் கற்காததையா நாம் கல் அறைகளில் அமர்ந்து கற்கப்போகிறோம்? வெயில் என்றால் என்ன என்று நிழற்கூரையின்கீழ் அமர்ந்து எத்தனைதான் கேட்டாலும் வெயில் தோலில் படாமல் உணர முடியுமா? ஓருயிர் உணர்ந்த வெயிலை இன்னொரு உயிர்தான் உணர முடியுமா?! பசு வயிற்றிலிருந்து வெளித்தள்ளப்பட்டவுடன் இறங்கி நடப்பது கன்றுக்கு சாத்தியமானது எப்படி? அதன் வயிறு முதல் நாளிலும் நிரம்பியதெப்படி? எந்த நம்பிக்கையில் உறங்கி விழித்தது, வளர்ந்தது, தழைத்தது? மீனுக்கு நீந்தக்கற்பித்தது யார்? எப்படி? உள்பொதிந்த அறிவை பொதித்தது

வேரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்

வேரோடும் மண்ணில் எங்கும் நீரோடும். தோழமைகளே, Onetreerevolution (ஒற்றை மரப்புரட்சி) என்ற முகநூல் பக்கத்தை நடத்திவருகிறேன்.  உலகை மாற்ற ஒரு மரம் நடுவோம் என்ற பெருவிருப்பத்தினால், ஒரு பழத்திலுள்ள விதைகளை எண்ணிவிடலாம் ஆனால் ஒரு விதையிலுள்ள பழங்களை எண்ணவே இயலாது என்ற புரிதலால், என் வரும் காலத்திற்கு (மனிதரும் இதனுள் அடக்கம்) இளைப்பாற நிழல், பசியாற உணவு தரக்கூடியதால் என ஏராளமாய் காரணங்கள். இந்த புரட்சியில் இணைபவர் செய்யவேண்டியது ஒரே ஒரு மரம் நட்டு வளர்ப்பது; நட்டதில் இருந்து வளர வளர selfie எடுத்து பகிர்ந்து பார்ப்பவரையும் மரம் நட வைப்பது. நம் தலைமுறை தாண்டியும் நீளவேண்டிய நெடியதொரு பணியில், கடமையில் அனைவரும் இணைந்தால் பறவைகளும் வாழ்த்தும்!  இந்த fb பக்கத்தின் அடிப்படை பதிவுகளாக screen shots சில இணைத்துள்ளேன். வாழும்போதும் விதையாக இருப்போமே!வெத, நாம போட்டதாயிருக்கட்டுமே நம் வழி வருபவர்க்கு! ஒரு மரம், ஒரே ஒரு மரம், புதிதாய் நட்டு இணைவீர்களா? FB page  Onetreerevolution பேரன்புடன், பாபுஜி நான்... மாற்றம் விரும்பும், மாற்றமாக விரும்பும் ஒ

காதலாகி

காதல் காதல் காதல். காதல் போயின் காதல்! உறைபனிக்குளிரில் தேநீர்க்கோப்பையின் உள்ளங்கை சூடு. மெலிதான வெக்கையில் முகம் தழுவும் இளங்காத்து. குளத்து நீரில் பாதம் வருடும் மீனின் முத்தம். காற்றைப்பொத்தலிடும் மூச்சு கையில் உரச, சொற சொற நாக்கால் கை வருடும் கன்றின் நாக்கு ஒழுகல். சிறுவயது மழைநாளில் குளிரடக்கும் அம்மையின் சேலை வாசனை. கோடை வெக்கையில் வானமிருண்டு திடீரென முகத்திலிறங்கும் முதல் ஆலங்கட்டி. காபியில் நனைத்த பிசுக்கோத்தின் நுனி கரண்டி நாவிறங்கும் தீஞ்சுவை. விசுக்கென வான் கலைத்து மறைந்த ஒற்றைக்குருவியின் காற்றிலாடும் உதிர்ந்த இறகு. இருள் கவிந்த வயல் மரத்தில் மின்மினியின் ஒளி நடனம். சந்திக்கும் ஒற்றை நொடிக்காய் காத்திருந்த காலமெல்லாம் தேக்கிவைத்த அன்பில் பளபளக்கும் இருள் விழிகள். இருப்பு மறந்து உரு மறந்து அருவாய் அவ்வன்பில் நனைந்த ஆன்மாவின் உள்வெளிச்சம். செம்புலத்தில் பசுமை கட்டி தலையாட்டும் பயிர்நுனியின் விரல் தீண்டல். நள்ளிரவில் ஆழ்துயிலில் கரம் தேடி பற்றிக்கொள்ளும் பிஞ்சு விரல்கள். விடைபெறத்தவிக்கும் உயிர்க்கூட்டின் அரவணைப்பு

உச்சம்

உச்சம் பேரமைதியின் உச்சம் மனிதன் இல்லா பூமி. பேரிரைச்சலின் உச்சம் நாம், நாம் மட்டுமே. பெருங்களியின் உச்சம் மண் நனைக்கும் மழைத்துளி. பெருந்துயரின் உச்சம் நாம், நாம் மட்டுமே. பேராசையின் உச்சம்  கையில் பூமிப்பத்திரத்துடன்  இறுதி மனிதன். பேரன்பின் உச்சம்  அவனுக்கும் ஆறடி நிலம்  ஈயும் பூமி. பேராற்றலின் உச்சம் (பூமியின்) ஓடு துளைக்கும்  சிறு விதை. பேரற்புதத்தின் உச்சம் காற்றில் ஆடி மண்ணிறங்கும் ஒற்றை இலை / இதழ் / இறகு / விதை. இருப்பு சுகம்,  வாழ்வு தவம்,  வாழ்தல் வரம். வாழ்ந்து பார்க்கலாமே பூமிக்கு பாரமின்றி... இப்போது கவிதை மட்டும் ---------------------------------------------- பேரமைதியின் உச்சம் மனிதன் இல்லா பூமி. பேரிரைச்சலின் உச்சம் நாம், நாம் மட்டுமே. பெருங்களியின் உச்சம் மண் நனைக்கும் மழைத்துளி. பெருந்துயரின் உச்சம் நாம், நாம் மட்டுமே. பேராசையின் உச்சம் கையில் பூமிப்பத்திரத்துடன் இறுதி மனிதன். பேரன்பின் உச்சம் அவனுக்கும் ஆறடி நிலம் ஈயும் பூமி. பேராற்றலின் உச்சம் (பூம

தோல உரிச்சிருவேன்!

தோல உரிச்சிருவேன்! மெய்யாலுமே!! பாம்பு சட்டை உரிக்கும் என சிறு வயதி்லிருந்து கேட்டு வளர்ந்தோம்.  நம்மில் சிலர் பாம்பு சட்டைகள் பார்த்திருப்போம் வீடுகள் அருகில் அல்லது வீடுகளாகிப்போன வயல்வெளிகளில். நூல் இழைப்பின்னல் போலவே தோன்றும் இந்த சட்டைகள் காற்றில் பறந்தோ மரங்களில் தொங்கியோ கல்லிடுக்கில் கிடந்தோ நம் கவனத்தை ஈர்த்திருக்கலாம், நிஜ பாம்பு போலவே இருப்பதால். ஏன் பாம்புகள் தோலை உரித்துக்கொள்கின்றன? எப்படி அவற்றால் பொத்தானில்லாத, zip இல்லாத சட்டைகளை உருவாக்க, கழற்ற முடிகிறது என்ற இயல்பான கேள்விகள் ஏனோ நமக்கு தோன்றியதே இல்லை... 'பாம்புகள் வளரும் வேகத்தில் அவற்றின் தோல்கள் வளர்வதில்லை. அதனால் அவை தம் தோலைக்கிழித்து வெளியேறும். ஆனால் அதற்குள் இன்னொரு தோல் வளர்ந்திருக்கும்' என மெத்தப்படித்த மகுடி ஊதுபவர்கள் யார் யாரோ சொன்னதாய் இன்டெர்னெட்டில் ஏதேதோ படம் காட்டிக்கொண்டிருப்பதை தள்ளி வைப்போம். அவை அளிக்கும் (தவறான) செய்திகள் நம் புரிதலை வளர்ப்பதை விட்டு நம்முள் புதிதாய் ஏராளமாய் கேள்விகள் எழுப்பும்.  உடலை சொறிந்துகொள்ள கரங்கள் ஏதும் இல்லாதவை பாம்புகள். உடல

அவரவர் சிலுவை...

புத்தன் ஏசு காந்தி சுமந்தது அவரவர் சிலுவை. தானே மரம் தேர்ந்து தானே செதுக்கி தானே சுமந்தனர் தம் வாழ்நாள் முழுவதும். அவரவர் சிலுவை அவரவர் சுமக்கட்டும். அடுத்தவர் மரத்தை நாம் தேர்வு செய்யோம். மர பாரம் அவரவர் முடிவு. அடுத்தவர் மரத்தில் நம் பாரம் ஏற்றோம். இங்கு சிலுவைகள் இலவசம், (நெஞ்சிலல்லாது முதுகில் சுமந்தாலும்) ஆலிங்கனம்... பரவசமான தருணங்களும் பரிதவிக்கும் தருணங்களும் எப்போது நிகழும் என யாமறியோம்... பித்தனாய், சித்தனாய், புத்தனாய்... சுமப்பவர்  மாறலாம், சிலுவைகள் மாறா. சிலுவைகள் சுமக்காத மனிதர் என்று எவரும் இல்லை. அவரவர் சிலுவை அவரவருக்கே!