முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மர மூர்த்தி

"தின்ன மீன் தராதே; பிடிக்க கற்றுத்தா."

இந்த வரிகளை தம் வாழ்நாளில் கேட்டிராதவர் மிக மிக குறைவு.

யார் வாழ்வோ வளர யாரோ கற்றுத்தருவது மேற்கத்திய நவீன சரக்கு. 

கற்பிப்பதற்கும் கற்பதற்கும் மொழி பல இருந்தும் கற்பது முழுமையற்றுத்தானே உள்ளது...

நாம் அனைவரும் படிக்க மறந்த மிகப்பெரிய கல்விக்கூடம் நம்மைச்சூழும் உலகு.

பாடத்திட்டம் , அட்டவணை, பாடம் என்று வரையறுக்கப்பட்ட எதுவுமில்லை, தேர்வுமில்லை. இங்கு ஆசிரியர்களே இல்லை; ஆனால் கற்பதற்கு என்னவோ ஏராளம்!

இத்தனை அற்புதமான பள்ளியில் கற்காததையா நாம் கல் அறைகளில் அமர்ந்து கற்கப்போகிறோம்?

வெயில் என்றால் என்ன என்று நிழற்கூரையின்கீழ் அமர்ந்து எத்தனைதான் கேட்டாலும் வெயில் தோலில் படாமல் உணர முடியுமா? ஓருயிர் உணர்ந்த வெயிலை இன்னொரு உயிர்தான் உணர முடியுமா?!

பசு வயிற்றிலிருந்து வெளித்தள்ளப்பட்டவுடன் இறங்கி நடப்பது கன்றுக்கு சாத்தியமானது எப்படி? அதன் வயிறு முதல் நாளிலும் நிரம்பியதெப்படி? எந்த நம்பிக்கையில் உறங்கி விழித்தது, வளர்ந்தது, தழைத்தது?

மீனுக்கு நீந்தக்கற்பித்தது யார்? எப்படி?

உள்பொதிந்த அறிவை பொதித்தது யார் என்ற ஆதி வினாவிற்கு விடையளிக்க இயலாத கல்வியானது குத்துமதிப்பாய் ஊகங்களின் அடிக்கல்லில்தானே நம் வாழ்வை எழுப்பும்?

தகப்பன் பெயர் தெரியாதவன் என்றால் சினம் கொள்ளும் அறிவைத்தந்த கல்விக்கு தெரியுமா நம் ஆதி தகப்பனின் தாயின் பெயர்?

பாசாங்குகளை மட்டுமே கற்பதை ஒதுக்கிவைத்து மரத்தினிடம் கையேந்துங்கள். அது இல்லையென்று சொல்லுவதில்லை. வாரி வழங்குவதை நிறுத்துவதும் இல்லை.

பார்ப்பது வேறு உணர்வது வேறு என்ற புரிதலோடு மரத்தை உணரத்தொடங்குங்கள்.

நிலம் விழுந்து (எழ இயலாத) ஒற்றை விதை கூட தன்னை  சூழும் புவியாற்றலின் உதவியோடு ஓடுடைத்து உயிர் வளர்த்து, முதல் தளிர் காய்ந்து விழுந்தபோதே தன்னடி நிலத்திற்கு உணவளிக்கத்தொடங்கி, உணவுண்ட நுண்ணுயிரின் எச்சத்தை தனக்கான உணவாய் வேர்வழி மேல் தூக்கி நுனிவரை நனைத்து, சிறுகச்சிறுக சூரியக்கதிர் சேர்த்து பூவாய் காயாய் கனியாய் கனியுள் ருசியாய், விதையாய் சேமித்து, துளிர்ப்பதொரு காலம், வளர்வதொரு காலம், உதிர்வதொரு காலம் என யாரும் சொல்லத்தராமலே விதையுதிர்த்து வித்திட்டு சந்ததி பெருக்க, ஒன்று பலவாகி பல்கிப்பெருகி காடாகி உயிரனைத்திற்கும் மகிழ்வோடு உணவு சமைத்து, உண்டவரின் தடம் வழியே காடு பெருக்கி... இப்போதுகூட நம் ஊர் எல்லையில் காத்து நிற்கிறது ஏராளமாய் சூரியத்துகள்கள் சுமந்தவண்ணம்; 'என்றாவது ஒரு நாள் மீண்டு வரும், முந்நாளில் பிரிந்த கூட்டம்' என நமக்காக. 

தான் சமைத்த உணவை தான் உண்ணாமல் அனைத்துயிர்க்கும் கொடுக்கும் பெருங்கொடை, கருணைக்கொடை... இதன் மடியமர்ந்து 'உணர்ந்து' கற்கவேண்டியதை வேறெங்கோ தேடி ஏன் இந்த வீண் அலைச்சல்?

"
கல்லாலின் புடையமர்ந்து 
நான்மறையாரங்கமுதல் கற்றகேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் 
வாக்கிறந்த பூரணமாய் 
மறைக்கு அப்பாலாய் 
எல்லாமாய் அல்லதுமாய் 
இல்லாமல் இருந்ததனை 
இருந்தபடி இருந்துகாட்டி 
சொல்லாமல் சொன்னதனை 
நினையாமல் நினைந்துபவ 
தொடக்கமெலாமுழுதுணர் முனிவர்தேற 
மூவகைப்பாசமாய ஆன்மாக்கள் 
பதிநிழல் அடங்குமுன்னர் 
தங்கைபொருவம் விரல்களால் தெரித்துயாரும் நிழல்வதிபவர் 
துணைத்தாள் போற்றிபோற்றி!

"
என வேண்டுவது மரத்திடமா மூர்த்தியிடமா என்ற புரிதலோடு இந்தப்பதிவை மீண்டும் வாசித்துதான் பாருங்களேன்!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்