முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தோல உரிச்சிருவேன்!


தோல உரிச்சிருவேன்! மெய்யாலுமே!!

பாம்பு சட்டை உரிக்கும் என சிறு வயதி்லிருந்து கேட்டு வளர்ந்தோம். 

நம்மில் சிலர் பாம்பு சட்டைகள் பார்த்திருப்போம் வீடுகள் அருகில் அல்லது வீடுகளாகிப்போன வயல்வெளிகளில்.

நூல் இழைப்பின்னல் போலவே தோன்றும் இந்த சட்டைகள் காற்றில் பறந்தோ மரங்களில் தொங்கியோ கல்லிடுக்கில் கிடந்தோ நம் கவனத்தை ஈர்த்திருக்கலாம், நிஜ பாம்பு போலவே இருப்பதால்.

ஏன் பாம்புகள் தோலை உரித்துக்கொள்கின்றன? எப்படி அவற்றால் பொத்தானில்லாத, zip இல்லாத சட்டைகளை உருவாக்க, கழற்ற முடிகிறது என்ற இயல்பான கேள்விகள் ஏனோ நமக்கு தோன்றியதே இல்லை...

'பாம்புகள் வளரும் வேகத்தில் அவற்றின் தோல்கள் வளர்வதில்லை. அதனால் அவை தம் தோலைக்கிழித்து வெளியேறும். ஆனால் அதற்குள் இன்னொரு தோல் வளர்ந்திருக்கும்' என மெத்தப்படித்த மகுடி ஊதுபவர்கள் யார் யாரோ சொன்னதாய் இன்டெர்னெட்டில் ஏதேதோ படம் காட்டிக்கொண்டிருப்பதை தள்ளி வைப்போம்.
அவை அளிக்கும் (தவறான) செய்திகள் நம் புரிதலை வளர்ப்பதை விட்டு நம்முள் புதிதாய் ஏராளமாய் கேள்விகள் எழுப்பும். 

உடலை சொறிந்துகொள்ள கரங்கள் ஏதும் இல்லாதவை பாம்புகள். உடலின் அடிப்பகுதி தோல் தேய்ந்துதான் / தேய்த்துதான் இடம்பெயரும். இடுக்குகளில் நுழையும்போது / வெளியேறும்போது மேல்பகுதி தோலிலும் செய்கூலி சேதாரம் நிகழ்ந்தவண்ணமே இருக்கும். இவ்வாறு காயமான பகுதிகளில் பல்லுயிர்கள் குடியேறி நடமாடும். பாம்பின் உயிராற்றல் காயமடைந்த தோலை இறக்கவைத்து அதன் கீழே புதிய தோலை உருவாக்கிக்கொண்டே இருக்கும்.

பாம்புகள் தம் வாழ்வை கடமையாய் செய்யும்போதெல்லாம் இந்த மேல்சட்டை கிழிபடும் வாய்ப்புகள் ஏராளம். நகரும் பாம்புகள் தம் தோல் தம்மோடு நகர இயலாத அளவு இறந்த தோலாய் மாறிப்போனதுகூட அறியாமல் ஊர்ந்து மேற்செல்ல முனைகையில் 'பழையன கழித'லாய் பின்தங்கும் தோல் பாம்பு வடிவிலே கிடந்தது கிடந்தபடி நம்மில் பய அலைகளை கடத்தும் :-)

தைரியத்தை துணைக்கழைத்து கிட்டே போயி குச்சியில தூக்கிப்பாத்தா...
பாம்பு சட்டையில் பொத்தான்களே இல்லையாம்!



பின்குறிப்பு: 'பாம்பு சட்டை' என்று தமிழில் கூகுளில் தேடிப்பார்த்தால் வருவதெல்லாம் இந்தப்பெயரில் வெளியான சினிமா பற்றிய செய்திகளே;

தமிழன்டா!!!!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்