முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலாகி


காதல் காதல் காதல். காதல் போயின் காதல்!

உறைபனிக்குளிரில் தேநீர்க்கோப்பையின் உள்ளங்கை சூடு.

மெலிதான வெக்கையில் முகம் தழுவும் இளங்காத்து.

குளத்து நீரில் பாதம் வருடும் மீனின் முத்தம்.

காற்றைப்பொத்தலிடும் மூச்சு கையில் உரச, சொற சொற நாக்கால் கை வருடும் கன்றின் நாக்கு ஒழுகல்.

சிறுவயது மழைநாளில் குளிரடக்கும் அம்மையின் சேலை வாசனை.

கோடை வெக்கையில் வானமிருண்டு திடீரென முகத்திலிறங்கும் முதல் ஆலங்கட்டி.

காபியில் நனைத்த பிசுக்கோத்தின் நுனி கரண்டி நாவிறங்கும் தீஞ்சுவை.

விசுக்கென வான் கலைத்து மறைந்த ஒற்றைக்குருவியின் காற்றிலாடும் உதிர்ந்த இறகு.

இருள் கவிந்த வயல் மரத்தில் மின்மினியின் ஒளி நடனம்.

சந்திக்கும் ஒற்றை நொடிக்காய் காத்திருந்த காலமெல்லாம் தேக்கிவைத்த அன்பில் பளபளக்கும் இருள் விழிகள்.

இருப்பு மறந்து உரு மறந்து அருவாய் அவ்வன்பில் நனைந்த ஆன்மாவின் உள்வெளிச்சம்.

செம்புலத்தில் பசுமை கட்டி தலையாட்டும் பயிர்நுனியின் விரல் தீண்டல்.

நள்ளிரவில் ஆழ்துயிலில் கரம் தேடி பற்றிக்கொள்ளும் பிஞ்சு விரல்கள்.

விடைபெறத்தவிக்கும் உயிர்க்கூட்டின் அரவணைப்பு பஞ்சுப்பொதி.

இன்று புதிதாய் வீட்டு மரத்தில் இளைப்பாறிய முன்கண்டிராத பறவைக்கூட்டம். அவை விட்டுச்சென்ற ஓசைகள் தொங்க புதிதாய் காற்றிலாடும் பழைய மரம்.

ஓட்டை சைக்கிளில் காற்றிரங்கிய சக்கரத்துடன் குண்டுத்தங்கையை வலிந்து மிதிக்கும் ஒல்லித்தம்பியின் உற்சாகம்.

அவசர உலகின் ஓட்டத்தில் பின்னிரவு வழிப்போக்கனின் பையிலிருந்து கசிந்தோடும் மனமுருக்கும் இசைக்கோவை.

நிலவற்ற வானின் கீழ் யாருமற்ற இருள்சாலையில் தள்ளாடி முதல் நடை துவங்கும் வெளுப்பு நாய்க்குட்டி.

மனநலம் குன்றிய சிறுவனை நம்பிக்கை பிடித்து அழைத்துச்செல்லும் பெண்ணின் சலனமற்ற முகம்.

வண்ணச்செழிப்புடன் கண்முன்னே நடமாடி மறைந்த பச்சை கருப்பு வண்ணப்பூச்சி.

நம் நாளில் வண்ணம் சேர்க்க எத்தனை எத்தனை நிகழ்வுகள். காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி சுயம் தொலைக்கும் நொடிகளை வாழ்வு நம்முள் விதைத்துக்கொண்டேதான் இருக்கிறது;
நிலம் எப்படியாயினும். 

மணிகாட்டியின் முற்களிலிருந்து சற்றே இறங்கி இளைப்பாற சோலை வளர்ப்போமா இவ்விதைகள் வழியே?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்