கதவுகள் இல்லாத உலகம், எல்லைகள் இல்லாத மனிதம்... எனது நண்பர், ஐரோப்பாவில் வாழ்ந்த பத்தாண்டுகளில் வெளியில் செல்லும்பொழுதெல்லாம் அவரது வீட்டு கதவை பூட்டியதே இல்லை. 'என்ன இருக்கு பாபுஜி, எடுத்துட்டுப்போறதுக்கு?' என்பார். அவரது தேவைகள் குறைவு. வீட்டிலுள்ள பொருட்களும் அவ்விதமே. ஆனால் இந்தியாவிலிருந்து அவர்களது உறவினர்கள் அனைவரையும் ஐரோப்பிய சுற்றுப்பயணம் அழைத்துச்சென்று (அவர்களுக்கு தமிழ் உணவு சமைக்க ஒரு சமையற்காரரையும் சேர்த்துதான்!) மகிழ்ந்தார். சனி சீக்னாப்பூர் என்கிற இந்திய சிற்றூரில் யாரும் அவர்களது வீடுகளை பூட்டுவதில்லை. சனி பகவானின் பூமி என்கிற பய பக்தியினால் திருட்டுகளும் இல்லை. அன்புக்கும் பக்திக்கும் பூட்டிய கதவுகளை திறக்கும் ஆற்றலும் உண்டு, கதவுகளை திறந்து வைத்தே வாழும் ஆற்றலும் உண்டு. ஆனாலும் யதார்த்த வாழ்வில் 'பொருள் இருப்பவர்க்கும் இல்லாதவர்க்கும் உள்ள பொருளாதார இடைவெளியினால் (the chasm between Haves and Have nots):நம் கதவுகளை பூட்டி பாதுகாக்கும் அவசியத்தில் வாழ்கிறோம். வீடுகளுக்கு கதவு, பூட்டு...சரிதான். ஆனால. நம் மனித மனங்களுக்கு? நம்மில் எத்தனை பேரின் மனது ...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!