முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏய்!

உலகம் ஃபுல்லா ரௌடிங்க தொல்லை தாங்கலபா! எவன பார்த்தாலும் "ஏய்!" "ஏய்!" னு சவுண்டு கிளப்பிகிட்டு திரியிராய்ங்க!


ஒவ்வோரு "ஏய்" யும் பல ஆயிரங்கோடின்னு பெரும வேற...


இன்னாதான் இர்க்குது இந்த "AI" ல பாத்தா காமெடியா கீதுபா!


ஊர்ல ஒர்த்தன் ஓரு மெசினு பண்ணானாம். அது ஆய கலைங்க 64ஐயும்  அப்டியே செய்யுமாம். அந்த மெசினை சண்டைக்கு விட்டானாம். அதுக்கு எதிராளியா நின்னது இன்னொர்த்தன் பண்ண 64 ஆய கலை மெசினாம்.


ஃபைட்டான ஃபைட்டாம். முடியவே இல்லையாம்!


மெசினு இத்து போற வரை சண்டை போடுமே தவிர ரெண்டுக்கும் சமாதானம் பேசவே தெரியாதாம்! ஏன்னா சமாதானம்னா என்னான்னே ரெண்டுக்கும்  புரியாதாம்!


நம்ம மனுசப்பய எப்போ இன்னா செய்வான்னு அவனோட மானுஃபேக்சரருக்கே புரியாதாம். அவனோட வரலாறு பூகோளத்த எல்லாம் படச்ச கடவுளே வாயடைச்சி நிக்காராம்!

இப்போ அவனே 'நாந்தான் கடவுள்'னு கெளம்பிருக்கானாம்!


கடவுள்தான் 'டேட்டா'ன்னு வச்சிக்குவம். அவரு கோடானு கோடி அனுபவங்கள பொரட்டி பொரட்டி படிச்சி ஒவ்வொரு மனுசப்பயலயா உருவாக்கிக்கிட்டே இர்க்காராம். ஆனாலும் ஒர்த்தன் மாறி இன்னோர்த்தன் இல்லவே இல்லயாம். ஓவ்வொர்த்தனும் பண்றதெல்லாம் அவருக்கே வெளங்கலயாம்.


ஆர்க்கிமிடீஸ்னு ஒர்த்தன் இருந்தானாம். அவன் ஒரு நாள் பாத் டப்புல குளிக்க குந்தசொல்லோ டப்புல இருந்த தண்ணீ வெளில வளிஞ்சி போச்சாம். டப்புனு எந்திரிச்சி யூரேகா யூரேகான்னு கத்திகிட்டே பப்பி ஷேமா தெருவெல்லாம் ஓடி ராசாவ பாத்தானாம். இத எந்த ஏய் டெக்னாலஜியாவது செய்யுமா?!

நம்ம வசூல் ராஜா ஒரு தபா ஒரு கிளைண்ட்டுக்காவ அவர்ட்ட கடன் திருப்பித்தராத ஒரு தாடிக்காரன கிட்நாப் பண்ணி அவன் வூட்ல அந்த அமௌண்ட்ட ரேன்சமா கேக்க அந்த கிளைண்ட் கண்ணு முன்னாடியே போன போடச்சொன்னா, தாடிக்காரன் 'அண்ணா, நானு ஏக்கனவே வட்டியும் சேத்து குட்த்துட்டன்னா' னு சொல்ல அது உண்மைனு தெர்ஞ்சதும் கோவமான வசூல்ராஜா அவன ரிலீஸ் பண்ணிட்டு கிளைண்ட்டையே கிட்நாப் பண்ணி ரேன்சம் கேட்டு அவனோட வூட்டுக்கே போனப்போடச்சொன்னானாம்!


நண்பர்களே Artificial Intelligence என்பது பூச்சாண்டியல்ல. அது பாட்டில் பூதம். நமது கட்டளை கேட்டு கடல் மீன்களை எண்ணும், நட்சத்திரங்களை கவுண்ட் பண்ணும், இத்யாதி வேலைகள் செய்யும். ஆனால் ஆர்க்கிமிடீஸ் போல, யூரேகா மொமென்ட்ச க்ரியேட் பண்ணாது, அலெக்சாண்டர் போல, Ada Caria போல மாத்தி யோசிக்காது(lateral thinking , out of the box solutions or even plain luck solutions!).


ஒரு பண்டைய நகர நுழைவாயிலில் யாராலும் அவிழ்க்க முடியாத ஒரு கயிற்று முடிச்சு காற்றில் ஆடிக்கொண்டே இருந்ததாம். 

எவன் அதை அவிழ்க்கிறானோ அவன் உலகாளுவான் என முடிச்சை இட்டவன் சொல்லிச்சென்றதை முயன்று தோற்றவர்களிடம் வேடிக்கை பார்ப்பவர்கள் சொல்வது வாடிக்கையாம்.

ஒரு நாள் ஒரு குருதை மேல ஒரு ராசா வந்தானாம். அவனுக்கு உலகத்தையே செயிக்கணும்னு பேராசையாம். காத்தில ஆடற கயித்து முடிச்ச பாத்தானாம், கதைய கேட்டானாம், யோசிச்சானாம், கத்தியால வகுந்துட்டு போய்ட்டே இருந்தானாம். 'ஏய், இது போங்காட்டம், யாருலே நீ?, சொல்லிட்டுப்போ'' ன்னு மக்கமாருங்க கொரலு குடுக்கவும், 'மை நேம் இஸ் அலெக்சு, ஐ திங்க்கு அவுட்சைட் த பாக்சு' ன்னு சொல்லிட்டுப்போனானாம்.


இந்த சேதி ஊரெல்லாம் பரவிச்சாம். ராசாவும் எதிரிங்களோட பயத்தில சுலபமா செயிச்சிக்கிட்டே வந்தானாம். பாரசீகத்தில இவன் வர்றதை பாத்ததுமே ஒரு ராசா பயந்து ஓடிட்டானாம். நம்ம ராசா நேர மாளிகைக்குள்ள நுழைஞ்சானாம்.

'அம்மாடீ, நாம எல்லாரும் இன்னியோட முடிஞ்சம்' என அரச பெண்டு பிள்ளைகள்லாம் பதற, ஓடிப்போன ராசாவோட அம்மா மட்டும் பயப்படாம நம்ம ராசா முன்னாடி வந்து 'மவனே! அலெக்சு! நீதாய்யா இன்னிலேந்து என் மகன். ஓடிப்போன பயந்தவன் எனக்கு மகனே இல்லப்பா' ன்னு அழுதாளாம். நம்ம அலெக்சும் சென்டிமென்டுல ஜெர்க்காயி 'அம்மா!' ன்னு சொல்லிட்டு, அவங்கள ஒன்னும் பண்ணாம வேற நாடுகள பிடிக்க கிளம்பிட்டானாம். 

அந்த அம்மாதான் (Ada Caria) பெண்கள்ல முதல் அவுட்சைட் த பாக்சு திங்க்கராம்! 


AI தல கீழ நின்னு முயற்சி செஞ்சாலும் அதால இதெல்லாம் செய்யவே முடியாது. ஏய்! புர்ஞ்சிதா?! அதனால் பயப்படாம வாழுங்க பொதுமக்கா, உழைங்க IT மக்கா!


Productivity Gain because of AI ங்கிறதெல்லாம் பெரிய உருட்டு. Email வந்தப்பயும் இதேதான சொன்னானுவ!

(ஏன்னா அந்த gain அ எல்லாம் நாமதான் பொழுதுபோக்குல வேஸ்ட்டு பண்ணுவமே மக்கா! எங்ககிட்டயேவா? :-) 

Creativity differentiates us from machines. Let us focus confidently on that!


பேரன்புடன்,

பாபுஜி


கருத்துகள்

  1. AI பயன்பாடுகள் நம்மை நம்ப வைத்து அறிவை அழிக்கும் அறிவியல் என்பது உண்மை தான். நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...