முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கதவுகள், எல்லைகள்...

 


கதவுகள் இல்லாத உலகம், எல்லைகள் இல்லாத மனிதம்...


எனது நண்பர்,  ஐரோப்பாவில் வாழ்ந்த பத்தாண்டுகளில் வெளியில் செல்லும்பொழுதெல்லாம் அவரது வீட்டு கதவை பூட்டியதே இல்லை. 'என்ன இருக்கு பாபுஜி, எடுத்துட்டுப்போறதுக்கு?' என்பார்.

அவரது தேவைகள் குறைவு. வீட்டிலுள்ள பொருட்களும் அவ்விதமே. ஆனால் இந்தியாவிலிருந்து அவர்களது உறவினர்கள் அனைவரையும் ஐரோப்பிய சுற்றுப்பயணம் அழைத்துச்சென்று (அவர்களுக்கு தமிழ் உணவு சமைக்க ஒரு சமையற்காரரையும் சேர்த்துதான்!) மகிழ்ந்தார். 


சனி சீக்னாப்பூர் என்கிற இந்திய சிற்றூரில் யாரும் அவர்களது வீடுகளை பூட்டுவதில்லை. சனி பகவானின் பூமி என்கிற பய பக்தியினால் திருட்டுகளும் இல்லை.


அன்புக்கும் பக்திக்கும் பூட்டிய கதவுகளை திறக்கும் ஆற்றலும் உண்டு, கதவுகளை திறந்து வைத்தே வாழும் ஆற்றலும் உண்டு.

ஆனாலும் யதார்த்த வாழ்வில் 'பொருள் இருப்பவர்க்கும் இல்லாதவர்க்கும் உள்ள பொருளாதார இடைவெளியினால் (the chasm between Haves and Have nots):நம் கதவுகளை பூட்டி பாதுகாக்கும் அவசியத்தில் வாழ்கிறோம்.


வீடுகளுக்கு கதவு, பூட்டு...சரிதான். ஆனால. நம் மனித மனங்களுக்கு?


நம்மில் எத்தனை பேரின் மனது எப்போதும் திறந்தே கிடக்கிறது? 


எத்தனை பூட்டுக்கள் போட்டு பூட்டி பாதுகாத்தாலும் ஏன் பலருக்கு நிம்மதியான உறக்கமில்லை?

பூட்டிவிட்டு சாவியை எங்கு வைத்தோம் என தேடுபவர் எத்தனை பேர்?

எத்தனை பூட்டுக்கள் போட்டு பூட்டினாலும் அத்தனையையும் திறக்கும் சாவி ஒன்றும் நம்மிடமே உள்ளதை எத்தனை பேர் அறிவோம்?


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பது வெறும் பழமொழியா என்ன?


இல்லை என நிரூபித்திருக்கிறது இந்த மாதம் வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' தமிழ் திரைப்படம்.

வெகு சில திரைப்படங்களே நம் ஆன்மாவை தொடும். அதில் இப்படமும் ஒன்று.


என்னதான் இருக்கிறது நம்மிடம், எடுத்துச்செல்ல?


அன்பைக்கூட இங்கேயே தந்துவிட்டு செல்வோமே! என அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இளம் இயக்குநர் Abishan Jeevinth க்கு வாழ்த்துகள் பல. நலமுடன் வாழ்ந்து பல நல்ல படங்களை தர அன்பு உங்களை இட்டுச்செல்லட்டும்...

Hats off to the entire team for this wholesome heartwarmer!


பேரன்புடன்,

பாபுஜி


P.S.: ஒரு விதத்தில் நாம் அனைவருமே இவ்வுலகில் டூரிஸ்டுகள்தானே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...