முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிழைக்குமா?

நம் பூமியிலே ஆதியில் நிலம் கீறி எச்சமிட்டு பறவைகள் வளர்த்த பரப்பெங்கும் பச்சையாச்சி. பச்சை கண்டு படையெடுத்த பல்லுயிர்க்கூட்டம் இச்சையோடு புசித்து எச்சமிட்டு எச்சமிட்டு பச்சை பரவியாச்சி. புலன்குளிர்ந்து ஆகாயமும் ஆனந்தமாய் கண்ணீர் வடிக்க துளிபட்ட இடமெங்கும் தீயாய் தாவித்தாவி பச்சை பரவ காணுமிடமெலாம் பச்சையாச்சி. பல்லுயிரும் பச்சையோடு பல்கிப்பரவ ஓருயிர் மட்டும் மாற்றி சிந்தித்து ஓரிடத்தில் தங்கிப்போச்சி. குந்தித்தின்று கரைந்த பச்சை, அவ்வுயிரை காணாப்பச்சை தேடத்தள்ள, காணும் ஆவலி்ல் இவ்வுயிர்க்கூட்டம் பறவைபோல நிலம் கிளறி எச்சமிட மொத்தமும் மறுபடி பச்சையாச்சி. விலகிப்போன உயிரெலாம் பசிக்கு மட்டும் புசிக்கையிலே தங்கிப்போன கூட்டம் மட்டும் ருசிக்கும் சேர்த்து புசிக்கவும் பழகியாச்சி. மழையற்ற காலத்திலே பசியென்ன உறங்கிடுமா என அக்காலத்துக்கும், எக்காலத்துக்கும் சேர்த்து வைக்க இந்தக்கூட்டம் பல்லுயிரழித்து பயிர் வளர்க்க, நொந்த வானம் அழுத கண்ணீர் பூமி சேருமுன்னரே கடும் வெயிலில் ஆவியாச்சி. ஆவியோடு சேர்ந்து மிச்சமிருந்த பச்சையும் (நீரின்றி) அவிந்துபோச்சி. சோர்வடையா உழைப்போடு இந்தக்கூட்டம் மறுபடி மாற்றி சிந்

பத்தும் பறந்து போம்!

  முதியவர். களைத்திருந்தார். பசித்திருந்தார். தேசிய நெடுஞ்சாலை ஒன்றின் நாற்கர சந்திப்பில் சிவப்பு சிக்னல் நிறுத்தத்தில் ஒவ்வொரு வாகனமாய் கை நீட்டி யாசித்தார். ஒவ்வொரு முறை சிவப்பாக சிக்னல் மாறும்போதும் 90 விநாடிகள் வாகனங்கள் நிற்கும். தளர்ந்த உடலை விசை கூட்டி நகர்த்தி ஒவ்வொரு வாகனமாய் அணுகினார். அனுதாபப்பட்டு சிலர் சில்லறை தந்தனர். சிலர் ரூபாய் நோட்டுகள் தந்தனர். எனது வாகனத்தின் அருகில் அவர் வந்தபோது சிவப்பு விளக்கு பச்சையாக மாற நாற்பது நொடிகள் இருந்தது. கோடை சூரியன் உச்ச வெப்பத்தில் தலைக்கு மேலே. சன்னல் கண்ணாடியை கீழிறக்கி பணம் கொடுக்க முயன்றேன். 'ஐயா, பணம் வேணாமையா, பசிக்கு சாப்பிட ஏதாவது இருந்தா தாங்கய்யா' என ஈனமான குரலில் வேண்டினார். கடந்த பத்து வருடங்களாக வெவ்வேறு சிக்னல்களில் வெவ்வேறு மனிதர்கள் பணம் மட்டுமே விருப்பமாய் யாசித்து வேண்டுவதும், உணவு தந்தால் முகம் சுளிப்பதும் நடந்ததுண்டு.  ஆனால் முதல் முறையாக உணவு மட்டுமே யாசிக்கும் மனிதர்... அவசரமாய் என் பையில் தேடினேன். அன்றைய மதிய உணவு பழங்கள் மட்டுமே என முடிவு செய்து எடுத்து வந்திருந்தது அப்போதுதான் நினைவில் வந்தது. கையில்

ஒரு ப்ரயாண கதா

  அதிகாலை வேலையில் பெங்களூரு பெருநகர சாலைகளில் பரவிக்கிடக்கும் மலர் இதழ்கள் கொள்ளை அழகு.  விழுந்த மலர்கள், வெயில் ஏற ஏற வாகன இரைச்சல் கூட கூட மெல்ல காணாமல் போகும் மலர்கள், மறுநாள் காலையில் மேலும் புதிதாய், மேலும் மெருகு கூடி குவிந்து கிடக்கின்றன அதே ஒரங்களில். நகரின் பெரிய பூங்காக்களை விட சிறிய பூங்காக்களில் இன்னும் நெருக்கமாய், சிநேகமாய் இயற்கை. எத்தனையோ புதிதாய் கற்று காசு பண்ணும் பேரூர் நம்முடைய தமிழ் சாம்பாரை மட்டும் இன்னும் முழுதாய் செய்ய கற்கவில்லை! மரக்குடை பிடித்த சாலை ஓரங்களும் மத்திய தடுப்பு மர வரிசைகளும் வெப்பத்தை உள்வாங்கி நமக்கு குளுமையை மட்டும் வழங்குகின்றன பெரும்பாலான இடங்களில். ஏனோ மற்ற பெரு நகரங்கள் இதை முயலவில்லை இன்றுவரை... குப்பை குவியல்கள், குடலைப்பிரட்டும் நாற்றங்கள் - அறவே இல்லை. எல்லா வணிக நிலையங்களிலும் அவசர அவசரமாக ஆங்கில பெயர்களுக்கு இணையாக கன்னட பெயர்களும் கல்லடிக்கு பயந்து பெருகிக்கொண்டிருக்கின்றன. மருந்துக்கடைகள் பெட்டிக்கடைகள் போல ஏராளமாய்... காலை மாலை வேளைகளில் உணவகங்களில் இளசுகளின் கூட்டமென்றால் இடைப்பட்ட பொழுதுகளில் ஏனைய சனத்திரளும் நகரின் அனைத்து இடங்

ரொம்ப டீப்பும்மா!

அண்ணலும் நோக்க, அவளும் நோக்க செம்புலப்பெயல்நீர் போலவே... 'எங்க ஊரு காதல பத்தி நீ இன்னா நெனைக்கிற?' என ஒரு வெளிநாட்டுப்பெண் கேட்க, 'எங்க ஊரு காதல் போல அது ஆழமில்லம்மா' ன்னு இளையராஜா தொடங்க, "ஆழமுன்னா என்னா?' என வெ.நா.பெண் கேட்க, " அது ரொம்ப டீப்பும்மா' ங்கிறார் ராஜா. நம் இன்றைய தலைமுறை இந்த கான்வர்சேஷனை உள்ளூருக்கு கொண்டு வந்தாச்சி. காணாமலே காதல், கண்டதும் காதல், மோதலினால் காதல் என பல பரிமாணங்களை தாண்டி பயணிக்கும் காதல் எனும் பேருணர்வு, வளர்ந்த நாடுகள் நம் சிறார்கள் மீது நடத்தும் சமூக வலைதள தாக்குதல்களால் உருமாறிக்கொண்டிருக்கிறது வெகுவேகமாய். காதல் கைகூடாது போவதும், கனிந்து கடிமணமாவதும், சமூக ஏற்புடன் திருமணமாவதும் தொல்காப்பிய காலத்திலிருந்து தொடர்வது இப்போது எப்படி மாறிக்கொண்டிருக்கிறது? நட்பு அல்லது காதல் என்கிற இரண்டே கட்டங்களில் பாண்டியாடிப்பழகிய பல தலைமுறைகளின் வழி வந்த நம் மண்ணின் இளைய எதிர்காலம் இப்போது காதலை ஊடறுத்து எழுப்பியுள்ள Maze ஐ எட்டிப்பார்ப்போம் இப்போது: Situationship - நட்புக்கு மேலே, காதலுக்கு கீழே, ஆனால் காமம் உண்டு. சூழல் மாறினால் இ

இறை தரிசனம்

எண்ணெய் தேய்த்து படிய வாரிய தலை. தலையில் க்ளிப்பின் பிடிப்பில் ஒரு துண்டு மல்லிகைச்சரம். மிக மிக நேர்த்தியாக தொடுக்கப்பட்ட சரம். அணிபவரை மனதில் நிறைத்து தொடுப்பவர் தொடுத்த சரம். அதில் பொங்கி வழியுது தாயன்பு. ஆகாய நீல மேல்சட்டையெங்கும் கரு நீல சதுரங்கள். கரு நீலத்தில் நனைத்த கீழாடை. சைக்கிளின் முன்னிருக்கையில் அச்சிறுமி. பின் இருக்கையில் நேர்த்தியாக வெட்டப்பட்ட, படிய வாரப்பட்ட தலைமுடி கொண்ட அவளது அண்ணன், சிறுவன்,  அவளது சீருடை வண்ணத்திலேயே அவனதும். இருவரையும் சுமந்த சைக்கிளை கவனமாக மிதித்து முன்செலுத்தும் தகப்பன், ஏழ்மை அப்பிய முகம், வறிய உடை, கிள்ளியெடுக்க சதையில்லை.  அந்த காலை வெயிலில் ஒரு தேசிய நெடுஞ்சாலையின் நாற்கர சந்திப்பில், அவசர கதியில் விரையும் எண்ணற்ற வாகன மனிதர்களின் இடையில் ஒளிரும் அவனது கண்கள், அதில் தெரிந்த எச்சரிக்கை உணர்வு... இயந்திர ஆற்றலின் துணை கொண்டு விரைந்துகொண்டிருந்த சனத்திரளில் தன் சொந்த ஆற்றலில், தன் எதிர்காலத்தை தன் சைக்கிளில் முன்னும் பின்னுமாய் அமர்த்தி நிகழ்கால நொடியில் மட்டுமே கவனத்துடன் மிதித்துச்சென்ற அவனது முகம் போன்ற அமைதியான, நம்பிக்கை தரும், மகிழ்வு த

தமிழ்நாடு - ஒரு புதிய அறிமுகம்!

 Tamil Nadu - A primer  இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு ஒன்று 1980களின் தமிழகத்திற்கு இருந்தது. இன்றும் அந்த தனிச்சிறப்பை தக்க வைக்க போராடத்துவங்கியுள்ளது! இந்தி எதிர்ப்பு போராட்ட சூடு தணிவதற்கு முன்னரே தஷிண பாரத் இந்தி பிரச்சார சபாக்கள் உற்சாகமாக இயங்கிக்கொண்டிருந்தன. கற்க வரும் மாணவர்களின் கூட்டம் இன்றுவரை பெருகிக்கொண்டே உள்ளது; அவர்கள் என் னதான் தேர்வுத்தாளை மட்டுமே மையமாக வைத்து கற்பிப்பதை தொடர்ந்தாலும் :-)  ஆத்தாடீ மாரியம்மாஆஆஆஆ எனத்தொடங்கி, முருகா நீயெல்லாம் தெய்வமில்லை! என தொடர்ந்து, கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன் என உருகி, திருச்செந்தூரின் கடரோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கத்தை நினைவு படுத்தி, புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களை எங்கள் புருஷோத்தமன் புகழ் பாட அழைத்து,   பாட்டும் நானே பாவமும் நானே என சிவனின் பரிமாணங்களை உணர்த்தி, உள்ளம் உருகுதையா என உருகி, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என பேட்டை துள்ளி, நல்ல மனதில் குடியிருக்கும் நாகூராண்டவா என நன்றி விளித்து, வானுக்குத்தந்தை எவனோ மண்ணுக்கும் தந்தை அவனே என விளக்கி, ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்

காதலை காதலிப்போம்!

அவள் பேரழகி.  வானெங்கும் தங்க விண்மீன்கள் கண்கள் மூடி கடல் குளிக்க சூரியன் கண்விழித்தெழும் நேரம்... நட்புகளுடன் கடற்கரையோர தங்கநிறப்பொழுதொன்றில் களிநடனமாடி, வீடு திரும்ப சாலையில் நான்கு சக்கர வாகனத்தை உச்சத்தில் முடுக்க... விபத்து நிகழ்கிறது. அழகிக்கு தலையில் அடி. நிகழ்கால நினைவுகள் மறந்துபோய் செயல் அளவில் சின்னஞ்சிறுமியின் மன முதிர்வோடு மட்டும் கண் விழிக்கிறாள். ஒரு நாள் கவனிப்பின்றி திறந்திருந்த மருத்துவமனை வாயில் வழி வெளியேறி பெருநகர சாலையில் கால் பதிக்க, நகரின் கோரக்கரமொன்று அவளை பாலியல் தொழில் நடக்கும் விடுதியொன்றில் விற்றுவிடுகிறது. அவன் பேரழகன்.  அனாதை. தி்ருமணம் ஆகாதவன், ஊட்டியில் ஒரு பள்ளியின் தலைமைப்பொறுப்பில். ஆனாலும் அவனது விருப்பு வெறுப்புகளை மென்மையாக மட்டுமே வெளிப்படுத்துபவன். ஒரு விடுமுறையில் அதே பெருநகரில் நண்பனை சந்தித்து... நண்பனின் தூண்டுதலால் மதுவருந்தி பின் நண்பனின் இழுப்பிற்கு தலையாட்டி அவனுடன் ஒரு பாலியல் விடுதிக்கு செல்கிறான். பேரழகி-பேரழகன் சந்திப்பு: பாலியல் விடுதியில் அந்த குமரி வடிவம்-குழந்தை உள்ளம் கொண்ட பேரழகியை சந்திக்கிறான். அந்த இரவு அவளுடன் தங்கி, அவள