முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு - ஒரு புதிய அறிமுகம்!

 Tamil Nadu - A primer 



இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு ஒன்று 1980களின் தமிழகத்திற்கு இருந்தது. இன்றும் அந்த தனிச்சிறப்பை தக்க வைக்க போராடத்துவங்கியுள்ளது!

இந்தி எதிர்ப்பு போராட்ட சூடு தணிவதற்கு முன்னரே தஷிண பாரத் இந்தி பிரச்சார சபாக்கள் உற்சாகமாக இயங்கிக்கொண்டிருந்தன. கற்க வரும் மாணவர்களின் கூட்டம் இன்றுவரை பெருகிக்கொண்டே உள்ளது; அவர்கள் என் னதான் தேர்வுத்தாளை மட்டுமே மையமாக வைத்து கற்பிப்பதை தொடர்ந்தாலும் :-) 


ஆத்தாடீ மாரியம்மாஆஆஆஆ எனத்தொடங்கி, முருகா நீயெல்லாம் தெய்வமில்லை! என தொடர்ந்து, கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன் என உருகி, திருச்செந்தூரின் கடரோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கத்தை நினைவு படுத்தி, புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களை எங்கள் புருஷோத்தமன் புகழ் பாட அழைத்து,   பாட்டும் நானே பாவமும் நானே என சிவனின் பரிமாணங்களை உணர்த்தி, உள்ளம் உருகுதையா என உருகி, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என பேட்டை துள்ளி, நல்ல மனதில் குடியிருக்கும் நாகூராண்டவா என நன்றி விளித்து, வானுக்குத்தந்தை எவனோ மண்ணுக்கும் தந்தை அவனே என விளக்கி, ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் என தேவ நம்பிக்கை தந்து, மண்ணுலகில் தேவன் இன்று இறங்கி வருகிறான் என குதூகலித்து, கடவுளை நம்புபவன் முட்டாள் என சொல்லித்தந்து, இறைபுகழ் பாடும் கதாகாலாட்சேபங்கள் கேட்கவைத்து, சட்டி சுட்டதடா கை விட்டதடா என்று நொந்து, வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ என வாழ்வின் நிலையாமையை உணர்த்தி, இத்தனை இசைக்கூவல்களுக்கு இடையில் (லவுட் ஸ்பீக்கர் ஐ மீன்!) நல்ல கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள் என கவனமாய் வளர்த்து, இயற்கை வளங்களை இறைக்கு சமமாய் போற்றி, மணப்பாறை மாடு கட்டி என விவசாயத்தை போற்றி...


ராமேசுவரசுவாமி கோவிலில் தீர்த்தமாட கூடும் கூட்டம் வேளாங்கண்ணி திருவிழாவிற்கும் செல்லும், நாகூரின் சந்தனக்கூடையும் தரிசிக்கும், திருச்செந்தூரின் சூரசம்ஹாரத்திற்கும் ஆர்ப்பரிக்கும்.


இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களும் முயற்சிக்காத இந்த மாடலுக்கு திராவிட மாடல் என பெயரிட்டு அழைப்பதை விட 'மானுட மாடல்' என அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.


"அது என்ன இந்த வாழ்வியலை தக்க வைக்க இப்போது போராடத்துவங்கியுள்ளதுன்னு பொசுக்குன்னு சொல்லீட்டீக?" என்று கேட்போருக்கு, 

பெருவணிகமெனும் ஒட்டகம், மானுட மாடல் புழங்கும் நம் நிலப்பரப்பில் மெல்ல தலை நுழைத்து இப்போது கூடாரத்தையே அரசியல் வழி அசைக்க முயல்வதின் தாக்கந்தேன்!

விளை நிலங்களை ஊடறுத்து எட்டுவழிச்சாலைகள், சூரிய மின்னறுவடை பூங்காக்கள், காற்றாலைகள் என ஒட்டகங்களின் குளம்பொலிகள் நம் நிலப்பரப்பு முழுதும் எதிரொலிப்பது உங்கள் காதுகளை எட்டவில்லையா?


பேரன்புடன்,

பாபுஜி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்