முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கொடுக்காப்ளி ரயில்!

நேற்று தோட்டத்திலிருந்து கொடுக்காப்புளி பழங்கள் பறித்து வந்திருந்தேன். அப்பாவுக்கு எண்பது+  அம்மாவும் 80ஐ தொட்டுவிடும் தூரத்தில். பழங்களை பகிர்ந்து உண்டோம். அதன் பின், 'எப்படி இருந்தது சுவை?' என்றேன். அவர்களது விடை நான் சற்றும் எதிர்பாரதது... 'பள்ளிக்கூடம் போம்போது மத்யான சாப்பாடு டப்பாவ காலி பண்ணிட்டு மதிய உணவு இடைவேளயில வேட்டைக்கு போவோம்.  அப்பல்லாம் பையில அரையணா இருந்தாலே பெரிசு... கொடுக்காப்புளி, நெல்லிக்கா, மாங்கா, பாலாப்பழம், வெள்ளரிப்பத்தை, எலந்தை, எலந்த வடை எல்லாம் பள்ளிக்கூட வாசல்லயே கிடைக்கும். பெரும்பாலும் வயசான பெண்கள்தான் கூறு கட்டி வச்சிட்டு உக்காந்திருப்பாங்க. வாங்கி தின்னுட்டு வாய்க்கா பக்கம் போனா அங்கே ஈச்சம்பழம் காச்சிரிக்கும். இப்ப கிடைக்கிற பேரிச்சை இல்ல அது. குத்துச்செடி மாதிரி இருக்கும். அதில் ஆரஞ்சு இல்லன்னா சிவப்பு வண்ணத்தில ஈச்சம்பழம் இருக்கும். பேரிச்சைல பாதிக்கும் பாதிதான் அதோட அளவு. அப்புறம் பாலாப்பழம் விப்பாங்க. சின்னதா வெள்ளை நிறத்தில சதையும் வெள்ளையாவே இருக்கும். அத சாப்பிடுவோம். ஒவ்வொரு சீசனுக்கு வகை வகையா பழங்க. வேப்பம்பழம் கூட தின்னுருக்கோம

Quit India? தமிழ் பதிவு.

  Can it be more sacred than this?! Food . இந்தந்த பருவத்துக்கு இதை இதை விதைக்கணும் என்பது விவசாயியின் கைகளிலில்லை. இந்தந்த பருவத்துக்கு இதை இதை சாப்பிடணும் என்பது நுகர்வோர் சிந்தனையிலும் இல்லை. இவர்களிருவருக்கும் எதை எப்போது எங்கு எப்படி செய்யவேண்டுமென மூளைச்சலவை செய்தது பெருவணிகம். அது போடும் லாபக்கணக்கில் சிக்கித்தள்ளாடுது நம் அனைவரின் வாழ்வும் நலமும். காந்தி கனவு கண்ட சுதந்திர (கி)ராம ராஜ்யம் பற்றி அறிந்திருப்பபோம்... 'என்று நள்ளிரவில் நிறைய நகைகள் அணிந்த இளம்பெண் பயமின்றி நம் சாலைகளில் துணையின்றி நடமாட முடிகிறதோ அன்றே நாம் சுதந்திரம் பெறுவோம்' என்றார். இன்று அவர் இருந்திருந்தால் அவரது கனவு வேறு மாதிரி இருந்திருக்கும்... 'என்று நம் விவசாயிகள் தங்களது உணவுத்தேவைகளை தம் நிலங்களில் தாங்களே விளைவித்துக்கொண்டு, தமக்கு எஞ்சியதை என்ன விலைக்கு (அருகில் உள்ள) மற்றவர்க்கு விதைகளாகவோ விளைபொருட்களாகவோ கொடுக்கலாம் என முடிவெடுக்கும் உரிமையுடன் வாழ்கிறார்களோ அன்றே நம் நாடு தன்னிறைவான நாடாக மாறும்.' அப்போ சுதந்திரம்?  விளையாடாதீங்க பாஸ். அதுக்கெல்லாம் இன்று போராட காந்திக்குக்கூட நே

எந்து ஒரு மயக்கம்!

  பாலகுமாரனின் அகல்யா, சிவசுவின் அகல்யா, மரண வேதனையில் சிவசுவை கண்களால் விளித்து ஒரு பாடல் படிக்கச்சொல்கிறாள். சிவசு படிக்கிறான்: "ஈலோக கோளத்தில் ஒரு சிரா சந்த்யயில் இன்னும் ஒலிக்க நாம் கண்டு முட்டி, தெரியாமல் முட்டிக்கொண்டது மாதிரிதானே  சந்தித்தோம். தெரியாமல் முட்டிக்கொண்டு, சிதறினது மாதிரிதானே பிரிந்தோம். மறுபடி அவ்விதமே நிகழட்டும். போய்வா அகல்யா, ஆல் த பெஸ்ட். வேறெங்கேனும் எப்போதாவது சந்திக்க முடிகிறதா என்று பார்ப்போம். இந்தக்கோளத்திலோ அல்லது வேறு எங்கானுமா பார்க்கமுடிகிறதா என்று தவிப்போம்.  பார்த்தால் புரிந்துகொள்வோம்!" முதல்முதலாய் உங்களது கனவுப்பிரதேசத்துக்கு பயணம் செல்கிறீர்கள். அந்த இடம் வரை பஸ்ஸோ ரயிலோ செல்லும் என்பதை தவிற வேறொன்றும் தெரியாது உங்களுக்கு. அந்த ஊர் போனதும் என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கும்? அதற்கெல்லாம் என்னென்ன தகவல்கள் வேண்டியிருக்கும்? சுச்சூ, கக்கா போவதற்கான இடம் முதல், என்னென்ன காணலாம்? எங்கெங்கு காணலாம்? எந்த வாகனத்தில் போகமுடியும்? எப்போ? நல்ல உணவு எங்கு கிடைக்கும்? நல்ல தேநீர் / சிற்றுண்டி எங்கு கிடைக்கும்? நல்ல விடுதி எங்குள்ளது? நினைவுப்ப

வெந்து தணிந்தது காடு

  சோலைவனம் பாலையானதே! மெட்ராஸ் சென்னை ஆயாச்சி. பாம்பே மும்பை ஆயாச்சி. கல்கத்தா கொல்கொத்தா ஆயாச்சி. பேங்களூர் பங்களூரு ஆயாச்சி. நியூ டெல்ஹி நயீ தில்லி ஆயாச்சி. பிரிட்டிஷ் அடிமைத்தளைகளில் இருந்து விடுபட்டபின் நாம் செய்த இந்த பெயர் மாற்றங்கள் நாம் நம் வேர்களை மீட்டெடுக்க முனைப்புடன் இருப்பதை உலகுக்கு உணர்த்தியது. ஏனோ தெரியவில்லை, நாம் நம் சுய அடையாளத்தை மீட்டெடுப்பது இந்த பெயர் மாற்றங்களுடன் நின்றுபோய்விட்டது... அடிமை ஆதிக்கத்தின் அடையாளங்களை அழிக்க நினைத்து, வெறும் தோல் அளவிலேயே மாற்றங்கள் நிகழ்த்தி, "இதுதான் புதிய இந்தியா, தேச பக்தி இந்தியா" என மார் தட்டி, தேச பக்தியை பெருக்க பீட்சாவும் பர்கரும் கோலாவும் உண்டு வல்லரசுக்கனவில் நம் நாடும் அமெரிக்கா போல, நம் மக்களும் அமெரிக்கர்கள் போல எல்லா விதங்களிலும் மாறிக்கொண்டிருக்கிறோம். ஒரு ஜல்லிக்கட்டு போராட்ட நிகழ்வு, அதன் பின் சில காலம் கோலா பர்கர் பீட்சா வேண்டாமென மயான வைராக்யம். போராட்டத்தின் ஈர்ப்பு குறைந்தவுடன் மீண்டும் பர்கர் கோலா பீட்ஸா ஷவர்மா என ஓடிக்கொண்டிருக்கிறோம். சுதந்திர இந்தியாவின் மலைத்தொடர்கள், நமது நுரையீரலான மலைத

இதனால் சகலமானவர்களுக்கும்...

  முரண்கள் நிறைந்த ஒரு பெருஞ்சமூகத்தில் சீராய் இயங்கும் சில புள்ளிகளில் இவனும் ஒருவன். தன் பெயரை வெளியிட வேண்டாமென கேட்டுக்கொண்டதால் இவனை "இவன்" என்றே அழைக்கலாம். கண் முன்னே வாழ்வின் தடம் பிறழ்வதை கவனிக்கும் வயது இல்லாவிட்டாலும் தன்னைச்சுற்றி  ஏதோ தவறாகிக்கொண்டிருப்பதை இவனால் சிறு வயதிலேயே உணர முடிந்திருந்தது, ஆனால் பகிற, வினா எழுப்ப, விடை தர, உரையாட யாருமில்லை. இத்தனைக்கும் அவன் வசித்த ஊரில் அவன் வயது சிறுவர்கள் ஏராளமாய் இருந்தாலும் இவன் பேச முயன்ற முரண்கள் யாருக்கும் புரிபடவில்லை. எனவே தனிமையில் தன்னோடு தானே உரையாடத்தொடங்கினான். அன்று தொடங்கியது, பல ஆண்டுகள் தொடர்ந்தது. ஒவ்வொரு கனத்த சிக்கலும் சமூகத்தில் முளைத்து வளரும்போதெல்லாம் எங்காவது ஒரு தேநீர் விடுதியில் இவன் தனியே ஆழ்ந்த சிந்தனையில் மௌனமாய் உரையாடிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.அப்படி சந்தித்திருந்தாலும் மனதில் பதியாமல் நீங்கள் நகர்ந்து, கடந்து சென்றிருக்கவே வாய்ப்பு மிகுதி.  பல காலம் விலையின்றி கிடைத்த அனைத்தும் இன்று விலை தந்தாலும் கிடைக்காதது, விலையுயர்ந்தவை என அறிமுகமானவை பல விலை மலிவாய் அனைவர்க்கு

பார் பர்ஸ்டர் பர்னாஸ் இணைந்து கலக்கப்போகும்...

ஏன் மரபீனிக்கடுகு வேண்டாம் என்கிறோம்? மரபீனிக் கடுகு = இயற்கை கடுகுக்கு அறுவைச்சிகிச்சை செய்து, மூன்று மரபணுக்களை உள்ளே வைத்து தைத்து உண்டாக்கப்பட்டது. இந்த மூன்று மரபணுக்கள்,  மண்ணில் இருக்கும் பேசில்லஸ் அமைலொ லிக்யுபாசியன்ஸ் என்ற பாக்டீரியாவை அறுவைச்சிகிச்சை செய்து அதிலிருந்து பிடுங்கப்பட்டவை.  ‘பர்னாஸ்’, ‘பர்ஸ்டர்’, மற்றும் ‘பார்’ என்பதே அவற்றின் பெயர்கள். பர்னாஸ் ஜீன் - ஆண் பூக்களுக்கு வளர்ச்சி ஊக்கி. பர்ஸ்டர் ஜீன், ஆண் பூக்கள் மலடாவதை தடுக்கும். பெண்பூக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். பார் ஜீன், குளுஃபோசினேட் என்ற களைக் கொல்லியை பயிர்கள் மீது தெளிக்கும்போது கடுகுப்பயிரை மட்டும் காக்கும். DMH-11 = இயற்கை கடுகு + பார் ஜீன் + பர்னாஸ் ஜீன் + பர்ஸ்டர் ஜீன். கோவணம் கூட தேவையற்ற கடுகுக்கு இத்தனை ஜீன்ஸ் தேவையா?! நியாயமா?! இனி DMH-11 வளருமிடமெல்லாம் குளுஃபோசினேட் தெளிப்பும் வளருமே! பல்லுயிரை சிதைக்குமே! தேவையா? நியாயமா?! உயிர்ப்பண்மயம் என்பது அவசரமாக அவசியமாக பாதுகாக்கப்படவேண்டிய நேரத்தில் குளுஃபோசினேட் உயிர்க்கொல்லியை தெளித்து நமக்கு வேண்டாத அனைத்தையும் அழித்து (களை எனப்படும் ஏனை

மின்மினிப்பூச்சியொன்றின் இரவுக்கவிதை

ஒற்றைப்பார்வையில் உன்னுள்  நான் தொலைந்த நொடியில் நீயும் என்னுள்ளே தொலைந்தாய். நானும் நீயும் நாமாகி பல்கிப்பெருகி பூமி முழுதும் நம் குழந்தைகளை இட்டு நிரப்பி... ஒற்றை வான் கூரையின் கீழ் ஒற்றைக்கதிரவன் ஒற்றை நிலவின் வெளிச்ச வழிகாட்டுதலில் சுழலும் ஒற்றை பூமியில்தான் நாமிருக்கிறோம், நமது குழந்தைகளும்தான். ஆனாலும்... உனக்கென ஒரு பூமி எனக்கென ஒரு பூமி உனக்கென ஒரு வானம் எனக்கென ஒரு வானம் உனக்கென ஒரு கதிரவன் எனக்கென ஒரு கதிரவன் உனக்கென ஒரு நிலவு எனக்கென ஒரு நிலவு இன்று நம் ஆயிரமாயிரம் குழந்தைகளுக்கு ஆயிரமாயிரம் பூமி, வானம், கதிரவன், நிலவு... ஒன்று பலவாகி பலதும் ஒன்றாகி பின்பு பலவாகி... ஒற்றைக்கதிரவனும் ஒற்றை நிலவும் வானமும் பூமியும்கூட ஒற்றைக்கருந்துளை கக்கிய எச்சம்தானாம். அந்த ஒற்றைக்கருந்துளையை கக்கியதெதுவோ அதுவே இறையோ? அறிவியலின் எல்லைக்கு வெகு தொலைவில் எங்கோ இருந்தபடி இருந்து பார்த்துக்கொண்டிருக்கிற அந்த இறையை நாம் கற்பிதம் கூட செய்யமுடியாத அண்ட பேரண்டக்கோவிலில் அமர்த்தி வைத்தது யாரோ?! இதற்கு விடை எனது புலனுக்கு எட்டாதிருக்கலாம். ஆனால் இதனை காரணம் காட்டி நான் எனது வெளிச்சத்தை நிறுத்தப்போவதி