முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பார் பர்ஸ்டர் பர்னாஸ் இணைந்து கலக்கப்போகும்...



ஏன் மரபீனிக்கடுகு வேண்டாம் என்கிறோம்?

மரபீனிக் கடுகு = இயற்கை கடுகுக்கு அறுவைச்சிகிச்சை செய்து, மூன்று மரபணுக்களை உள்ளே வைத்து தைத்து உண்டாக்கப்பட்டது.

இந்த மூன்று மரபணுக்கள்,  மண்ணில் இருக்கும் பேசில்லஸ் அமைலொ லிக்யுபாசியன்ஸ் என்ற பாக்டீரியாவை அறுவைச்சிகிச்சை செய்து அதிலிருந்து பிடுங்கப்பட்டவை.  ‘பர்னாஸ்’, ‘பர்ஸ்டர்’, மற்றும் ‘பார்’ என்பதே அவற்றின் பெயர்கள்.

பர்னாஸ் ஜீன் - ஆண் பூக்களுக்கு வளர்ச்சி ஊக்கி.

பர்ஸ்டர் ஜீன், ஆண் பூக்கள் மலடாவதை தடுக்கும். பெண்பூக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

பார் ஜீன், குளுஃபோசினேட் என்ற களைக் கொல்லியை பயிர்கள் மீது தெளிக்கும்போது கடுகுப்பயிரை மட்டும் காக்கும்.

DMH-11 = இயற்கை கடுகு + பார் ஜீன் + பர்னாஸ் ஜீன் + பர்ஸ்டர் ஜீன்.

கோவணம் கூட தேவையற்ற கடுகுக்கு இத்தனை ஜீன்ஸ் தேவையா?! நியாயமா?!

இனி DMH-11 வளருமிடமெல்லாம் குளுஃபோசினேட் தெளிப்பும் வளருமே! பல்லுயிரை சிதைக்குமே! தேவையா? நியாயமா?!

உயிர்ப்பண்மயம் என்பது அவசரமாக அவசியமாக பாதுகாக்கப்படவேண்டிய நேரத்தில் குளுஃபோசினேட் உயிர்க்கொல்லியை தெளித்து நமக்கு வேண்டாத அனைத்தையும் அழித்து (களை எனப்படும் ஏனைய உயிரிகளுக்கான உணவை அழித்தால் அந்த உயிரிகளும்தானே அழியும்? இதுவும் genocide தானே?!) மரபீனி கடுகை மட்டும் காப்பாற்ற அறிவியல் வணிகத்ததுக்கு ஏன் அமோக ஆர்வம்?!

நம்மாழ்வார் ஐயா சொன்னது போல நாமெல்லோருமே ஒரு விதத்தில் அரிசி, கோதுமை என இரு பயிர்களை மட்டுமே உண்ணும் பூச்சிகள்தானே? நம்மிடமிருந்து இந்த பயிர்களை காக்க யாராவது நம் மீது பூச்சுக்கொல்லி எனச்சொல்லி நச்சு தெளித்தால் சரியா??!!

வணிக அறிவியல் நம்மை நோயின்றி நலமுடன் வாழவும் விடாது, நோய் தந்து ஆனால் நோயினால் விரைவில் சாகவும் விடாது நட்பே. ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் ஒற்றைப்பயிரானாலும் இவர்களுக்கு பணப்பயிரே! நாம் சிறு வயதிலேயே நச்சு பாதிப்புகளால் நோயுற்று நீண்ட நாள் நோயுடனே வாழவேண்டும் என்கிற இவர்களது உயரிய நோக்கம் நம் சிற்றறிவுக்கு எல்லாம் எட்டுமா என்ன?! மரபீனிக்கடுகு மட்டுமல்ல, மரபீனி விதைகள் அனைத்துமே இந்த வணிகப்பொருளாதாரத்தில் நம்மை மென்மேலும் சிக்கவைக்கும் கண்ணிகள்!

தீதும் நன்றும் பிறர் தர வாரா.

சிந்திப்போமா?




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...