முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எந்து ஒரு மயக்கம்!

 


பாலகுமாரனின் அகல்யா, சிவசுவின் அகல்யா, மரண வேதனையில் சிவசுவை கண்களால் விளித்து ஒரு பாடல் படிக்கச்சொல்கிறாள். சிவசு படிக்கிறான்: "ஈலோக கோளத்தில் ஒரு சிரா சந்த்யயில் இன்னும் ஒலிக்க நாம் கண்டு முட்டி, தெரியாமல் முட்டிக்கொண்டது மாதிரிதானே  சந்தித்தோம். தெரியாமல் முட்டிக்கொண்டு, சிதறினது மாதிரிதானே பிரிந்தோம். மறுபடி அவ்விதமே நிகழட்டும். போய்வா அகல்யா, ஆல் த பெஸ்ட். வேறெங்கேனும் எப்போதாவது சந்திக்க முடிகிறதா என்று பார்ப்போம். இந்தக்கோளத்திலோ அல்லது வேறு எங்கானுமா பார்க்கமுடிகிறதா என்று தவிப்போம்.  பார்த்தால் புரிந்துகொள்வோம்!"

முதல்முதலாய் உங்களது கனவுப்பிரதேசத்துக்கு பயணம் செல்கிறீர்கள். அந்த இடம் வரை பஸ்ஸோ ரயிலோ செல்லும் என்பதை தவிற வேறொன்றும் தெரியாது உங்களுக்கு.

அந்த ஊர் போனதும் என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கும்? அதற்கெல்லாம் என்னென்ன தகவல்கள் வேண்டியிருக்கும்?

சுச்சூ, கக்கா போவதற்கான இடம் முதல், என்னென்ன காணலாம்? எங்கெங்கு காணலாம்? எந்த வாகனத்தில் போகமுடியும்? எப்போ? நல்ல உணவு எங்கு கிடைக்கும்? நல்ல தேநீர் / சிற்றுண்டி எங்கு கிடைக்கும்? நல்ல விடுதி எங்குள்ளது? நினைவுப்பரிசுகள் எந்த கடைகளில் நன்றாக இருக்கும்?

எத்தனை எத்தனை கேள்விகள்? எத்தனை பேரிடம் விசாரித்திருப்போம்? எவ்வளவு உறவுகளை / நட்புகளை புதுப்பித்திருப்போம்? எத்தனை புதிய மனிதர்களுடன் உரையாடியிருப்போம்?

இவை எல்லாம் அல்லது இவை எதுவுமே இல்லாத நவயுக டிஜிடல் முகங்களும் குரல்களும், நமக்கு அறிமுகமே இல்லாத முகங்களும் குரல்களும், தரும் தகவல்களை நம்பி செய்யும் பயண அனுபவங்கள்... மெய்யாலுமே experiential events தானா?!

டிஜிடல் "துணைவருடன்" உலகெங்கும் செல்லலாம், ஏற்கனவே பலரும் மென்று துப்பியதை நம்பி சென்று ஏமாறலாம் அல்லது அவர்களது வழிகாட்டுதல்தான் உச்ச அனுபவம் என்று அவர்களது அனுபவங்கள் வழி மட்டுமே பயணித்து அதற்குள்ளே முடங்கிக்கொண்டு படங்களெடுத்து ஊடக சமூகங்களில் பகிர்ந்து, லைக்ஸ் பல வந்தால் தம் பயணம் நற்பயணமென்றும் இல்லாவிட்டால் இல்லை என்றும் முடிவுசெய்து... தனியே தன்னந்தனியே என எங்கு சுற்றியும் மகிழ்வற்றிருப்பதுதான் experiential livingஆ?

இதற்கு பதில்கூட கூகுளாண்டவனத்தான் கேட்போமோ?!

கேரளாவில் இருந்து வேண்டுதல்களை நிறைவேற்ற ஒரு ஆம்னி பஸ்ஸில் உறவினர்களை ஏற்றிக்கொண்டு வேளாங்கன்னி, கன்னியகுமரி வந்த ஜேம்ஸ், அதே பேருந்தில் உறவுகளோடு ஊர் திரும்பும்மோது மட்டமதியான வெயிலில் அனைவரோடும் சேர்ந்து அயர்ந்து உறங்குகிறார். நண்பகல் வெயில் தகிக்கிறது. திடீரென கண்விழிக்கும் ஜேம்ஸ், ஓட்டுனரிடம் வண்டியை நிறுத்தச்சொல்லி இறங்குகிறார். மொபைல் டவருக்கு கூட தெரியாத அத்துவானக்காடு அது.

இயற்கைக்கடனை கழிப்பதற்காக என்று எண்ணி வண்டியில் அனைவரும் காத்திருக்க, ஜேம்ஸ் அவர் பாட்டுக்கு மிகப்பழகிய வயல்கள் போல நடந்து சென்று ஒரு கிராமத்தை அடைந்து நேராக அங்கு உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து கொடியில் காயந்ந்து கொண்டிருக்கும் லுங்கியை கட்டிக்கொண்டு வேட்டியை உருவி கொடியில் போட்டு, அலமாரி திறந்து முழுக்கை சட்டை ஒன்றை எடுத்து அணிந்துகொண்டு அந்த வீட்டிலிருக்கும் பெண்ணை பெயர் சொல்லி அழைத்து தேநீர் கேட்கிறார்.

அந்தச்சிறுகிராம வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து அவரை பார்க்க, அவர் மிக இயல்பாய் மாட்டுக்கு தீவனம் வைத்துவிட்டு வாசலில் நின்றிருக்கும் டிவிஎஸ் மோப்பெட்டை எடுத்துக்கொண்டு மளிகைப்பொருட்கள் வாங்க செல்கிறார்.

"ஏய், யாரோ ஒருத்தன் உங்க வீட்டு வாசல்ல இருந்த பைக்க எடுத்துட்டு போறானே!!!'" என ஊர் கூக்குரலிட்டு துரத்துகிறது. ஆளை காணோம்.

ஆம்னி பஸ் உறவினர்கள் பாதிப்பேர் இறங்கி ஜேம்சை தேடித்தேடி நிசமான மனிதர்களிடம் வழி விசாரித்து அதே சிற்றூரை அடைய (ஜேம்சி்ன் மனைவி + பதின்பருவ மகனும் இக்குழுவில்), அவர்களுக்கும் ஒரு பேரதிர்ச்சி!

மூன்று ஆண்டுகள் முன்பு காணாமல் போன சுந்தரம் என்பவரது வீட்டில் ஜேம்ஸ் இயல்பாக சுந்தரத்தின் நடை உடை பாவனையிலேயே சுந்தரமாகவே வாழ்க்கையை 'விட்ட இடத்திலிருந்து' வாழத்துவங்க, ஜேம்சின் மனைவி அதிர்ச்சியில் மயக்கமாகித்தெளிய, காணாமல்போன சுந்தரத்தின் மனைவி நிலையோ அதைவிட கடினமான ஒன்றாக மாறிப்போக...

ஊரும் ஜேம்சின் உறவினர்களும் நடப்பது என்ன என உரையாடித்தெளிந்து, அவரை எப்படியாவது அங்கிருந்து வெளியேற்ற திட்டமிட்டு செயல்பட...அவை எதற்கும் மசியாமல் ஜேம்ஸ் அந்த கிராமத்தமிழில் 'நான் இந்த ஊருக்காரன். என்ன வெளியேத்த யாராலும் முடியாது!' எனப்பொங்கி, ஊரிலுள்ள ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி பழசையெல்லாம் நினைவு படுத்தி மன்றாடி...ஒரு கட்டத்தில் தலை முடி வெட்டச்சென்ற கடையில் அவருக்கு தெரிந்த நாவிதர் காலமாகி ஆறு மாதமான செய்தியைக்கேட்டு 'கால வெளியை' கணிக்க முடியாமல் குழம்பி... பின்னர் ஒரு அயர்ச்சித்தூக்கம் தூங்கி எழுந்து முகம் காட்டும் கண்ணாடியை எடுத்துப்பார்க்க.......முதல் முதலாய் சுந்தரம்  ஜேம்சை கண்ணாடியில் காணும் நொடி...pure acting bliss by Mammooka!

ஜோஸ் பல்லிசேரியின் (ஜல்லிக்கட்டு மலையாள படம் நினைவிருக்கிறதா?!) நண்பகல் நேரத்து மயக்கம் ஏற்படுத்திய மயக்கமும் அதிர்வும் இன்னும் தெளியாமலே இப்பதிவை எழுதுகிறேன்... ( Netflix இல் வெளியாகி இருக்கிறது)

இரண்டு மணி நேரத்தில் அடுத்த ஒவ்வொரு நொடியிலும் ஒளிந்திருக்கும் ஏராளமான ஆச்சரியங்களை நாம் மம்முட்டி எனும் மகாநடிகனுடன் பயணம் செய்து அனுபவிக்கலாம்! இந்த மகத்தான பயணம் தரும் மனிதமும் மனித உறவுகளும் அவ்வளவு நிசம்!

ஜேம்ஸ் போல இல்லாது, அடுத்த முறை நீங்கள் தொலை தூரப்பயணம் செய்கையில், உங்களது திட்டத்தில் இல்லவே இல்லாத, ஒரு பெயர் தெரியாத சிற்றூர் சாலையில் சுய நினைவோடு சற்றே பயணம் செய்து, அங்கே கண்ணில் படும் மனிதரை விலங்குகளை மரங்களை பறவைகளை இன்ன பிற உயிர்களை 'நலமா?!' என்று கேட்டுத்தான் பாருங்களேன்!


நம் வாழ்வின் அடுத்த நொடியில் ஒளிந்திருக்கக்கூடிய ஆச்சரியங்கள் ஏராளம் என்றால் கொஞ்சம் unplannedness ம் கொஞ்சம் curiosity ம்தான் இந்த ஆச்சர்யங்களை நமக்கு அறிமுகப்படுத்தும் தேவதைகளாம்  😃

நான் பெரியதோட்டத்தை கண்டடைந்ததும் இப்படித்தான்! (PeriyaThottam is a little farm with a Big Heart 😃)

அகல்யாவை சிவசு சந்தித்ததும் இப்படித்தானே?!

சுந்தரத்தின் மனைவி "மீண்டும்" சுந்தரத்தை சந்தித்ததும் இப்படித்தானோ?

வாழ்வு பூமியில் முளைத்ததும் கூட இப்படித்தானோ?!


பேரன்புடன்,
பாபுஜி


கருத்துகள்

  1. அருமையான உரையாடல். நீண்ட நாட்களாக முழுவதும் படிக்க முடியாமல் இன்று தான் படித்தேன். பல ஆண்டுகளாக ஒவ்வொரு பயணத்திலும் நான் ஏதாவது ஒரு நட்பை ஒட்டிக் கொண்டு தான் வருகிறேன். நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்