முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொடுக்காப்ளி ரயில்!



நேற்று தோட்டத்திலிருந்து கொடுக்காப்புளி பழங்கள் பறித்து வந்திருந்தேன்.


அப்பாவுக்கு எண்பது+ 

அம்மாவும் 80ஐ தொட்டுவிடும் தூரத்தில்.


பழங்களை பகிர்ந்து உண்டோம்.


அதன் பின், 'எப்படி இருந்தது சுவை?' என்றேன்.

அவர்களது விடை நான் சற்றும் எதிர்பாரதது...


'பள்ளிக்கூடம் போம்போது மத்யான சாப்பாடு டப்பாவ காலி பண்ணிட்டு மதிய உணவு இடைவேளயில வேட்டைக்கு போவோம்.  அப்பல்லாம் பையில அரையணா இருந்தாலே பெரிசு... கொடுக்காப்புளி, நெல்லிக்கா, மாங்கா, பாலாப்பழம், வெள்ளரிப்பத்தை, எலந்தை, எலந்த வடை எல்லாம் பள்ளிக்கூட வாசல்லயே கிடைக்கும். பெரும்பாலும் வயசான பெண்கள்தான் கூறு கட்டி வச்சிட்டு உக்காந்திருப்பாங்க. வாங்கி தின்னுட்டு வாய்க்கா பக்கம் போனா அங்கே ஈச்சம்பழம் காச்சிரிக்கும். இப்ப கிடைக்கிற பேரிச்சை இல்ல அது. குத்துச்செடி மாதிரி இருக்கும். அதில் ஆரஞ்சு இல்லன்னா சிவப்பு வண்ணத்தில ஈச்சம்பழம் இருக்கும். பேரிச்சைல பாதிக்கும் பாதிதான் அதோட அளவு. அப்புறம் பாலாப்பழம் விப்பாங்க. சின்னதா வெள்ளை நிறத்தில சதையும் வெள்ளையாவே இருக்கும். அத சாப்பிடுவோம். ஒவ்வொரு சீசனுக்கு வகை வகையா பழங்க. வேப்பம்பழம் கூட தின்னுருக்கோம். கசப்பா இருக்குங்கிறதால சாப்பிட விரும்பமாட்டோம். இதெல்லாம் தாண்டி கமர்கட்டும் கிடைக்கும்' என்றார்கள்.


சொல்லுக்கு சொல் கொடுக்காப்புளியின் சுவையில் ஊறிக்கோர்த்த நினைவு ரயில் வண்டியாக அந்தப்பழம் என் கண்முன்னே ஒரு சில மாய நொடிகளில் ஓடி மறைந்தது. அதில் பயணித்த மனிதர்களில் என் சிறு வயது தகப்பனின் முகமும் தாயின் முகமும் முகத்தை குறுக்காய் கோடிட்ட பெருஞ்சிறிப்போடு இரு சன்னலோரங்களில் காற்றில் தலைமயிர் பறக்க தாண்டி மறைந்தது...


விவசாயம் எப்படி ஒரு வாழ்வியலேயோ (Agri Culture) அது போலவே நம் உணவுகளும் ஒரு வாழ்வியலே (Food Culture).

இவை இரண்டும் பெருவணிமெனும் ஒற்றைத்தண்டவாளத்தில் ஏறி பயணம் தொடங்கி அரை நூற்றாண்டு தாண்டியாச்சி. இலக்கற்ற பயணம்... என் கண் முன்னே தோன்றி மறைந்த அந்த கொடுக்காப்ளி ரயில் இந்த தடத்தில் ஒருபோதும் பயணிக்காது!


மலையாளக்கவிஞர் முஹாத் வெம்பாயத்தின் இந்தக்கவிதையை ஒரு பாடல் மூலம் என் மனதுக்கு மிக நெருக்கமாக ஆக்கிய, ஆனால் என் இருப்பு அறியாத, தோழர் ராஸ்மி சதீஷின் குரலில் முதல்முதலாய் கேட்டபோதும் இப்படித்தான் ஒரு மாய ரயில் என் கண் முன்னே ஓடி மறைந்தது. இதை வாசிக்கையில் உங்களுக்குள்ளும் கண்டிப்பாய் அந்த ரயில் ஓடும், பேரதிர்வோடு...


இதோ அந்தக்கவிதை:


பண்டெங்ஙாண்டொரு நாடொண்டார்ன்னே; ஆ நாட்டிலு பொழயொண்டார்ன்னே ...


பொழ நெறயெ மீனொண்டார்ன்னே; மீனினு முங்ஙான் குளிருண்டார்ன்னே ...


அன்னவிடொரு வயலொண்டார்ன்னே; வயல் முழுவன் கதிரொண்டார்ன்னே ...


கதிர் கொத்தான் கிளி வருமார்ன்னே;  கிளிகளு பாடண பாட்டொண்டார்ன்னே ...


ஆ நாட்டில் தணலுண்டார்ன்னே;  மண் வழியில் மரமுண்டார்ன்னே ...


மரமூட்டில் களிசிரி பறயான் சங்ஙாதிகள் நூறுண்டார்ன்னே ...


நல்லமழப் பெய்த்துண்டார்ன்னே;  நரகத்தீச் சூடில்லார்ன்னே ...


தீவெட்டிக் களவில்லார்ன்னே;  தின்னணதொன்னும்ʼ வெஷமல்லார்ன்னே ...


ஒருவீட்டிலடுப்ப் புகஞ்ஞா மறுவீட்டிலு பஶியில்லார்ன்னே ...


ஒரு கண்ணு கலஞ்ஞு நிறஞ்ஞால் ஓடிவரான் பலருண்டார்ன்னே ...


நாடெங்ஙும்ʼ மதிலில்லார்ன்னே;  நடவழி யிடவழி நூறுண்டார்ன்னே ...


நாலுமணிப் பூவுண்டார்ன்னே’  நல்லோர் சொல்லினு விலயொண்டார்ன்னே ...


அன்னும்ʼ பல மதமுண்டார்ன்னே;  அதிலப்புறம் அன்புண்டார்ன்னே ...


நின்றெ படச்சோன் என்றெ படச்சோன் என்னுள்ளொரு தல்லில்லார்ன்னே ...


ஆ நாடினெ கண்டவருண்டோ? எங்ஙோட்டத் போய் அறிவுண்டோ ?


ஆ நாட் மரிச்சே போயோ? அதொ வெறுமொரு கனவாருன்னோ?


அதொ வெறுமொரு கனவாருன்னோ? அதொ வெறுமொரு கனவாருன்னோ?

------


என்ன தொலைச்சோம்? எங்க? எப்படி?ன்னெல்லாம் நமக்கு நல்லாவே தெரியும். ஆனா ஒரு மொபைல் ஃபோன் தொலைஞ்சா நாம தேடுகிற மெனக்கெடலைக்கூட நாம தொலைச்ச விலைமதிக்க முடியாத உணவு-வாழ்வியல தேடுறதில காண்பிக்கலன்னா எப்படி?

பேரன்புடன்,

பாபுஜி

                                     


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்