முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

விதிய மாத்துங்க சாமீ!

  நுனிக்கரும்பு இனிக்க காத்திருந்தவனும் இனிப்பு கிட்டி போயாச்சு சிவலோகத்துக்கு நெஞ்சிலே கோயில் கட்டிய பூசலானும் அடைந்தாயிற்று சிவ பாத ப்ராப்தம். 'நீ உருவாக்கிய ஞெகிழி மட்கி மண்ணானால்தான் உனக்கென் பாதத்தில் இடம்!' என தோடுடைய செவியன் விடமுண்ட கண்டன் சபிக்க, காத்திருக்குது மனித குலம் ஆண்டு எண்ணூறு எப்போது வருமெண்டு! "எண்ணூறு வருவதெப்போ ஞெகிழி மக்குவதெப்போ! மாத்துங்கப்பா "விதியை"!' என கூக்குரலிடும் மனிதரை சிவனே என்று இருக்கச்செய்வது சிவனார்க்கும் இயலாது போல! தாவரங்களிலிருந்து ஞெகிழி செய்வோம் விதியை வெல்வோம் என இப்போதும் ஞெகிழி பிடித்து தொங்குது ஒரு பெருங்கூட்டம். மௌனமாய் புன்னகையோடு வேடிக்கை பார்த்திருக்குது தாவரக்கூட்டம். (PC: salon dot com website)

வெயில் விதைத்தவன் வெயில் அறுப்பான்!

 விதைத்தவன் வெயில் அறுப்பான்! திணை விதைத்தவன் திணையறுக்கையில் வினை விதைத்தவன் வினையறுக்கையில் வெயில் விதைத்தவன் வெயில் அறுத்துதானே ஆகவேண்டும்?! மரங்களாலும் செடிகொடிகளாலும் இயற்கை நெய்த கானகங்கள் படர்ந்த மலைச்சரிவுகளை மானபங்கங்கப்படுத்தி தேயிலை, காபி, சில்வர் ஓக் என வகுந்து வகுந்து வகுத்து, இடையிடையே முழுதாய் மழித்து எஸ்டேட் பங்களாக்களும் ஆலைகளும் குடியிருப்புகளும் கட்டி...விதைத்ததெல்லாம் வெயில், வெயில் தவிர வேறில்லை... கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் பயணித்தபோது, குன்னூருக்கு சற்றுமுன் வரை என்னைப்போர்த்தியிருந்த கானகத்தை காலம் சட்டென உருவி தேயிலைப்பாலையின் நிர்வாண தரிசனம்... ஆங்கிலேயருக்காக உருவப்பட்ட மலையரசியின் ஆடையை மறுபடி நெய்து போர்த்த சுதந்திர இந்தியாவில் தறிகளே இல்லையாம்! உலக மற்றும் உள்ளூர் பெருவணிக சந்தைகள் தரும் ஊக்கத்தில் நாமும் நம் அரசி என்ன அற்புதமான பச்சையாடை உடுத்தியிருக்கிறாள் என ஆமோதித்துக்கொண்டிருக்கும்வரை இங்கு அவளது ஆடைக்கான நூல் கூட ஆயத்தமாகாது! தொலைத்த கானகங்களை தொலைத்த இடத்திலேயே மீளுருவாக்கும் எளிதான செயலை புறம்தள்ளி வேறு எங்கெங்கோ காடுகளை ந

வீடற்றவனின் கூடு

  வீடற்றவனின் கூடு  அவன் சுமக்கும் நினைவுப்பொதி. நினைவுகள், ஊறிப்போன நைந்துபோன புளித்துப்போன நினைவுகள், இடையிடையில் இனிப்பு கெடாத சிதறல்களும் கண்டிப்பாய் இருக்கும்... இருபுறமும் விரையும் வாகனங்களில் கடக்கும் மனிதர்களைவிட இவன் அமைதியாகவே கடக்கிறான், நிதானமாய், கைகளால் சாலையை பிளந்து,  மெல்ல மெல்ல, இலக்கின்றி. நமக்குத்தான் சாலையென்பது விதிகளுக்கும் விதிமீறல்களுக்கும் இடையில் ஊடாடும் கருப்பு நதி.  அவனுக்கு அது எதுவாகவும் இருக்காது... காற்றைக்கிழித்து விரையும் பறவை போல அவன் காலத்தை கிழித்து மெல்ல நடைபோடும் ஒரு பயணி, சாலையும் காற்றும் அவனது உலகில் அவையவையாக இல்லாமலுமிருக்கலாம். வீடற்றவனின் கூடு அவனுக்கு சில நேரங்களில் தலைச்சுமை, சில நேரங்களில் தலைச்சுமையை தாங்கும் சுமை. விழிப்பு, உறக்கம், பசி, தூக்கம் இவை எதுவுமே அண்டாத ஒரு மோன வெளியில் அவன் இன்னும் கைகளை காற்றில் துழாவி நடந்துகொண்டிருக்கிறான். இந்தப்பயணத்தில் இவன் இப்போது ஞானத்திற்கு எவ்வளவு தொலைவில் இருக்கிறான் எவ்வளவு அருகிலிருக்கிறான் என்பது ஒரே ஒரு போதிமரத்திற்கு மட்டுமே தெரியும். அவனது அழுக்குப்பொதி இளைப்பாற அந்த மரத்தடி, இடத்தை ஆயத்த

ஓயாத தேடல்...

நுங்கம்பாக்கம் ராஜ் பவனாவில் அதிகாலை அடுப்பில் பொங்கல் வெந்து இறங்கியவுடன் வடையுடன் முதல் ப்ளேட் எனக்குதான்.  கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தினமும் காலையில் ஆறு மணிக்கு என்னை பார்த்ததும் ரெகுலர் சர்வர் ஒரு புன்சிரிப்பு ப்ளஸ் தலையசைப்புடன் உள்ளே சென்று ஆவி பறக்க கொண்டு வருவார். முடித்தபின் காபி.  அடையாறில் ஐந்தரைக்கு ஆட்டோ பிடித்து இங்கு வந்து சிரம பரிகாரம் ஆன பின் மாக்ஸ் முல்லர் பவனம். ஜெர்மன் மொழி கற்கும் ஆவலில் ஆஃபீசுக்கே தெரியாம சேர்ந்து, தினமும் காலையில் வேலைக்கு எப்படியும் அரைமணி தாமதமாய் வந்து, டிசிஎஸ் ஆஃபீசில் (185, டி.கே.சண்முகம் சாலை) நெருப்பு கக்கும் ப்ராஜக்ட் மேனேஜரின் கண்களில் ஒரு நாள் சிக்க, 'வாட் நான்சென்ஸ் ஈஸ் திஸ்? யு நோ த இம்ப்பார்ட்டன்ஸ் ஆஃப் அவர் ப்ராஜக்ட் டு திஸ் ஆர்கனைசேஷன்? அதுவும் இப்பதான் ப்ராஜக்ட்ல சேந்திருக்க!' என அடித்தொண்டையில் எனக்கு மட்டும் பீதியைக்கிளப்பும் குரலில் மெல்ல கேட்டார்.  நியாயமான கேள்விதான். 750 Man Years தேவைப்படும் Show Piece Global Software Project ஐ கச்சிதமாய் செதுக்கிக்கொண்டிருப்பவர், கேட்பார்தானே! 'சாரி சார். ஆக்சுவலி சார், அவர் க்

காதலர் தினமாமே!

February 14: Happy Lupercalia! வெகுகாலத்துக்கு முன்பு ரோமாபுரியில் பிப்ரவரி 7 என்பது வசந்த காலத்தின் தொடக்க தினம். மேற்கத்திக்காற்று மழைமேகங்களை ரோமாபுரியின் நிலங்கள் மீது திசை திருப்பும் நாளாக இது கணிக்கப்பட்டிருக்கிறது. நிலங்களை சீர்திருத்துதல், பயிர்களில் களையெடுத்தல், கவாத்து செய்தல், பழைய தாவரக்கழிவுகளை எரியூட்டுதல் (அதிலிருந்து கிடைக்கும் சாம்பல் மீண்டும் விளை நிலங்களுக்கு உரமாகும்) போன்ற வேலைகளை அன்றைய விவசாயிகள் தொடங்கி, அந்த மாதம் 15 ஆம் நாள் ஒரு மிகப்பெரிய 'கிடா வெட்டு, சாமி கும்பிடு' விழா நடத்தி, வெட்டிய கிடாக்களின் தோலை உரித்து அந்த தோலினால் எதிர்வரும் பெண்களை வலிக்காது அடித்து (அப்படி அடி வாங்கியவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டுமாம், நிறைய குழந்தைகள் பிறக்குமாம். ஐதீகம்) ஆனந்தமாய் கழியும் அந்த நாள். ரோமப்பேரரசின் முதல் அரச சகோதரர்களை உயிர்காத்து வளர்த்த ஓநாய் ஒன்றை கடவுளாய் வழிபட்டு அதன் குகையில் தொடங்கும் இந்த விழா. கிரிஸ்தவ மதம் ரோமப்பேரரசுக்கு எதிராக மெல்ல மெல்ல காலூன்றி, உயிர்த்தியாகங்கள் செய்து பின்னர் ஒரு ரோமப்பேரரசனே கிறிஸ்தவ மதத்துக்கு மாறியபின் தழைத்தோங்கி..

சகியே!

 கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் இடையில் விழித்திருக்கும் நொடியிலெல்லாம் துரத்துது என்னை, என் பதின்பருவ கனவு ஒன்று. பாலகுமாரன் போதித்த காதல் வேதங்களும் தி.ஜா காண்பித்த உன்னத பெண்களும் என் மனதில் கட்டியெழுப்பிய என் தேவதைப்பெண்ணுக்கு மணியம் செல்வனின் ஓவியங்கள் உயிரூட்ட, தேடல் தேடல் சதா தேடல்...  கண்ணில் காண்கின்ற பெண்களெல்லாம் எங்கோ பொருந்தி எதிலோ பொருந்தாமல் போக, இளமையென்னும் இழையொன்றில் நான் விரைந்து இங்குமங்கும் அலைய, காலமென்னும் மாய மை மெல்ல மெல்ல ஓவியத்தின் கோடுகளை அழிக்க, இன்று கூட என்னை கடந்து போன பெண்ணின் நெற்றி மட்டும் அதே ஓவிய நெற்றி. இன்னொரு நாளில் என்னிடம் பேசிச்சென்ற இன்னொரு பெண்ணில் அந்த கண்கள் மட்டும்... அழிந்து போன கோடுகள் விட்டுச்சென்ற உணர்வுகள் மட்டும் மனதில் அலையெழுப்பி தளும்ப தளும்ப, கோடுகள் அழிந்த அந்த இடைவெளி அனைத்தையும் இட்டு நிரப்பும் பேராசையில் சில முகங்களை ஏனோ திரும்ப திரும்ப பார்க்கத்தோன்றும். எத்தனை முகங்கள் கண்டாலும் அந்த முகம் ஆகாது எந்த முகமும்... காதலுக்கு முகமெதற்கு? என்ற புரிதல் வருவதற்கே தேவைப்பட்டது ஆண்டு அரை நூறு. நினைவில் எங்கோ காற்றில் நெற்றியில் புரள

கடல் இனி மெல்லச்சாகும்!

ஹேமமாலினி கன்னம் ஏன் இப்படி ஆச்சி? லாலு பீகார் முதல்வராக தந்த ஒரு வாக்குறுதி, 'எங்கள் சாலைகள் ஹேமமாலினி கன்னம் போல வழவழப்பாய் அமைப்போம்'. இது தேசம் முழுதும் வைரலாகி நாம் இழைத்து இழைத்து (ஒரு ஊத்தப்ப மாவில் நான்கு ரோஸ்டுகள் என்பதாக) மழித்து மழித்து சாலைகள் அமைத்தோம் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு. மழித்த ரோமங்களை நீர்நிலைகள், ஏரிகள், குளங்களில் இட்டு நிரப்பி அவற்றின்மீதும் ரோமாபுரியை நினைவுபடுத்தும் எழில்மிகு தூண்களும் மாட கோபுரங்களும் கொண்ட பல்லாயிர குடியிருப்புகளை வடித்தோம். பெருவணிகத்தின் துணையோடு இத்தனை குடியிருப்புகளும் வாங்கிக்குவித்து "வடித்ததை" கடலுக்கனுப்புவதற்கு புதிதாய் சுரங்கக்கால்வாய்கள் செய்தோம். அவற்றிலும் நெகிழி கழிவுகள் கவனமாய் கொட்டி அடைத்தோம். அடைப்பு பெருகப்பெருக நம் பொருளாதாரமும் வளர்வதாய் கண்டு 'ஒப்பிலாதொரு பொருளாதாரம் உலகத்திற்கொரு புதுமை!' என மார்தட்டி நம் வாழ்வின் தரமும் உயருவதாய் மகிழ்ந்து வெளி தேசங்களின் மதுக்குடுவைகளோடு உருண்டோம். உருண்ட குடுவைகளும் சுரங்கக்குழாய்களில் சரணடைய, அடைப்பும் வணிகமும் பொருளாதாரமும் பெருகுமுகமாகவே ஏறிப்போக, உல