முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலர் தினமாமே!


February 14: Happy Lupercalia!

வெகுகாலத்துக்கு முன்பு ரோமாபுரியில் பிப்ரவரி 7 என்பது வசந்த காலத்தின் தொடக்க தினம். மேற்கத்திக்காற்று மழைமேகங்களை ரோமாபுரியின் நிலங்கள் மீது திசை திருப்பும் நாளாக இது கணிக்கப்பட்டிருக்கிறது.

நிலங்களை சீர்திருத்துதல், பயிர்களில் களையெடுத்தல், கவாத்து செய்தல், பழைய தாவரக்கழிவுகளை எரியூட்டுதல் (அதிலிருந்து கிடைக்கும் சாம்பல் மீண்டும் விளை நிலங்களுக்கு உரமாகும்) போன்ற வேலைகளை அன்றைய விவசாயிகள் தொடங்கி, அந்த மாதம் 15 ஆம் நாள் ஒரு மிகப்பெரிய 'கிடா வெட்டு, சாமி கும்பிடு' விழா நடத்தி, வெட்டிய கிடாக்களின் தோலை உரித்து அந்த தோலினால் எதிர்வரும் பெண்களை வலிக்காது அடித்து (அப்படி அடி வாங்கியவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டுமாம், நிறைய குழந்தைகள் பிறக்குமாம். ஐதீகம்) ஆனந்தமாய் கழியும் அந்த நாள்.

ரோமப்பேரரசின் முதல் அரச சகோதரர்களை உயிர்காத்து வளர்த்த ஓநாய் ஒன்றை கடவுளாய் வழிபட்டு அதன் குகையில் தொடங்கும் இந்த விழா.

கிரிஸ்தவ மதம் ரோமப்பேரரசுக்கு எதிராக மெல்ல மெல்ல காலூன்றி, உயிர்த்தியாகங்கள் செய்து பின்னர் ஒரு ரோமப்பேரரசனே கிறிஸ்தவ மதத்துக்கு மாறியபின் தழைத்தோங்கி...'இனி பிதா சுதன் பரிசுத்த ஆவி மட்டுமே இறை. உங்களது சிறுதெய்வங்கள் எதுவும் தெய்வங்களே அல்ல!' என கட்டளையிட்டு, அழிக்க முடிந்த சிறு தெய்வ சுவடுகளை / விழாக்களை அழித்து, அழிக்க இயலாத தெய்வங்களை / விழாக்களை கிரிஸ்தவத்தில் இணைத்துக்கொண்டு...பாகன் என அறியப்படும் 'பல கடவுளர் வழிபாட்டை' சிதைத்து... பல நூறு ஆண்டுகளுக்கு பின்னர் 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வேலன்டைன் என்கிற கிறிஸ்தவ துறவியை 'புனிதர்' என 14 ஆம் நூற்றாண்டில் பிப்ரவரி 14 இல் அறிவித்து... தொடக்கத்தில் அவர் புனித அன்பின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டு அதன் பின்பு பயணங்களின் காவலர், வலிப்பு நோய் வராது தடுப்பவர், தேனீக்களை பாதுகாப்பவர் என அடுத்து வந்த பல நூறாண்டுகளில் அவரது பணிச்சுமை பெருகிக்கொண்டே போய்...இது முடிவற்ற வரலாறு.

இது எதுவும் அறியாத நாம், உலகளாவிய பெரு நுகர்வு பெரு வணிக மாயையில் சிக்கிக்கொண்டு காதலன்/காதலிக்கு ரோஜாப்பூக்கள், பூங்கொத்துகள், ஒற்றை மெழுகுவர்த்தி டின்னர் என மல்டி பில்லியன் வணிகமாக்கி... பணத்தை இறைத்து ஆல் போல வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.


நானும் வாலன்டைன்ஸ் டே கொண்டாடுவேன், அந்த ஒற்றை மெழுகுபோல அந்த மண்ணில் வாழ்ந்த ஆதி விவசாயிகளின் விழாவென மதித்து.

February 14: Happy Lupercalia!


பின் குறிப்பு:


ஒற்றை நிலம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இறை - இது எதுவுமே பூமிக்கு புதிதல்ல!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்