முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆறாம் பூதம்!

ஆறாவது பூதம். மிகப்பெரும் ஆளுமைகளுக்கு அவர்களது பெயர் புகழை விட அவர்களது செயலின் தாக்கம் பெரிதாக இருக்கும். அவர் உலகுக்கே மகாத்மாவாக இருந்தால் என்ன? ஒரு தேசத்தின் தந்தையாக இருந்தால் என்ன?? பல கோடி சிறார்களுக்கு பாட்டனாய் இருந்தால் என்ன? பேரரசுக்கு ஒற்றை எதிரியாய் இருந்தால் என்ன? தாய்நாட்டை கூறுபோட பேரரசுக்கு கையாளாக இருந்தால் என்ன? இவை எதுவுமே ஒரு பொருட்டல்ல. நேற்றோ இன்றோ நாளையோ வேறு யார் வேண்டுமானாலும் மகாத்மா எனவோ, தேசத்தந்தை எனவோ, தேசத்தை கூறுபோட்டு விற்றவர் எனவோ அழைக்கப்படக்கூடும். இந்த அடைமொழிகள் அனைத்தும் காற்றில் ஆடி அறுந்துபோகும் ஒட்டடை அளவுகூட கால ஓட்டத்தில் நிலைக்கப்போவதில்லை. அப்படியானால் இன்றும் அவரிடம் நம்மை எது அல்லது எவை ஈர்க்கின்றன? அணுவை அணு அணுவாக அறிந்த, சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு தந்த ஐன்ஸ்டைன் என்ற பேராளுமை அறிவியலாளரால்கூட இதை தெளிவாக வரையறுக்க முடியவில்லை. அவரால் சொல்ல முடிந்தது இது மட்டுமே: வரும் காலங்களில் வரப்போகும் எவராலும் "இப்படி ஒன்று ரத்தமும் சதையுமாய் இந்த பூமிப்பரப்பின்மீது நடந்தது என நம்பவே முடியாது!" என

பிட்டு மண்ணும் பிட்யுமென் சாலைகளும்

பிட்டுக்கு மண் சுமக்க மறந்தவனையே பிரம்பால் அடித்த பூமி, இன்று பிட்யுமென் சாலைகளில் (தார் ரோடு) ஆற்று மணலை பெரு சக்கர வாகனங்களில் அள்ளி விரைவது இயல்புதானே! இந்திய நிலப்பரப்பில் பரந்து விரிந்து பரவி ஓட்டமாய் ஓடியும் கடலில் சென்று கலக்காத மிகப்பெரும் நதியாகவும் நம் தார் சாலைகளை நாம் கற்பிதம் செய்து பார்க்கலாமே... ஆற்று மணல் என்பது மலைகளின், மலைப்படுகைகளின் துகள்களால் ஆனது. நம் வீடு இந்த மணல் அன்றி உருப்பெறாது. சாலைகள் எங்கும் பெருசக்கர வாகனங்கள் கடத்தி வந்து தரும் மலைத்துகள்களில்தான் நாம் (வீட்டு) கோட்டைகள் கட்டி வாழ்கிறோம். இது தவறில்லை. ஏனெனில் நாம் மலைகளை வெடி வைத்து பிளந்து மணல் உற்பத்தி செய்வதில்லை :-) மழை நீரின் ஓட்டத்தில் மலைகளின் மேடு பள்ளங்கள், மணல் தங்குவதாலோ அல்லது அரித்துச்செல்லப்படுவதாலோ உருவாகும் இயற்கை நிகழ்வுகள். 'மை ப்ளேஸ் இன் த ப்ளைன்ஸ் ஈஸ் போரிங், பொல்யூட்டட், ஓவர்க்ரௌடெட். ஐ வான்ட் டு லிவ் / ஸ்டே இன் அ ரிசார்ட் டைப் ஹவுஸ் இன் அ ப்யூட்டிஃபுல் கொயட் ஹில் இன் த மிடில் ஆஃப் வைல்ட் நேச்சர்' என நாம் நம் சிறு ஆசையை வெளிப்படுத்த, அது 'அன

மரக்கட்டிலில் உறங்கும் மனிதன்

மரக்கட்டிலில் உறங்கும் மனிதன் ------------------------------------------------------ எங்கோ பல மரத்தில் பழம் பறித்து உண்ணும் பறவைகள் இன்னொரு மரத்திலமர்ந்து களைப்பாறும் வேலையிலும், பசியாற்றிய மரங்களுக்கு செய்நன்றியாய், செரித்தது போக மிச்சத்தை மதிப்பு கூட்டி எச்சமாக்கி காற்றிடம் தரும். காற்று அதை கவனமாய் இடம் தேடி எங்கோ தரையிறக்கும். ஏதோ பறவை ஏதோ எச்சமென்றாலும் உள்ளிருப்பது நம் உறவினரே என அருகிலிருக்கும் மரங்கள் மகிழ்வாய் இலை உதிர்க்க, எச்சத்தினுள் உயிர்ப்புடனிருக்கும் விதை ஒன்றுக்கு (பலவாகவும் இருக்கலாம்) அரண் தரும், காக்கும். மரங்களின் வாழ்வியலில் நெகிழ்ந்து வான் நீர் சொரியும், கதிரலைகள் கதகதப்பாக்கும். 'என்ன ஒரு அமைப்பு இது!' என வியந்து விதைக்குள் கண்ணுறங்கும் இறை மெல்ல கண் விழித்து, தன்னை சூழ்ந்திருக்கும் நல்விழைவுகளை கண்டு அவற்றோடு இணையும் ஆவலில் விரைவாய் விதைக்கூடு விட்டு வெளியேறி காற்றில் இலை வீச ஏதுவாக சூல் கொண்ட மண் நெகிழ்ந்துகொடுக்கும்... இவை எதுவும் அறியாத சிறு பறவையொன்று பின்னொரு நாளில் விதை வளர்த்த அம்மரக்கிளையில் அமரும், தன் கூட்டில்

அலையாய், துகளாய், இறையாய்...

இறை இருக்கும் இடம் எது?  கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்ற மாதிரி நழுவல்கள் இன்றி, சமரசமின்றி நேர்மையாய் அலசுவோமா? அந்தரத்தில் ஊஞ்சலாடும் நட்சத்திரக்கூட்டங்களுள் ஒன்றான நம் புவியில் மட்டும் இறை இருக்கிறது என்று கொண்டால் மற்ற நட்சத்திரங்களை காப்பது யார்? அந்த இறை எங்கு உறையும்? இந்த கூற்றை தொடர்ந்து சிந்தித்தால் இறை நம் புவிக்குள் மட்டுமே அடங்கியிருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகும். அள்ளித்தெளித்த பல கோடி வைரங்களாய் உலகங்கள் பரவிக்கிடக்கும் பால் வெளிகளில், அவற்றை தழுவிப்போர்த்தியிருக்கும் காரிருளில் இன்னாருக்கு இன்ன இடம், இந்த இடம் மட்டுமே என்ற ஆதார விதிகளை வகுத்த இறை, இவை எல்லாவற்றையும் காக்கும் இறை, இதை விட்டு வெளியிலிருந்து, விலகி இருந்து காக்க வாய்ப்பில்லை. அப்படியானால் இறை எங்குதான் இருக்கிறது? எங்குதான் இருக்கிறது இறை? விடை அறிய, நாம் இன்னொரு வினாவுக்கு விடை தேடவேண்டியிருக்கிறது. "அறிவியலும் ஆன்மீகமும் இணையும் புள்ளி எது"? ஆன்மீகம் நம் உள்ளில் இருந்து வெளிப்பட்டு நம் உணர்வுகளின் வழி, சிந்தனையின் வழி அண்டவெளியெங்கும் பரவியோடி

சொல்லாடிய தமிழெங்கே?!

நெல்லாடிய நிலமெங்கே? சொல்லாடிய தமிழெங்கே? 'டப்பா டப்பா வீரப்பா எப்போடாப்பா கண்ணாலம்?' "மாசி பொறக்கட்டும், மல்லியப்பூ பூக்கட்டும்" மண்ணும் மொழியும் மனிதருக்கு தரும் மேன்மையை வேறு எதுவும் ஈடு செய்யாது. நெல்லாடிய நிலங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள், அங்காடிகள், ஆலைகள் என 'வளர்ச்சி' தாளத்துக்கு ஆடத்தொடங்கி இன்று ஓட்டமே வாழ்க்கையாய், ஆட்டமே இயல்பாய் எதியோப்பிய சோளத்திலிருந்து தயாராகும் சர்க்கரைக்கரைசலை அந்நிய உணவு வழி உள்ளே தள்ளி, வெளியேற்றுவதற்கு மருத்துவ உதவி தேடும் நம் அவசர தினங்களை இருக்கும் அளவுக்கு அலசியாச்சு. எனவே அதை தவிர்த்து 'சொல்லாடிய தமிழுக்கு' வருவோம். எழுபது எண்பதுகள் வரை தமிழ் சமுதாயம் மொழி பழகியது பள்ளிகளுக்கு வெளியேதான். இலக்கணம் மட்டுமே பள்ளிகளின் கடமையாக இருந்தது. பேசு தமிழ் இயல்பான வாழ்வான சூழலில் "விளையாடு தமிழ்" என்று ஒன்று இருந்தது, மொழி வளர்த்தது... சிறு குழந்தைகள் பேசத்தொடங்குமுன்னரே தாலாட்டுப்பாடல் வழி தொடங்கிய இந்தத்தமிழ், வளர் குழந்தைகளின் விளையாட்டில் இன்றியமையாததாக உருவேறியது.

நாம் தொலைத்த கண்ணியை நாமதானே மீட்கணும்!

கடந்த பத்தாண்டுகளில் உலகம் முழுதும் பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தம் பெருநகர் பெருநுகர்வு வாழ்வில் (consumerist life in big cities) அலுப்பு தட்டி இயற்கையை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கிறார்கள், மாடித்தோட்டம் முதல் ஏரோபோனிக்ஸ் வரை (மண்ணின்றி, நீரின்றி பயிர் வளர்த்தல்!). பெருவிருப்பத்துடன் பயிர்களை வளர்க்கும் இவர்கள் அனைவரும் முழு முனைப்போடு தம் முயற்சியில் மூழ்கிப்போய், இந்த முயற்சிகளை மேன்மைப்படுத்த உதவும், வளப்படுத்த உதவும் ஒரு இன்றியமையாத கண்ணியை மறந்தே போய்விட்டனர். பல்லுயிர்ச்சூழலை நெறிப்படுத்தி வளப்படுத்தும் அந்த 'தொலைந்துபோன கண்ணி' என்ன? இதை அறிமுகப்படுத்த ஒரு கதை சொல்லட்டுமா? கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பது இந்திய மண்ணின் தொல்குடிகளுள் ஒன்றான தமிழரின் பழமொழி. அன்றிலிருந்து இன்றுவரை ஒரு சிற்றூர் என்பது இருநூறு / முன்னூறு வீடுகள், ஐந்தாறு தெருக்கள், ஊர் மையத்தில் ஒன்றிரண்டு கோவில்கள், நான்கைந்து நீர்நிலைகள், ஊரைச்சுற்றி விளைநிலங்கள், பாசன / வடிகால் வாய்க்கால்கள் என்பதாகவே இருக்கிறது. ஒவ்வொரு கோவிலுக்கும் சொந்தமாக 'இறை காடுகள்&

சர்வேசா!

உப்பு வாங்கித்தந்த விடுதலை. உடுப்பு வாங்கித்தந்த விடுதலை. உதிரம் வாங்கித்தந்த விடுதலை. உண்மை வாங்கித்தந்த விடுதலை. இன்று உள்ளங்கையகல காகிதத்தில் அடங்கி, சற்றே பெரிதாய் காற்றில் பறந்து, நம் எல்லைகளில் காவல் காக்கும் மக்கள் உடல் மீது கிடந்து, நம் சாலைகளில் மக்கள் காவலர்களின் வாகனங்களில் படபடத்து... இதிபோன்ற தருணங்களை சடுதியில் மறந்து கடந்து... மீண்டுமொரு விடுதலை நாளில் கொடியேற்றி இனிப்பு பகிர்ந்து விடுமுறை பெருநுகர்வுக்கு நம் தேசமே ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது. தேசியக்கொடி நம் ஆன்மாவின் ஆடை.  பசுமை வனங்கள் வெளுத்த மனங்கள் சிவந்த பழமாய் இறை சிந்தனை என நம் கால் முதல் தலை வரை சுற்றி நிற்கும் இக்கொடியை இன்று ஒரு நாள் மட்டுமாவது நம்முள் உணர்ந்தாலே போதும், நமக்கு நாமே உண்டாக்கிக்கொண்ட பசுமை, வெண்மை, சிவந்த சிக்கல்கள் தீரும். விவேகாநந்தர் தேடியது ஏதோ 150 இந்திய இளைஞர்கள் அல்ல. ஆன்மாவின் மானத்தை கொடியால் காக்கும் 150 இளைஞர்கள். ஏனோ இவர்கள் நம் கண்களில் இன்றுவரை எளிதில் தென்படுவதே இல்லை. வாழிய பாரதம்.