முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆறாம் பூதம்!

ஆறாவது பூதம்.

மிகப்பெரும் ஆளுமைகளுக்கு அவர்களது பெயர் புகழை விட அவர்களது செயலின் தாக்கம் பெரிதாக இருக்கும்.

அவர் உலகுக்கே மகாத்மாவாக இருந்தால் என்ன? ஒரு தேசத்தின் தந்தையாக இருந்தால் என்ன?? பல கோடி சிறார்களுக்கு பாட்டனாய் இருந்தால் என்ன? பேரரசுக்கு ஒற்றை எதிரியாய் இருந்தால் என்ன? தாய்நாட்டை கூறுபோட பேரரசுக்கு கையாளாக இருந்தால் என்ன?

இவை எதுவுமே ஒரு பொருட்டல்ல.

நேற்றோ இன்றோ நாளையோ வேறு யார் வேண்டுமானாலும் மகாத்மா எனவோ, தேசத்தந்தை எனவோ, தேசத்தை கூறுபோட்டு விற்றவர் எனவோ அழைக்கப்படக்கூடும். இந்த அடைமொழிகள் அனைத்தும் காற்றில் ஆடி அறுந்துபோகும் ஒட்டடை அளவுகூட கால ஓட்டத்தில் நிலைக்கப்போவதில்லை.

அப்படியானால் இன்றும் அவரிடம் நம்மை எது அல்லது எவை ஈர்க்கின்றன?

அணுவை அணு அணுவாக அறிந்த, சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு தந்த ஐன்ஸ்டைன் என்ற பேராளுமை அறிவியலாளரால்கூட இதை தெளிவாக வரையறுக்க முடியவில்லை. அவரால் சொல்ல முடிந்தது இது மட்டுமே:

வரும் காலங்களில் வரப்போகும் எவராலும் "இப்படி ஒன்று ரத்தமும் சதையுமாய் இந்த பூமிப்பரப்பின்மீது நடந்தது என நம்பவே முடியாது!"

என்னைப்போன்ற கோடானுகோடி மனிதர்களுக்கு, இவரது தலையின் பின்னர் ஒளிவட்டம் தெரிவதில்லை, இவரது கோமணம் பற்றிய எளிமைக்காதல் இல்லை, அவரது உயரிய கோட்பாடுகள் மீது மையலில்லை, தேசியவாதமில்லை.

எங்களுக்கு இவர் ஒரு உன்னத வாழ்வியல். மதங்கள் தொடமுடியாத உயரத்தில், அகிம்சை, ஒத்துழையாமை, சுய சார்பு, பல்லுயிர்களோடு ஒத்திசைந்த சார்பு நீட்சி, அரசியல் நிலைப்பாடற்ற, கிராமப்புற வாழ்வின் வேர் வளர்த்த உழைப்பு என இவற்றை வழியாக கொண்டு நேர்மறை இலக்குகளை நோக்கிய தளராத நடை, வேறென்ன வேண்டும் பெருவாழ்வு வாழ?

மத நெறிகளால் முடியாத, அரச கட்டளைகளால் இயலாத, இவரால் மட்டுமே முடிந்த அற்புதம் என்ன தெரியுமா? இந்த வாழ்வியலை, ஒவ்வொரு வாழும் நொடியிலும் நம் இருப்பை நெய்துகொண்டே இருக்கும் நம் சிந்தனைத்தறிகளில் ஊடும் பாவுமாய் (Warp and Weft) ஆகி நிரப்பியது.

ஐம்பூதங்களால் ஆன இவ்வுலகில் ஆறாவது பூதமாய் இவரை என் சிந்தனை கற்பிதம் செய்கிறது. ஏனெனில் ஊடும் பாவும் அவர் தந்ததாயிற்றே!

150 ஆம் பிறந்த நாளாம், வாழ்த்துக்கள் தாத்தா!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்