முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொலைந்த நாய்க்குட்டி

  புயலுக்கு முன்னான பேரமைதி. சட்டென இருண்ட மதிய வானம். இலையைக்கூட அசைக்காது உறைந்து நின்ற காற்று. நடமாட்டமே இல்லாது நின்ற சாலை. இவையனைத்தையும் கலைத்துப்போடும் விதமாய் எழுந்தது ஒரு நலிந்த குரல்; மெலிதான அழுகை, ஈனக்கூப்பாடு, பிரிவின் தவிப்பு, என்ன நிகழ்கிறது என புரியாத பேரச்சம்... இவை அனைத்தின் கலவையாய். பிறந்து சில வாரங்களே ஆன நாய்க்குட்டி ஒன்று, காணாமல் போன தாயைத்தேடி நிலைகொள்ளாது அங்குமிங்கும் கால்களும் கண்களும் அலைய, சாலையின் எல்லைகள் பிரிவுகள் பிரிவுகளின் எல்லைகள் என ஓடித்திரும்பி மீண்டும் ஓடி... இத்தனையும் நிகழ்ந்தது என் கண் முன்னே சில நொடிகளில். 'என்ன கொடுமை இது? தாயைத்தொலைத்த குழந்தை இப்படி தவிக்கிறதே! எங்கிருந்தாவது அவள் ஓடி வந்து குட்டியின் கண் எல்லைக்குள் நிழலாடமாட்டாளா?' என கலவையான நினைவுகளோடு, கவலையோடு சில நொடிகள் நின்று பார்த்தேன். 'அழைக்கலாம்... உணவு / தண்ணீர் தரலாம். தந்தால் வேறெங்கும் செல்லாது இங்கேயே தங்கிவிடும். ஆணா பெண்ணா தெரியவில்லை. வீட்டில் ஒரு ஆண்குட்டி, பெண் குட்டி தேடத்தொடங்கும் வயதில். வாயிற்கதவு தாண்டி இதை உள்ளே அழைத்து இது பெண்குட்டியென்றால் சிக்க

எங்க இருக்கீங்க குரு?!

  J. Krishnamurthi dissolves Order of The Star குரு பார்வை. குரு பற்றிய ஒரு பார்வை. எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்பது பழமொழி - இது சொல்லும் எழுத்து நம் தலையில் எழுதப்பட்டது; எழுதுகோலை நம் கரத்தோடு பற்றி ஆசிரியர் எழுதப்பழக்கிய எழுத்தல்ல அது. மாதா பிதா குரு தெய்வம். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். எனில் யார்தான் நிஜமான குரு? நமக்கு தெரியாததை கற்றுத்தந்து / செய்து காட்டி / வாழ்ந்து காட்டி, செய்யக்கூடாதவற்றிற்கும் இலக்கணமாய் திகழ்ந்து வாழ்வுத்தடத்தின் அடுத்த புள்ளிக்கு நம்மை இட்டுச்செல்லும் எவரும்/எதுவும் நமக்கு குரு.  அது பனையோலையில் காற்றாடி செய்ய கற்றுத்தந்த மனிதனாகவும் இருக்கலாம், தன் குஞ்சுகளுக்கு இரை எப்படி உண்பது என செய்து காட்டி கற்றுத்தரும் தாய்க்கோழியாகவும் இருக்கலாம், நம் வாகன சக்கரத்தில் முள் எடுத்து துளை அனைத்து நம் பயணத்தை தொடரச்செய்யும் நாம் அறிமுகம் செய்துகொள்ள விரும்பாத யாரோவாகவும் இருக்கலாம். வாழ்க்கை என்பது ஒற்றை நூல் சரடல்ல. ஒற்றை நூல் சரடும் ஆகாது. வாழ்க்கை என்பது பலவிதமான நூல்களால் ஒவ்வொருவரின் ஆன்மாவின் தறியிலும் நாமே நெய்துகொள்ளும் ஆடை. இதில் ஊடும் பாவுமாய் ஊடு

What you want to be?

  You are defined by what you are learn when the world goes by without recognizing your existence. In other words, what you learn when nobody is watching :-) This is important; it defines you! When you were a baby and learned to crawl, stand up, wobble, walk, run, fall down, pick yourselves up... world was not paying attention to you (except your close family that is :-) ) When you started to learn, learn something, learn anyrhing, world didnt sit back and take note. You kept learning any way. Learning gave you understanding. Understanding gave you strength to explore the bounaries and beyond, widening your horizon thereby. Understanding gave you comfort (of having known something that you didnt know before). Comfort gave you confidence to promise /announce 'Yes, I can!'. World sits up and take note once you start walking the talk. At some point, world gets so used to your accomplishments, it feels bored with you and moves onto the next new promise. This loss of attention makes

வெற்றி வேல் முருகனுக்கு மேட்டுக்குடி அரோகரா!

  மேட்டுக்குடி ஆதியில் நீரின் ஆற்றலுக்கு அஞ்சி சமதள பரப்புவாசிகள் மேலேறி மேலேறி மலையடிவாரம் அடைந்து... மலைமேலிருந்தும் விழும் நீருக்கு அஞ்சி மலையேறத்தொடங்க, மலையுச்சிதான் நீராபத்து இல்லாத பகுதி என தங்கிப்போய்விட்டார்களாம். அவர்களால் ஏற முடிந்த மலை உச்சிகளில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரம் செடி கொடி பூ காய் கனி விலங்குகள் பறவைகள் என குலுங்கியதாம். நல்ல இடம் இந்த இடம் என தங்கி வேட்டையாடியும் உணவு பறித்தும் உண்டு மகிழ்ந்து சந்ததி பெருக்க, ஒருநாள் உண்ணக்கிடைத்தது அனைவர்க்கும் போதவில்லையாம். பகிர்ந்து உண்டு, பின் நிரம்பாத வயிறோடு உறங்கச்சென்று உறக்கம் தொலைத்த இரவுகளின் தீராத சிந்தனையில் வேளாண்மை தோன்றியதாம். மழையை நம்பிய வேளாண்மையில் அதிக விளைச்சல் அதிக ஆற்றல் குறுகிய காலத்தில், குறைவான நீர்த்தேவையில் (பெய்த மழை சரிவில் இறங்கிப்போக, ஈரப்பதத்திலேயே வளரும்) சிறு தானியங்கள் விருப்பப்பயிராச்சாம். பயிர் வளர்ந்து கதிர் பிடிக்கும் காலத்தில் அதை உண்ண கூட்டம் கூட்டமாய் வந்த உயிரிகளை காணும் ஆர்வம் உந்த,  மலைக்காட்டு பறவைகள் தாழப்பறந்து புழு பூச்சியோடு அவை அமர்ந்த கதிரையும் உண்ண, கதிர்சுவை பிடித்துப்போ

ஒளிருது மனம், தினம்.

  மலை முகடுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமதளங்களிலும் காற்று ஓய அவர்கள் காத்திருந்தார்கள். கடல் அலைகளும் சற்றே கண்ணயரும் நேரத்திற்காக அவர்கள் காத்திருந்தார்கள். இவையிரண்டும் நிகழ்ந்த நொடியில் நள்ளிரவின் இருளில் அவர்கள் இறங்கி வந்தார்கள். மணல் துகளிலும், அலை நுரையிலும், இலைக்கீற்றிலும், ஏன், காற்றிலும்கூட பரவி இசையற்ற ஏதோ ஒரு இசையோடு இயைந்து ஆடத்தொடங்கினர்கள். ஒரு கோடி வைரங்கள் காற்றேறி மிதந்து அந்தரத்தில் சுழன்றாடியது போல் அவர்களது ஆட்டத்தில் சிந்திய வெளிச்சத்துணுக்குகள் யாவும் ஓசையின்றி படிந்தன அவர்கள் நிரப்பிய வெளி அனைத்திலும். ஒளிக்கீற்று தொடத்தொடங்கிய இடங்களை விட்டு சடுதியில் ஓசையின்றி நீங்கி, இருளின் ஆடை நுனியைப்பிடித்துக்கொண்டு தொடர்ந்த அவர்களது பயணம், தொடர்ந்த வண்ணமே இருந்தது இருளோடு. ஒளி தொடும் இடங்களை நீக்கிய ஏனைய புவிப்பரப்பில் இருள்தானே ஒளிர்கிறது?! இவர்களால்தானே ஒளிர்கிறது! புவியிறங்கிய விண்மீன்கள் தாம் தொட்ட இடங்களையெல்லாம் கழுவித்தழுவி இலைகளின் பளபளப்பாய், பூக்களின் மெல்லிய வெளிச்சமாய், மணற்துகளுள் வெளிச்சப்புள்ளியாய், அலை நுரையின் வெண்படிமமாய், நள்ளிருளில் கண் விழிக்கும்

கனவு தேசமும் நமது கடமையும்

  நாடு என்பது வரைபடம் வகுத்தது மட்டுமா? நாட்டுப்பற்று என்பது 'ஜெய் ஹிந்த்!', 'பாரத் மாதா கீ ஜெய்', 'பாகிஸ்தான் முர்தாபாத்!' போன்றவை மட்டும்தானா? நாடு என்பது என்ன என்று உணர்ந்தால்தான் பற்று வரும்... என் காலடி நிலம், அதைச்சுற்றியுள்ள உயிர்கள் அனைத்திடமும் நான் பற்று கொண்டால், நிலத்தின் எல்லை வரை பற்று பற்றித்தொடரும்.  பன்னெடுங்காலத்திற்கு முன்பு, மொத்த நிலப்பரப்பும் ஒன்றாகத்தானே இருந்திருக்கிறது... இயற்கையால் பிரிதொரு நாளில் பிரிக்கப்பட்டு, இப்போது பொருளாதாரத்தால் 'வகுக்க'ப்பட்ட, நலமற்ற  நிலப்பரப்பாக எனது இந்தியா இருக்கும் வரையில், செயலற்ற விமரிசனங்கள் மட்டும் தொடரும். நம்மை பிடித்த பெருவியாதி என்ன தெரியுமா?  'எனது கடமை என்னென்ன என்பது பற்றி அறியக்கூட எனக்கு ஆவல் இல்லை. ஆனால் எனது உரிமைகளுக்காக போராடுவேன்!' என்பதே. இதற்கு தடுப்பு மருந்து நமக்குள்ளேதான் இருக்கிறது! People talk about Constitutional Rights All the Time; nobody wants even to think about Constitutional duty of individuals... காந்தியை வெறுப்பவர் வெறுக்கட்டும், கொண்டாடுபவர் கொண்டாடட்டும்,

பரமன் கழுத்து பாம்பும் மொனார்ச் வண்ணத்தியும்!

  பரமனின் சிரிப்பு மாறவில்லை துளியும்! பரமன் கழுத்துப்பாம்பும் அது சீண்டிய கருடனும் அருகருகே கிடந்தன. கருடன் அலகினால் கீறிய பாம்பும், பாம்பு தீண்டிய கருடனும் குற்றுயிரும் குலையுயிருமாய் அருகருகே கிடக்கையில் நிகழ்கிறது இந்த உரையாடல்: 'சௌக்கியமானுதான கேட்டேன்?!' "பரமன் கழுத்து தந்த பாதுகாப்புல கிண்டலால்ல கேட்ட!" 'பேச்சு பேச்சா இருக்கையில ஏன் பாய்ஞ்ச?' "அவருக்கும் நியாயம் தெரியும்னு நம்பினேன். அதான் பாய்ஞ்சேன்..." 'என்ன ஆச்சு பாத்தியா...?' "என்ன ஆவப்போவுது? பரமன சேரப்போறோம்..." 'சரிதான்'. இரண்டும் இறந்து போயின. சீண்டுதலும் சீறுதலும் - இதில் பரமனின் பொறுப்பு என்ன?! பாம்பின் வேலையை அது பார்க்க, கருடனின் வேலையை அது பார்க்க, அதனதன் வாழ்க்கை அதனதின் பாட்டில் போய்க்கொண்டிருந்திருக்கும் அல்லவா? பாம்பை தின்பதற்காகவே கருடன் என்று பரமனும் விதித்ததில்லை. இரையொன்று கண்டால் இறங்கித்தாக்கும் கருடனுக்கு பாம்பென்ன பழுதென்ன? உணவொன்றுதானே அதன் குறி? தர்க்க நியாயங்கள் வாழ்க்கைக்குதவாது என்பதாகவே 'யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லா

செல்லப்ப விவசாயிக்கு என்ன சொல்லப்போகிறோம்?

  இன்றைய செய்தி: தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகளில் 4.25 கோடி ரூபாய் பணம், 4+ கிலோ தங்கம், சில கிலோக்கள் வெள்ளி பிடிபட்டது. பன்னிரண்டு அரசு ஊழியர்கள் கைது. சூழல் மாசு கட்டுப்பாட்டு துறை, பத்திர பதிவுத்துறை, மின் விநியோகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் கைதானார்கள். இவை எல்லாமே நமது அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக அமைக்கப்பட்ட துறைகள்; யாருடைய பேராசையையோ நம் பணத்தால் நிரப்புவதற்காக அல்ல. The arrested ones are not aliens. They are from among us. Many believe in their rights to demand bribe because they might have paid so much to get into vantage positions of this well oiled machinery called bureaucracy. Somewhere in this heap of bribed stuff lay the sweat stained notes offered by some poor farmers who were forced to pay a bribe to just execute a settlement deed of their tiny landholding to their offspring, the cough stained notes paid by a family towards medical bill of their asthmatic child...and so on. WHY?! கஷ்டப்பட்டு உழைச்ச காச லஞ்சமா வாங்கி, பொல்யூஷன கண்டுக்காம விட்டு