முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒளிருது மனம், தினம்.

 


மலை முகடுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமதளங்களிலும் காற்று ஓய அவர்கள் காத்திருந்தார்கள்.


கடல் அலைகளும் சற்றே கண்ணயரும் நேரத்திற்காக அவர்கள் காத்திருந்தார்கள்.


இவையிரண்டும் நிகழ்ந்த நொடியில் நள்ளிரவின் இருளில் அவர்கள் இறங்கி வந்தார்கள்.


மணல் துகளிலும், அலை நுரையிலும், இலைக்கீற்றிலும், ஏன், காற்றிலும்கூட பரவி இசையற்ற ஏதோ ஒரு இசையோடு இயைந்து ஆடத்தொடங்கினர்கள்.


ஒரு கோடி வைரங்கள் காற்றேறி மிதந்து அந்தரத்தில் சுழன்றாடியது போல் அவர்களது ஆட்டத்தில் சிந்திய வெளிச்சத்துணுக்குகள் யாவும் ஓசையின்றி படிந்தன அவர்கள் நிரப்பிய வெளி அனைத்திலும்.


ஒளிக்கீற்று தொடத்தொடங்கிய இடங்களை விட்டு சடுதியில் ஓசையின்றி நீங்கி, இருளின் ஆடை நுனியைப்பிடித்துக்கொண்டு தொடர்ந்த அவர்களது பயணம், தொடர்ந்த வண்ணமே இருந்தது இருளோடு.


ஒளி தொடும் இடங்களை நீக்கிய ஏனைய புவிப்பரப்பில் இருள்தானே ஒளிர்கிறது?! இவர்களால்தானே ஒளிர்கிறது!


புவியிறங்கிய விண்மீன்கள் தாம் தொட்ட இடங்களையெல்லாம் கழுவித்தழுவி இலைகளின் பளபளப்பாய், பூக்களின் மெல்லிய வெளிச்சமாய், மணற்துகளுள் வெளிச்சப்புள்ளியாய், அலை நுரையின் வெண்படிமமாய், நள்ளிருளில் கண் விழிக்கும் குழந்தைக்கண்களில் ஆறுதல் ஒளியாய் மாறிப்போய் மாயமாக... 


"கீழிறங்கிய பெற்றோரும் உற்றாரும் ஏனின்னும் திரும்பவில்லை?" என கவலையோடு கண் விழித்துப்பார்த்திருக்குது ஒரு குட்டி விண்மீன் கூட்டம்.


"ஏனைய நாங்களெல்லாம் இருளில் மட்டும் துலங்க, நீ மட்டும் எப்படி வெளிச்சமாய் எப்போதும்?' என்ற விண்மீன் குழந்தைகளின் கேள்விக்கு, அப்பெரிய (சூரிய) மீன் ஏதோ சொல்ல, " காணாமல் போன எம் மூத்தோர்கள் எங்கேயன உன் அணையாத ஒளிக்கற்றைகளால் கண்டுதான் சொல்லேன்!" என்ற அவர்களின் ஏக்க வினாவிற்கு விடையறியாது மௌனமாய் அந்தரத்தில. சுற்றுது அப்பெரிய மீன்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்