முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாதுகாப்பில்லாத தேசம்

நம் நாட்டிலுள்ள அனைத்து அரசுகளுக்கும்,  கட்சிகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும் ஒரு எளிய இந்தியனின் விண்ணப்பம்: ஊடகங்களில் காண்பிக்கப்பட்ட ஒரே காரணத்தால், குடும்பப்பொறுப்பை ஒற்றையாய் சுமக்கும் ஏழை அம்மாவுக்கு உதவியாய் சாலையில் தேநீர் விற்ற பதின்வயது சிறார்களை கவர்ந்து சென்று, காப்பகத்தில் வைத்திருந்து, தாயின் + நல்மக்களின் எதிர்ப்பு கண்டு பின்வாங்கி, மீண்டும் தாயிடம் சேர்க்கின்றது ஒரு அமைப்பு, அரசின் உதவியோடு. 'இனிமேல் குழந்தைகளை வேலைக்கு அனுப்பமாட்டேன், நன்கு வளர்ப்பேன், பள்ளிக்கு அனுப்புவேன்' என அந்த அம்மா உத்தரவாதம் தந்தபிறகு. தேநீர் விற்ற சிறார்களுள் ஒருவர் ஆணுடை அணிந்த சிறுமி, சீர்குலைந்த சமூக ஆண்களின் விஷமப்பார்வையிலிருந்து மானம் காக்க ஆணுடை உதவும் என்கிற நம்பிக்கை... 'நீ வேலைக்குப்போய் பசங்கள காப்பாத்தவேண்டியதுதான? ஏன் இப்படி ரோட்ல டீ விக்க வைக்கிற?' என்ற கேள்வி அம்மாவிடம் வைக்கப்படுகிறது. 'குடிகாரர்களும் காம வெறியர்களும் நிறைந்த சமுதாயத்தில் யாரை நம்பி என் குழந்தைகளை தனியே வீட்டில் விட்டுவிட்டு உழைக்கச்செல்வேன்? அது இயலாத காரியம் என்பதால்தானே அவர்களை படிக்கவைக

நெஞ்சாங்கூடு

"பூமி போல ஏமாளி கிரகமொன்று சிக்காதா?" என எல்லைகளற்ற விண்வெளியில் துழாவுது ஒரு கூட்டம்.   அண்டவெளியனைத்தையும் அலசி ஆராய்ந்து நாம் இதுவரை கற்றிருப்பது, பூமியில் நம்மைச்சுற்றி வியாபித்திருக்கும் சகலதும் பற்றிய நம் அறிதலை விட பெரிதானது! நம் கண்ணருகே உள்ள உலகை, அதன் அற்புதங்களை, புதிர்களை, உணர முடியாத நாம், நம் காலடியில் தலையாட்டும் அற்புதங்களை, வானில் சிறகடிக்கும் அற்புதங்களை உணர முடியாத நாம், நம் காலடியையும் உச்சி வானத்தையும் இணைக்கும் மரங்கள் முதல் காடு மலைமுகடுவரை எதையும் உணர முடியாத நாம், இடைவிடாது வேற்றுலகங்கள் தேடுவது ஏன்? காசினி (Cassini) என்ற செயற்கைக்கோளை பூமியிலிருந்தே ரிமோட்டில் இயக்கி, சனி கிரகத்தின் ஆரஞ்சு வளையங்களுக்கிடையே துல்லியமாக புக வைத்து, சனியின் உட்பரப்பை படமெடுக்க உதவும் அறிவு போதுமா நாம் நலமுடன் வாழ? இன்று இந்தியாவில் 43 சதவீதம் பேருக்கு(!) மன அழுத்தம் சார்ந்த பாதிப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகி அழுத்தத்தை இன்னும் அதிகமாக்குகின்றன... சக உயிரின் துயரை, அவற்றுக்கே தெரியாமல் சாவித்துளை வழியே பார்த்து ரசிக்கும் பெருங்கூட்டமாக நம்மை மாற்றிய அறிவுதான் வளர்ச

என்ன தவம் செய்தனை!

ஒரு 20+ வயதுள்ள பெண் கருவுற்றால் அவளது உடல்நிலை + மன நல மாற்றங்களை தாங்கிக்கொள்ள, பாதுகாக்க, போற்றிக்கொண்டாட, கணவனும், குடும்பமும், சுற்றமும் இருக்கும். அவளது கணவன் தகப்பனாகப்போகும் பெருமித்த்தில் மிதப்பான். அவளது தகப்பன் தான் தாத்தனாகப்போகும் மகிழ்வில் கனிவான். அம்மாவும் மாமியாரும் 'நம் வீட்டுக்கு புதிய வரவு ராஜகுமாரனா, ராஜகுமாரியா?' என விவாதிப்பார்கள். ஒவ்வாமை, வளைகாப்பு, மூச்சு விட சிரமம்,  நடக்க சிரமம், படுக்க சிரமம், உறங்க சிரமம்... என்றாலும் மகிழ்வாய் அந்தப்பெண் தாயாக 39 நெடிய வாரங்கள் தயாராவாள். 15 வயது பெண்குழந்தை? அந்தப்பெண்குழந்தை ஏழு மாத கர்ப்பம். தாய் இல்லை. தகப்பனும் தாத்தனும் மாறி மாறி சீரழித்ததில் அந்தச்சிறுமி கருவோடு சேர்த்து ஒவ்வாமை, வீங்கிய வயிறு, உயிரைப்பிசையும் பயம், வலி, இன்னும் என்னவெல்லாமோ சுமந்து வாழ்கிறாள் மதுரையில். தமிழ் வளர்த்த மதுரையில், அறம் வளர்த்த மதுரையில், மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரையில். உயர்நீதிமன்றத்தில் அவளது உறவினர் தொடர்ந்த வழக்கில் நேற்று ' மருத்துவ ஆலோசனையின் பேரில் கருவை கலைத்துவிடலாம்' என நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அரக

வாழ்க்கையே போர்க்களம்...

1980களின் ஆரம்பம். தஞ்சாவூரின் கருந்தட்டான்குடியில் பாபு என்ற இளைஞர், பஸ் கண்டக்டர், ஒரு டவுன் பஸ்ஸில். வீட்டுக்கு ஒரே பிள்ளை. ஒரு குறிப்பிட்ட ஆண்டின் பஸ் தின விழாவில் அந்த பஸ்சில் பயணம் செய்த 'மன்னர் சரபோஜி கலைக்கல்லூரி' மாணவர்கள் டிக்கட் வாங்குகையில் ஏதோ தகராறாகி, கைகலப்பாகி பாபு தாக்கப்படுகிறார். பயணிகள் சிலரும் ஓட்டுநரும் நுழைந்து தடுத்து, வண்டியை நிறுத்தி, மாணவர்களை வலுக்கட்டாயமாக இறங்கவைக்கின்றனர். சொற்ப பயணிகளுடன் வண்டி நகர, படிக்கட்டில் ஸ்டைலாக பாபு நின்று விசில் ஊதியதோ அல்லது அவரது உடல்மொழியோ மாணவர்கள் மத்தியில் ஒரு நெருப்புப்பொறி போல விழுந்தது அவருக்கு தெரியவில்லை. வண்டி நகர்கையில் அவர் படியேறி உள்ளே செல்ல, அவரது காலிலிருந்து ஒரு செருப்பு நழுவி கீழே சாலையில்... கணநேரமும் சிந்திக்காமல் ஓட்டுநரை வண்டியை நிறுத்தச்சொல்லி விசில் அடித்து, நின்றதும் தாவி இறங்குகிறார். செருப்பை எடுத்து நிமிர்வதற்குள் சூழும் மாணவர் கூட்டம் மிருகத்தாக்குதல் நிகழ்த்த, ஏராளமான காயங்களோடும், முறிந்த முதுகுத்தண்டுவடத்தோடும் மீற்கப்படுகிறார். ஏழைப்பெற்றோர் அதன்பின் பல வருடங்கள் அவரை சக்கர நாற்காலியி

மரமேற கற்றுக்கொண்ட மீன்கள்

ஓசை. ஓசை என்பது தேவையின் அடிப்படையில் எழுப்பப்படுவது.  தேவைகள் ஓய்வின்றித்தொடரும்போது ஓசை இரைச்சலாக மாறுகிறது. கண் விழித்து கண்மூடும் இடைவெளியெங்கும் நம் தினங்களை இட்டு நிரப்பியிருக்கிறோம் இரைச்சலினால். உரங்கும்போதாவது ஓசையின்றித்தூங்க முடிகிறதா?! மின் விசிறிகள், குளிர்சாதன எந்திரங்கள், நடுநிசியிலும் வீடருகே விரையும் வாகனங்கள் என இரைச்சல் இங்கு 24*7 ஆகிப்போனது. இத்தனை இரைச்சலினால் அயர்ச்சியாகி தூங்கும்போதும் குறட்டை இரைச்சல்! குயில்களின் ஓசையும்கூட நம் காதுகளில் சேர்வதற்குள் இரைச்சலில் சிதறிப்போகின்றது... ஓசை, இரைச்சல் இரண்டையும் தாண்டிய பேரோசையொன்றும் பேரமைதி ஒன்றும் நமக்குள்ளேயே புதைந்துகிடக்கிறது. நாம்நான் கேட்பதாயில்லை. நம் இதயத்துடிப்பின் ஓசைக்கும் அடுத்த துடிப்பிற்குமான இடைவெளி தரும் பேரமைதியில் நமது ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், தாபங்கள், கோபங்கள் அனைத்தும் நிர்வாணமாய் அலைகின்றன. அமைதியின் பேரோசையை, அது காண்பிக்கும் இந்த ஆன்ம தரிசனத்தை,  தாங்கமுடியாமல் ஒரு பெருங்கூட்டமே அங்குமிங்கும் அலைந்துகொண்டிருக்கிறது. மதங்கள், கடவுள்கள், கோட்பாடுகள் எவையும் நமக்கு உண்மையை தரிசி

கொலூசியத்தில் வெஜிடேரியன் சிங்கம்

கைதே! கஸ்மாலம் என்று சாய்ஸ் வார்த்தைகளில் அந்த இத்தாலியனை நான் திட்டிக்கொண்டிருந்தது, ரோமாபுரிப்பட்டணத்தில் கிறிஸ்துவர்களை நீரோ மன்னன் சிங்கங்களுக்கு இரையாக்கும் விளையாட்டு கோலாகலமாய் நடத்திய கொலூசியம் என்ற வட்ட வடிவ அரங்குக்கு வெளியே. வேலையின்மை, பசி, பிணி மறக்க தன் நாட்டு மக்களுக்காக நீரோ வடிவமைத்த விளையாட்டுத்திடல் இன்று ஒரு பாதுகாக்கப்பட்ட பண்டைய சின்னம். அங்கதான் அந்த கஸ்மாலத்தோடு மல்லுகட்டினேன். காலை எட்டு மணிக்கு கொலீசியம் வந்து சேர்ந்து வெஜிடேரியன் சிற்றுண்டி நா வரள தேடி, 'கண்டேன் பிட்சாவை!' என இவனை கண்டடைந்து தெளிவாய் சொன்னேன், 'Une Pizza, Verdura' (சாருக்கு ஒரு வெஜ்ஜீ பிட்சா!). 'Si Si' என வாயெல்லாம் பல்லாக சிரித்து ஒரு ஓரு பிட்சாவை எடுத்து ஒரு தட்டில. இட்டு, 'Pizza Verduraaaa' என நீட்டினான். முதல் கடியிலேயே மாமிசத்துணுக்கு நெருடியது பல்லில், பொடிப்பொடியாய் முட்டைக்கோஸ் துருவல் போல. அதிர்ந்துபோய் பிரித்துப்பார்த்தால் மீன் செதில், துணுக்கு துணுக்காய்! மரித்துப்போன வெஜீடேரியன் உணர்வுகளை குவித்து துர்வாச முனி பார்வையோடு 'Verdura???? THIS IS TUN

சொர்க்கமே என்றாலும்

சூரிச் நகரின் (Zuerich) ஒரு பரபரப்பான மதியப்பொழுதில் நாங்கள் நான்கு பேர் மெக்டோனால்ட்ஸ் ரெஸ்ட்டாரண்டுக்குள் நுழைந்தோம். உள்ளே இன்னும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தனர் பணியாளர்கள். பொறுமையாக எங்கள் முறை வரும்வரை கவுண்ட்டரில் நகர்ந்து, 'Ja?' என பணியாளர் வினவ, 'நாலு MacBurger menus, நாலிலும் மாமிசம் இல்லாம!' என கெத்துகாட்டினோம். 'மாமிசம் இல்லாமல்? MacBurger ல அதுதானே மெயின்!' என்றாள் பணியாளி. 'Ja, மாமிசம் இல்லாம!' என்றோம் உறுதியாக. 'அதை எடுத்துவிட்டால் வெறும் சீஸும் சலாட் இலையும்தானே இருக்கும்!' என்றாள் வியப்பு கூடிப்போய். 'Jawol, அது! அதுதான் வேணும். Full amount charge பண்ணிக்கோ!' என்றோம். திகைப்புடன் பார்த்தவள், 'ein moment' என்று மேனேஜரிடம் ஓடி கைகளை ஆட்டி ஆட்டி எங்களை சுட்டி ஏதோ சொன்னாள்.  மேனேஜர், கண்களை ரோல் செய்து, தோள்களை குலுக்கி, 'Ja, geben Sie so!' என்று உள்ளே போய்விட்டார். அன்று மகிழ்வாய் பர்கரை உருளை விரல் சிப்ஸ் stuff செய்து coke உடன் உள்ளே தள்ளினோம். அன்றிலிருந்து தினசரி மதிய உணவுக்கு இதே routine. சில நாட்களில் அவ