முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொலூசியத்தில் வெஜிடேரியன் சிங்கம்


கைதே! கஸ்மாலம் என்று சாய்ஸ் வார்த்தைகளில் அந்த இத்தாலியனை நான் திட்டிக்கொண்டிருந்தது, ரோமாபுரிப்பட்டணத்தில் கிறிஸ்துவர்களை நீரோ மன்னன் சிங்கங்களுக்கு இரையாக்கும் விளையாட்டு கோலாகலமாய் நடத்திய கொலூசியம் என்ற வட்ட வடிவ அரங்குக்கு வெளியே.

வேலையின்மை, பசி, பிணி மறக்க தன் நாட்டு மக்களுக்காக நீரோ வடிவமைத்த விளையாட்டுத்திடல் இன்று ஒரு பாதுகாக்கப்பட்ட பண்டைய சின்னம்.

அங்கதான் அந்த கஸ்மாலத்தோடு மல்லுகட்டினேன்.

காலை எட்டு மணிக்கு கொலீசியம் வந்து சேர்ந்து வெஜிடேரியன் சிற்றுண்டி நா வரள தேடி, 'கண்டேன் பிட்சாவை!' என இவனை கண்டடைந்து தெளிவாய் சொன்னேன், 'Une Pizza, Verdura' (சாருக்கு ஒரு வெஜ்ஜீ பிட்சா!).

'Si Si' என வாயெல்லாம் பல்லாக சிரித்து ஒரு ஓரு பிட்சாவை எடுத்து ஒரு தட்டில. இட்டு, 'Pizza Verduraaaa' என நீட்டினான்.

முதல் கடியிலேயே மாமிசத்துணுக்கு நெருடியது பல்லில், பொடிப்பொடியாய் முட்டைக்கோஸ் துருவல் போல.

அதிர்ந்துபோய் பிரித்துப்பார்த்தால் மீன் செதில், துணுக்கு துணுக்காய்!

மரித்துப்போன வெஜீடேரியன் உணர்வுகளை குவித்து துர்வாச முனி பார்வையோடு 'Verdura???? THIS IS TUNA, NOT VEGETARIAN!' என ஆத்திரமும் பசியும் தொண்டையை அடைக்க, கூவினேன்!

அதே சிரிப்போடு பிட்சாவை என்னிடமிருந்து வாங்கி, நிதானமாய் பிரித்து மேய்ந்து அதனுள் ஒளிந்திருந்த ஒரே ஒரு இலையை உருவி எடுத்து, 'SI!! Verrrrrrrduuuuuuuraaaaaaa!' என்று திருப்பிக்கொடுத்தான்.

அதன்பின் நிகழ்ந்ததைத்தான் நீங்கள் பதிவின் துவக்கத்தில் படித்தீர்கள்!

சிங்கங்கள், கை கால்களில் பூட்டிய விலங்குகள் தடுக்க உயிர்தப்ப ஓடி முடியாது இடறி விழுந்த கிறிஸ்தவ கைதிகளை குருதி ஒழுக வேட்டையாடுவதை கைதட்டி ஆர்ப்பரித்து ஐபிஎல் மேட்ச் போல ஒரு மனிதக்கூட்டம் பார்த்து ரசித்த அந்த மைதானம், இன்று அமைதியாய் வரலாற்று சாட்சியாய்...

நம் வாழ்வில் பெரும்பாலான தருணங்களில் நாம் எந்த ஒரு நிகழ்வையும் ஆதரிப்பதோ எதிர்ப்பதோ, அந்த பிட்சா வெஜிடேரியனா இல்லையா? என்பதில் அவரவர் கோணத்தின் நியாயம் போலத்தானே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...