முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கையே போர்க்களம்...


1980களின் ஆரம்பம்.

தஞ்சாவூரின் கருந்தட்டான்குடியில் பாபு என்ற இளைஞர், பஸ் கண்டக்டர், ஒரு டவுன் பஸ்ஸில்.

வீட்டுக்கு ஒரே பிள்ளை.

ஒரு குறிப்பிட்ட ஆண்டின் பஸ் தின விழாவில் அந்த பஸ்சில் பயணம் செய்த 'மன்னர் சரபோஜி கலைக்கல்லூரி' மாணவர்கள் டிக்கட் வாங்குகையில் ஏதோ தகராறாகி, கைகலப்பாகி பாபு தாக்கப்படுகிறார். பயணிகள் சிலரும் ஓட்டுநரும் நுழைந்து தடுத்து, வண்டியை நிறுத்தி, மாணவர்களை வலுக்கட்டாயமாக இறங்கவைக்கின்றனர்.

சொற்ப பயணிகளுடன் வண்டி நகர, படிக்கட்டில் ஸ்டைலாக பாபு நின்று விசில் ஊதியதோ அல்லது அவரது உடல்மொழியோ மாணவர்கள் மத்தியில் ஒரு நெருப்புப்பொறி போல விழுந்தது அவருக்கு தெரியவில்லை.

வண்டி நகர்கையில் அவர் படியேறி உள்ளே செல்ல, அவரது காலிலிருந்து ஒரு செருப்பு நழுவி கீழே சாலையில்...

கணநேரமும் சிந்திக்காமல் ஓட்டுநரை வண்டியை நிறுத்தச்சொல்லி விசில் அடித்து, நின்றதும் தாவி இறங்குகிறார்.

செருப்பை எடுத்து நிமிர்வதற்குள் சூழும் மாணவர் கூட்டம் மிருகத்தாக்குதல் நிகழ்த்த, ஏராளமான காயங்களோடும், முறிந்த முதுகுத்தண்டுவடத்தோடும் மீற்கப்படுகிறார்.

ஏழைப்பெற்றோர் அதன்பின் பல வருடங்கள் அவரை சக்கர நாற்காலியில் வைத்து பராமரித்த கண்ணீர்க்கதை என் பால்ய நினைவுகளில் இன்றுவரை ஒட்டடை போல படர்ந்திருக்கிறது.


ஏன் மாணவர்கள் இப்படி கொடுந்தாக்குதல் நடத்தினார்கள்?

ஏன் அவர் அந்த ஒற்றை செருப்புக்காக அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தார்?

ஓட்டுநரும் ஏன் வண்டியை நிறுத்தினார்?

என விடையற்ற பல கேள்விகள்...

சமீபத்தில் ஐக்கிய ராச்சியத்தில் (United Kingdom), Black Lives Matter என்ற பெரும் போராட்டம் ட்ரஃபால்கர் சதுக்கத்தில் நடந்தது. முறையாக அரசு அனுமதி பெற்ற போராட்டம்.

அந்த போராட்ட நிகழ்வுகள் நடக்கையில், வெள்ளை போலீசையும் வெள்ளை அரசுகளையும் ஆதரிக்கும் அமைப்பு ஒன்று அதே இடத்தில் கூடி எதிர்போராட்டம் நடத்த, ஒரே அமளி துமளி, அடிதடி...

இந்த அடிதடியில் ஒரு வெள்ளை இன மனிதன் கறுப்பு இன மனிதர்களிடம் சிக்கிக்கொள்கிறான்.

சரமாரியாக அடி, உதை.

மண்டை உடைந்து ரத்தம் ஓடுகிறது!

'Hey! THIS IS SO WRONG! We are NOT supposed to do THIS!!!' என்ற கூக்குரலோடு ஓடி வருகிறான் ஒரு கருப்பின மனிதன், உடற்பயிற்சிக்கூடம் ஒன்றில் பயிற்சியாளராக வேலை செய்பவன்.

அந்த வெள்ளை மனிதனை மேலும் அடிகள் வாங்கவிடாமல் தடுத்து, அவனை அலேக்காக தூக்கி தனது தோளில் கிடத்தி, திமிறும் தன் கூட்டத்தை விலக்கி, அருகில் நிற்கும் ஆம்புலன்சுக்கு கொண்டு சேர்க்கிறான் அந்த கருப்பு இன மனிதன்!

அந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகால இடைவெளி...

எங்கோ தவறிய மனிதம் உயிர்பறிக்க, எங்கோ தழைக்கும் மனிதம் உயிர் காக்கிறது, நம் உலகை இன்னும் தடம் மாறாமல் இயங்கவைக்கிறது...

தீரச்செயல்கள் புரிய அதற்குத்தோதான களம் என்று எதுவுமில்லை. பிறக்கையில் யாரும் வீரத்தோடோ கோழைத்தனத்தோடோ பிறப்பதில்லை.

மனிதத்துக்கும், மனிதாபிமான செயல்களை தேவைப்பட்ட இடத்தில், நேரத்தில் செய்வதற்கும் களம் என்று தனியே எதுவும் தேவையில்லை. 'வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்' (பாலகுமாரன் என்று நினைவு), என நாம் வாழ்கையில், வாழும் காலம் வரையிலும் மனிதாபிமானத்தோடு வாழ்வோமே.

நம் உலகில்

குண்டுகள் வெடிப்பது நிற்காது, 

யுத்தங்கள் ஓயாது.

பசி, பிணி மூப்பும் தேயாது.

மனிதமும்தான்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்