முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மரமேற கற்றுக்கொண்ட மீன்கள்


ஓசை.

ஓசை என்பது தேவையின் அடிப்படையில் எழுப்பப்படுவது. 

தேவைகள் ஓய்வின்றித்தொடரும்போது ஓசை இரைச்சலாக மாறுகிறது.

கண் விழித்து கண்மூடும் இடைவெளியெங்கும் நம் தினங்களை இட்டு நிரப்பியிருக்கிறோம் இரைச்சலினால்.

உரங்கும்போதாவது ஓசையின்றித்தூங்க முடிகிறதா?!

மின் விசிறிகள், குளிர்சாதன எந்திரங்கள், நடுநிசியிலும் வீடருகே விரையும் வாகனங்கள் என இரைச்சல் இங்கு 24*7 ஆகிப்போனது. இத்தனை இரைச்சலினால் அயர்ச்சியாகி தூங்கும்போதும் குறட்டை இரைச்சல்!

குயில்களின் ஓசையும்கூட நம் காதுகளில் சேர்வதற்குள் இரைச்சலில் சிதறிப்போகின்றது...

ஓசை, இரைச்சல் இரண்டையும் தாண்டிய பேரோசையொன்றும் பேரமைதி ஒன்றும் நமக்குள்ளேயே புதைந்துகிடக்கிறது. நாம்நான் கேட்பதாயில்லை.

நம் இதயத்துடிப்பின் ஓசைக்கும் அடுத்த துடிப்பிற்குமான இடைவெளி தரும் பேரமைதியில் நமது ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், தாபங்கள், கோபங்கள் அனைத்தும் நிர்வாணமாய் அலைகின்றன.

அமைதியின் பேரோசையை, அது காண்பிக்கும் இந்த ஆன்ம தரிசனத்தை,  தாங்கமுடியாமல் ஒரு பெருங்கூட்டமே அங்குமிங்கும் அலைந்துகொண்டிருக்கிறது.

மதங்கள், கடவுள்கள், கோட்பாடுகள் எவையும் நமக்கு உண்மையை தரிசிக்கும் ஆற்றலை, பேரோசையை தாங்கிக்கொள்ளும் வலிமையை... தரவே தராது!

மரமேறக்கற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் வாழும் மீன்களாய் நாம் நம்மை பாவிப்பதை நிறுத்தி, 'உனக்கென்ன வேணும் சொல்லு!' என்று நமது இதயத்திடமே கேட்போம். கேட்க கேட்க இதயத்துடிப்புகளின் இடைவெளி அதிகமாகும், பேரமைதி அதில் குடியேறும்.

அமைதியை நோக்கிய நம் பயணம் மட்டும் ஏன் இவ்வளவு இரைச்சலாய்?!

(Image may he under copyright protection, used here for illustration purpose only).

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...