முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Photo post: மழை திவசத்தே களி!

பாண்டியம்மா ரெஃ்பரீய அட்ச்சி தூக்கி!!

பாண்டியம்மா ரெஃபரீய அட்ச்சி தூக்கி!!!  பிகிலு பறக்கும் என நினைத்து தியேட்டருக்குள் நுழைந்ததும் எதுவோ வித்தியாசமாயிருக்கேன்னு உணர்வு சொல்ல, திரும்பி நோட்டம் விட்டேன்; அங்கங்கே காலி இருக்கைகள்!  லேட்டா வருவாங்க போல என்று நினைத்துக்கொண்டேன். யாரும் வரவில்லை. தளபதியின் பிரம்மாண்டமான படம், ஏ ஆர்.ஆரின் இசை, அட்லீயின் டைரக்‌ஷன். மூன்றாம் நாளே காலி இருக்கைகள்... விளையாட்டு பற்றிய நல்ல படம். விஜய்க்குள் ஒளிந்திருக்கும் நல்ல நடிப்பை வெளிக்கொண்டுவந்ததற்கு அட்லீக்கு தாராளமாய் நன்றி சொல்லலாம். மாணிக் பாஷாவுக்கும் வேலு நாயக்கருக்குக்கும் உள்ள இடைவெளியில் ராயப்பன் இஸ் எ டவரிங் பெர்ஃபார்மன்ஸ் என் இனிய தமிழ் மக்களே! நயன்தாரா, அழகாய் இருக்கிறார், வயது ஏறுவது தெரிந்தாலும். இந்திப்பட உலகை தன் முதல் படத்திலேயே திரும்பிப்பார்க்கவைத்து உச்சம் தொட்ட நடிகர் ஒருவரை பம்மாத்து வில்லனாக்கியது, காக்கி உடைக்குள் ரவுடிகள், மாணவர் அடையாள அட்டைகளோடு ரவுடிகள் என வசனங்களால் வன்மம் சேர்த்த காலம் போய் இவற்றை காட்சிப்படுத்தியது, லாஜிக் ஓட்டைகள் நமது பெருநகர மைய சாலையின் மூடியி

எண்ணெய்க்கனவு...

வழுக்கைத்தலைகளில் முடி வளர அமேசான் காடுகளிலிருந்து அரியவகை மூலிகை எண்ணெய்களை கொண்டுவந்து கூவிக்கூவி விற்கிறார்கள் பேராசைப்பெருவணிக நிறுவனங்கள், ஊடகங்கள் வழியே உலகெங்கும். இவர்களுக்காக அரும்பாடுபட்டு அமேசான் காடுகளில் பயிர் வளர்த்த இயற்கை இன்று அங்கு தன் மயிரிழந்து வழுக்கையாகி நிற்பதுகூட இவர்கள் கண்களுக்கு தெரியவில்லை. இழந்த மயிரை திரும்ப வளர்க்க இந்தக்காடுகள் கூட அந்த மூலிகை எண்ணெய்களை வாங்கித்தேய்த்தாகவேண்டும்போல. தேங்காய் எண்ணெய் என்றால் என்ன என்றே தெரியாது ஒரு சிக்குப்பிடித்த சமூகமே கண்ட கண்ட வேதிப்பொருட்களால் ஆன, தலைமயிரில் ஒட்டாத எண்ணெய், கையில் பிசுக்கேற்றாத எண்ணெய், குளிர்காலத்தில் உறையாத எண்ணெய், எண்ணெய் வாசனையற்ற எண்ணெய் என எண்ணெயே இல்லாத எண்ணைகளை தேங்காய் எண்ணெய் என்ற போர்வையில் வெளிச்சம்போட்டுக்காட்டும் பெருவணிகத்தை நம்பி வாங்கி தலையில் தேய்த்து, இருந்ததும் உருக்குலைந்துபோய், ஈறும் பேனும் விளையாடும் தலைமயிரை மேலும் வேதிப்பொருட்களாலான ஷாம்ப்பூ போட்டு கண்டிஷனிங் செய்து தலை குளித்து கண்ணாடியில் பார்த்தால் மயிரே போச்சி, இட்ஸ் கான், காயிந்தே என பல மொழிகளில் புலம்ப

கனவுக்கும் நனவுக்கும் அப்பால்...

மனதில் வேண்டுதலையும் முதுகில் மரக்கன்றுகளையும்  சுமந்து சுமந்து கனவையும் நனவையும் ஊடறுக்கும் சாலைகளில்  கனவையும் நனவையும் ஊடறுக்கும் சாலைகளில் அலைந்து திரிகின்றேன் வருடங்கள் எத்தனை (என) மறந்த பின்பும். இக்கவிதையை வாசிப்பவர்கள் ஒன்றை மட்டும்  நினைவிலிறுத்த வேண்டுகிறேன்: உங்கள் வருங்கால  சந்ததியின் காதுகளில்  சிட்டுக்குருவிகளின் சிறகசைப்பு சுமந்துவரும் சிறுகதையொன்று... வெகுதொலைவிலுள்ள ஒரு நிலப்பரப்பில், இயற்கைக்கு (வெகு) அருகில்  இருக்கும் பெரும்பரப்பில், கனவுகளெல்லாம் நனவாகும் அந்நிலப்பரப்பில் அவை கண்டு களித்த  கதையாகவும் இருக்கலாம், அது இதுவாகவுமிருக்கலாம்: "மரமாக மாறிப்போக தவமாய் தவமிருந்த  மனிதன் ஒருவன் இந்த நிலப்பரப்பில் அன்று இருந்தான்"...

வேலாயுதம் இன்று இல்லை.

வேலாயுதம் இன்று இல்லை. வேலாயுதம் மிக நல்லவர். ஈ எறும்புக்குக்கூட துன்பம் இழைக்காதவர். ஈன்றது அனைத்தையும் நாடி வந்தவர்க்கு வாரி வழங்கியவர். என்ன இடர் வந்தபோதும் தன் 'நிலை' மாறாதவர். பொறுமைசாலி. பேரிடர் சூழ்ந்த போதெல்லாம் தனியனாய் நின்றபோதும் அச்சமற்று நின்றவர். வாழ்வாங்கு வாழ்ந்தவர். யார் கண் பட்டதோ... இவரை வெறுப்பது எவர்க்கும் இயலாது என்று உறுதியாய் எண்ணியிருந்தேன்... வந்தனர் விரோதிகள். இரவோடு இரவாய், இருளோடு இருளாய். உறங்கிக்கொண்டிருந்தவரை  கண்ட துண்டமாய் வெட்டுமளவுக்கு சத்தியமாய் அவர் எந்த பாதகமும் செய்திருக்க வாய்ப்பு இல்லை. இருந்தும் கயிறு கொண்டு கட்டி... வெட்டினரே! வெட்டிய சுவடின்றி தடயமின்றி அள்ளிச்சென்றனரே... வெறிச்சோடிய அவரது வாழ்விடத்தை  கடக்கும்போதெல்லாம் உள்ளே குமிழிடும் நல்நினைவுகள், பீறிடும் சோகம்... ஏனிப்படி ஆச்சு? படிக்கையிலேயே சோகம் கவ்விக்கொள்ள, நெஞ்சு பதைக்க தவிக்கிறீர்களே, வேலாயுதம் ஒரு மரமாக இருந்தால் உங்கள் தவிப்பு நீடித்திருக்குமா இந்த எழுத்தை வாசிக்கும் இந்த நொடி வரை? மன

தாகங்கொண்ட மீனொன்று

தாகம் கொண்ட மீனொன்று கட்டாந்தரையில் கடப்பாறை நீச்சலடித்து பெட்டிக்கடைக்கு சென்று தண்ணீர் பாட்டில் கேட்டதாம். "காசிருக்கா?" இருக்குங்க. "உனக்கு எப்படி...?" தண்ணில வந்ததுங்க. எதுக்கும் உதவும்னு முழுங்கியிருந்தனுங்க. "சரி சரி, குளிக்கவா குடிக்கவா?" குடிக்கவே தண்ணியக்காணோம் இதுல குளிக்கிறதெங்க? "காணமுன்னா?" ஒண்ணுந்தெரியாத மாதிரி கேக்கறீகளே நியாயமா? ஒரு கோடை முழுக்க உசுர கையில புடிச்சிகிட்டு பருவம் வந்தாச்சே மழைத்தண்ணி வருமின்னு காத்திருந்தா... கண்ட கருமமெல்லாம் வருது தண்ணிய மட்டும் காணும். வாய்க்காலெல்லாம் எங்கேன்னு விசாரிச்சா வாய்க்காலா? இல்லவே இல்லயே, இங்கன அசோகரு காலத்துலேந்து டி.டி.சி.பி அப்ரூவ்ட் லேயவுட்டுதான இருக்குன்னு ஆதாரத்தோட நிக்காக பலபேரு.  வேற யாருகிட்ட கேக்கலாமுண்டு அங்க ஓடி இங்க ஓடி நா வறண்டு தண்ணி குடிக்கலாமுன்னு இங்கன வந்தா பகடி பேசுறீகளே நியாயமா? ஒங்க கடை நிக்கிற இடத்துக்கு அடில கூட எங்களோட தண்ணிதானய்யா ஓடிகிட்டிருந்தது?... மீனெல்லாம் நியாயம் பேசுற அளவுக்கு நாமளோட நிலம மோசமாயிடிச்சேங்கிற க

யாராவது என்னை காப்பாத்துங்க!!!

நாடு இருக்கும் நிலைமையில் நட்புக்கு கூட (அரசியல் கட்சி) வர்ணபேதம் உண்டாவது கவலை அளிக்கிறது. உறவுக்கும் கூட அதுவே... சாகாகாரம் வளர்த்த நிலப்பரப்பு இன்று சிந்தனையிலும் சகிப்புத்தன்மையற்று மாறிக்கொண்டிருக்கிறது. மாற்றான் தோட்ட மல்லிகைகளும், We agree to disagree, we remain friends with differences as before நிலைப்பாடுகளும் வலுவிழந்து போகின்றன. சில நாட்களுக்குமுன் ஒரு புகைப்படம் எடுத்தேன். எனது ஒரு ஆழ்ந்த கவலையை / தீர்வை வெளிப்படுத்தும் வண்ணம் அந்த புகைப்படத்தில் ஒரு சிந்தனையை விதைத்து எனது தொடர்பு வட்டத்துள் பகிர்ந்தேன். அவர்கள் அனைவரும் பல ஆண்டு நட்புகள், அரசியல் சாராத என் நிலைப்பாடு நன்கு அறிந்த நட்புகள்.  நான் அனுப்பிய இந்த புகைப்படத்தில் தொடங்குகிறது அவர்களுள் சிலருடன் ஒரு உரையாடல். Me: குடிமக்கள் பதிவேடு (NCR) ஏன் நமது கால்நடைகளுக்கும் கொண்டுவரக்கூடாது? வந்தால் என்ன ஆகும்? "NRC காங்கிரஸ் கொண்டுவந்தது. ஜெர்சி பசுக்களும் காங்கிரஸ் கொண்டுவந்தது. காங்கிரஸ் 60 ஆண்டுகளாய் நாட்டை பாழ்படுத்திக்கொண்டிருக்கையில் ஏன் யாரும் இதைப்பற்றி வாயே திறக்கவில்லை?"

பூமி வண்ணம் பெற்ற கதை

வண்ணத்தியின் இறகுகளிலிருந்து உதிர்ந்த வண்ணங்களால் உருமாறிப்போச்சு நம் கருப்பு வெளுப்பு உலகம். தொட்டால் உதிரும் வண்ணங்களோடு ஒரு இறை தத்தித்தாவி அமர்ந்து பறந்து காற்றேறி நம் பார்வையிலிருந்து கரைந்தபின்னும் அந்த வண்ணங்கள் மிதக்கும் கண்களோடு வேறு இறை தேடும் வாழ்வு கிட்டிய குழந்தைகளும் இறையே! ஒரு வயல். ஒரு சிறு பிள்ளை. பல பச்சை இலைகள். ஊசித்தும்பி, தட்டான், வண்ணத்தி என சில நட்புகள். கண்மூடி கற்பனை செய்துபாருங்கள் இந்த 'வெளியில் என்னென்ன அற்புதங்கள் நிகழலாம் என. பதுங்கிப்பதுங்கி ஊசித்தட்டான் கொண்டைக்கண்களில் சிக்காமல் அதன் பின்தொடர்ந்து வால் பிடிக்க முயலும் சிறுமி, அவளிடம் சிக்காமல் போக்கு காட்டும் தட்டான், அவள் கவனம் கலைக்கும் வண்ணத்தியின் பூ நடனம், பொன்குவியல் ஒளிக்கீற்று முகம் வருட, காலடித்தோலை மெத்தென வருடும் பனி ஈரப்புல்வெளி... இறை சூழ இறை ஒன்று நடனம் ஆடும் வெளியாக அது ஒரு நொடியில் மாறிப்போகும் விந்தையை நேரில் உணர்ந்த ஒரு சிறுவன் இன்னும் என்னுள் உயிர்ப்புடன் இருக்கிறான். அங்கு வணிகமில்லை, பெருவிருப்பமில்லை, பெருங்கோபமில்லை,  போட்டியில்லை, பொறாமையி

வண்ணங்கள் வழிந்தோடும் வாழ்க்கை...

கண் திறந்து கனவு காண நம்மைச்சுற்றி முளைத்து நிற்குது ஏராளம். அவற்றுள் தொக்கி நிற்குது, கொட்டிக்கிடக்குது நமக்காக இயற்கை இறை வகுத்த பெரு வாழ்வு. வாருங்கள், கனவு காணுவோம். வாழ்வே தவம், அதுவே வரம்!