முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எண்ணெய்க்கனவு...

வழுக்கைத்தலைகளில் முடி வளர அமேசான் காடுகளிலிருந்து அரியவகை மூலிகை எண்ணெய்களை கொண்டுவந்து கூவிக்கூவி விற்கிறார்கள் பேராசைப்பெருவணிக நிறுவனங்கள், ஊடகங்கள் வழியே உலகெங்கும்.

இவர்களுக்காக அரும்பாடுபட்டு அமேசான் காடுகளில் பயிர் வளர்த்த இயற்கை இன்று அங்கு தன் மயிரிழந்து வழுக்கையாகி நிற்பதுகூட இவர்கள் கண்களுக்கு தெரியவில்லை.

இழந்த மயிரை திரும்ப வளர்க்க இந்தக்காடுகள் கூட அந்த மூலிகை எண்ணெய்களை வாங்கித்தேய்த்தாகவேண்டும்போல.

தேங்காய் எண்ணெய் என்றால் என்ன என்றே தெரியாது ஒரு சிக்குப்பிடித்த சமூகமே கண்ட கண்ட வேதிப்பொருட்களால் ஆன, தலைமயிரில் ஒட்டாத எண்ணெய், கையில் பிசுக்கேற்றாத எண்ணெய், குளிர்காலத்தில் உறையாத எண்ணெய், எண்ணெய் வாசனையற்ற எண்ணெய் என எண்ணெயே இல்லாத எண்ணைகளை தேங்காய் எண்ணெய் என்ற போர்வையில் வெளிச்சம்போட்டுக்காட்டும் பெருவணிகத்தை நம்பி வாங்கி தலையில் தேய்த்து, இருந்ததும் உருக்குலைந்துபோய், ஈறும் பேனும் விளையாடும் தலைமயிரை மேலும் வேதிப்பொருட்களாலான ஷாம்ப்பூ போட்டு கண்டிஷனிங் செய்து தலை குளித்து கண்ணாடியில் பார்த்தால் மயிரே போச்சி, இட்ஸ் கான், காயிந்தே என பல மொழிகளில் புலம்பி இந்த முறை ஆப்பிரிக்க காடுகளில் விளைந்த மூலிகை எண்ணெய்களை தேடி ஓடும். அவர்களை கண்டு இந்த உலகில் எஞ்சிய காடுகளும் அஞ்சிப்பதுங்கும். காடுகளைத்தேடி காணாது கோபமான சூரியனின் குத்துக்கதிர்கள் குத்தித்துளைக்க, தாங்கமுடியாமல் ஏ.சி அறையில் பதுங்கும் இந்த சமூகம், சூரிய ஒளி கிட்டாமல் வைட்டமின் டி டிஃபிஷியன்சி என வைட்டமின் (ஊக்கமேற்றிய) உப்புக்களை சூரியன் மறைந்த மாலை பின்னிரவுகளில் கடைகளில் வாங்கி உண்ணும். 

இவையெல்லாவற்றையும் பார்த்து வெம்பி வெதும்பி வாயில் துண்டு பொத்தி அழும் தென்னெய் விவசாயிக்கு ஒரு காய் விற்றால் கிடைக்கும் பணம் ஆறிலிருந்து பனிரெண்டு ரூபாய். 1970-2012 ஆறு ரூபாய். 2012-2017 ஒன்பது ரூபாய். 2018 கஜா புயலுக்குப்பின் பன்னிரெண்டு ரூபாய்.

செலவு கழித்து பார்த்தால் காய்க்கு தேறுவது எதுவுமில்லையே! நட்டத்தில் அல்லவா தென்னை வளர்க்கிறோம்! என்ற ரியலைஷேசனில் எஞ்சிய கொஞ்சநஞ்ச மயிரும் கொட்டிப்போய் தலை வழுக்கையான இந்த விவசாயியையும் மூலிகை எண்ணெயை தேடி ஓட வைத்ததில் இல்லை பேராசைப்பெருவணிகத்தின் வெற்றி ரகசியம். இந்தப்பதிவை படித்தபின் 'இதுவும் கடந்துபோகும்' என நம்மை அடுத்த நுகர்வை நோக்கி நகரவைக்கும் ஆன்மபலம் இழந்த நம் அறச்சமூக அக்கறையில் தொங்கி நிற்கிறது அதன் வெற்றி.

பீம புஷ்டி லேகியம்கூட வெளிநாட்டில் இருந்து வாங்கி உண்ணும் நமக்கு இதெல்லாம் சகஜமப்பா என்று நகைத்து நகராமல் பண்டிகை தினங்களிலாவது சுத்தமான தேங்காய் எண்ணெயில் தலையை ஊறவைத்து குளித்தால் கற்பகத்தருவென காலம்தோறும் போற்றப்படும் தென்னையே வாழ்த்தும்! அதை சார்ந்த கிராமப்பொருளாதாரமும் வாழும், வளரும்!

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்