முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாண்டியம்மா ரெஃ்பரீய அட்ச்சி தூக்கி!!




பாண்டியம்மா ரெஃபரீய அட்ச்சி தூக்கி!!! 

பிகிலு பறக்கும் என நினைத்து தியேட்டருக்குள் நுழைந்ததும் எதுவோ வித்தியாசமாயிருக்கேன்னு உணர்வு சொல்ல, திரும்பி நோட்டம் விட்டேன்; அங்கங்கே காலி இருக்கைகள்! 

லேட்டா வருவாங்க போல என்று நினைத்துக்கொண்டேன். யாரும் வரவில்லை.

தளபதியின் பிரம்மாண்டமான படம், ஏ
ஆர்.ஆரின் இசை, அட்லீயின் டைரக்‌ஷன். மூன்றாம் நாளே காலி இருக்கைகள்...

விளையாட்டு பற்றிய நல்ல படம். விஜய்க்குள் ஒளிந்திருக்கும் நல்ல நடிப்பை வெளிக்கொண்டுவந்ததற்கு அட்லீக்கு தாராளமாய் நன்றி சொல்லலாம். மாணிக் பாஷாவுக்கும் வேலு நாயக்கருக்குக்கும் உள்ள இடைவெளியில் ராயப்பன் இஸ் எ டவரிங் பெர்ஃபார்மன்ஸ் என் இனிய தமிழ் மக்களே!

நயன்தாரா, அழகாய் இருக்கிறார், வயது ஏறுவது தெரிந்தாலும்.

இந்திப்பட உலகை தன் முதல் படத்திலேயே திரும்பிப்பார்க்கவைத்து உச்சம் தொட்ட நடிகர் ஒருவரை பம்மாத்து வில்லனாக்கியது,

காக்கி உடைக்குள் ரவுடிகள், மாணவர் அடையாள அட்டைகளோடு ரவுடிகள் என வசனங்களால் வன்மம் சேர்த்த காலம் போய் இவற்றை காட்சிப்படுத்தியது,

லாஜிக் ஓட்டைகள் நமது பெருநகர மைய சாலையின் மூடியில்லாத பாதாள சாக்கடை த்வாரம் போல அங்கங்கே எட்டிப்பார்ப்பது,

பெண்களை லிபரேட் செய்யும் மக்களின் வண்ணம் vs அடிமைப்படுத்தும் மக்களின் வண்ணம் போன்ற க்ளிஷேக்கள்,

அட்லீ தனக்குள் ஒரு ப.ரஞ்சித் இருக்கிறார் என நம்புவது,

இரு மாநில அணிகளின் இடையேயான உதைபந்தாட்ட கோல் டிஸ்ப்ளேயில் கோல் எண்ணிக்கை மாறுவதற்கெல்லாம் ஏ.ஆர.ரஹ்மான் ட்யூன் போட்டிருப்பது (ஹேய் யாராவது அந்த ம்யூசிக்க கொஞ்சம் நிறுத்துங்கப்பா என்று கெஞ்சவைக்கிறது படம் முழுதும் இடைவெளியின்றி வெளுக்கும் பிண்ணனி இசை)

பெனால்டி கிக்குக்கு மட்டும் மெயின் லெவனில் இல்லாத காயத்ரி 

என பல காட்சியமைப்புகள் கருத்தை உறுத்தினாலும், 'பிகிலு, கப்பு முக்கியம் பிகிலு,..' என கர கர பாசக்குரலில் ராயப்பன் ஜெயித்துவிட்டார்!

இதற்காக மட்டுமே பார்க்கவேண்டிய படம் :-)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்