முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கேள்வி வேள்வி

எது இதம்? எது பதம்? எது சிவம்? எது மனம்? எது அகம்? எது குணம்? எது சுகம்? எது அறம்? எது மறம்? எது கணம்? எது நிணம்? ... ஜீவிதம், தினம் தினம்.

சுவடுகள் பதிவான கதை

நான் இளைப்பாறியிருந்த குடில் அருகில் அவளை பார்த்தேன். தன்னைச்சுற்றி பரபரப்பாய் இயங்கும் உலகத்தை மோனப்பார்வை பார்த்தபடி நின்றிருந்தாள். அவ்வப்போது வீசும் காற்றோடு கரங்களை அசைத்தபடி, பெய்யும் மழைத்துளிகளில் நனைந்தபடி.  "அட, என்னைப்போல் ஒருத்தி!" என கண்டதுமே மையலானேன். மரியாதைக்குறிய இடைவெளியில் நின்றுகொண்டு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். 'நீதானா அது?' என்பதாக ஒற்றைப்பார்வை; பறவைகள் என்னைப்பற்றி அவளிடம் ஏதேனும் சொல்லியிருக்கலாம்... பல வருடமாய் அங்கு உற்றமும் சுற்றமும் சூழ வாழ்ந்தவளாம். எறும்புக்குக்கூட தீங்கிழைக்காத கூட்டமாம்.  ஏனென்றே தெரியாமல், முன்னறிவிப்பின்றி, கூட்டம் 'கூட்டமாய்' கொல்லப்பட, எஞ்சியவள் இன்று வரை ஒற்றையாய்... சில நாள் நட்புடன் உரையாடியபின்னரே அவளை படம் எடுக்க அனுமதி கேட்டேன். 'என் அழகை படமெடுக்க ஆவலா அல்லது நான் வாழ்ந்து காக்கும் என் சுற்றத்தின் (சு)வடு(க்)களை படமெடுக்க விருப்பமா?' என்றாள். "உன் விருப்பமே என் விருப்பம்" என்றேன்.

ஏதோ ஒரு பொழுதில்

ஏதோ ஒரு பொழுதில் எதிர்பாரா நொடியில் நினைவு இழைகள் அறுந்து... போகலாம். அந்தப்பொழுது இப்பொழுதல்ல. இவ்விரு பொழுதுகளின் இடைவெளியில் ஊடாடுது வாழ்வெனும் பெருநதி. கடந்த பொழுதின் நெளிவுசுளிவு வழி வழிந்தோடுது இன்றைய நம் பொழுது. இன்றைய திவலை அன்றைய திவலையல்ல. இன்றைய நுரை அன்றைய நுரையல்ல. இன்றைய கரை அன்றைய கரையல்ல. கரைதழுவி நதியோட நதிதழுவி வாழ்வோட ஓட்டத்தின் பெருமூச்சு உந்தித்தள்ளும் பொழுதுகளை. கடந்த பொழுதை மீண்டும் தீண்ட நதியோட்டம் இடம்கொடா. காலப்புதுவெள்ளம் கழுவிச்செல்லும் பழைய நதியின் எஞ்சிய பொழுதை. நழுவியோடும் வாழ்வு எவ்விதம் எனினும் நதி வழி நாம் விதைத்த கரை மரங்கள் நிற்கும் மௌனமாய் காலத்தின் சாட்சியாய் வாழ்வின் நீட்சியாய். நீருண்ட மகிழ்வில் உதிரும் இலைவழி நதியிறங்கும் நன்றிக்கடன். அண்டமும் பிண்டமும் ஒன்றான போதும் மரம் தருவதே நமக்கான பிண்டம். நதிநீ்ரின் சுழி சுழியின் கண் கண்ணின் கருவிழி எனது இக்கவிதை. நதி நமதானாலும் உன் கவிதையாகாது என் கவிதை.

கானல் நீரும் காணாமல் போகும்

கானல் நீரும் காணாமல் போகும் ######################### வருங்காலம் இனி வரும் காலமா அல்லது வெறுங்காலமா என அறிந்தும் அறியாத மோனப்பெருநுகர்வில் நாம் துயில, பேராசை பெருவணிக காலடிச்சுவடு பட்டு இதுவரை காணாமல் போனது போக எஞ்சிய காடும் மிஞ்சாது போகும் மிஞ்சிய மலையும் மடுவாய் மாறும் ஆறுகளின் தடமும் அழிந்து போகும் துண்டுபட்ட நிலமும் நஞ்சாகி முழுகும் கடல் கொப்பரையில் நீரினங்கள் வேகும் வானப்பறவைகள் வெந்து வசைபாடி சாகும் சுவாசக்காற்றே நுரையீரலை பொத்தலிட்டு சுடும் கானல் நீரும் காணாமல் போகும். நமக்கென்ன போச்சு பூமி  செத்தால்? பூமிக்கென்ன போச்சு நாம் செத்தால்? Dante's Divine Comedy is Real. We are turning earth into hell simply to stage it... பழைய உலகை சமைத்து உண்டு முடித்தபின் மட்டுமே புதியதோர் உலகு செய்வோம் என்பது வீண் வாதம்.  வெந்தது தணிய, எஞ்சியது வாழ, நாம் ஒவ்வொருவரும் ஒற்றை மரம் நட்டு வளர்த்தால் போதும்; நம் கையளவு பூமியேனும் தப்பிக்கும். 

அப்பா

அப்பா அ ப் பா அ   ப்   பா   அ                    ப்                     பா       நாம் வளர வளர, விலக விலக, விரிந்துகொண்டே போகும் ஆளுமை, நம் தகப்பன் கொடை ###### நல்ல தகப்பன் அமைவது இறை தரும் கொடை; 'என்னால ஒன்ன வாழ்க்க முழுசும் பாத்துக்க முடியாது. அதனால் இவர தந்திருக்கேன்' என இறை சொன்னதாய்... இன்று இந்தப்பதிவை படிக்கும் நாம் ஒவ்வொருவரும் என்றோ ஒருநாள் பிடித்த அந்த சுண்டுவிரல் தந்த தைரியத்தில் எடுத்துவைத்த முதல் அடிதானே நமை இத்தனை தூரம் கொண்டு வந்திருக்கிறது?! நடிகர் திலகம் சிவாஜியைவிட அதிக கெட்டப்பில் நாம் அவரை வெவ்வேறு தருணங்களில் உணர்ந்து கொண்டாடினாலும் வெறுத்தாலும் அவர் எப்போதும்போல தகப்பனாகவே இருக்கிறார்... தாய் மார்பில் சுரக்கும் பாலும் வற்றிப்போகும், தன் குழந்தை பால்குடி மறந்தபின்; எங்கோ தொலைவில் மகனின் / மகளின் கிளைகள் என்று வாடினாலும், பட்டே போனாலும் ஈரம் கசியும் தகப்பன் மர வேரில், இன்றும் கூட... ஜெயகாந்தன் என்ற மகா எழுத்தாளுமை, ஒரு முறை தன் தகப்பனை பற்றி பகிர்கையில் இப்படி சொல்லியிருந்தாராம், 'திருப்பி அடிக்க முடியாத கோப

இடையினம்

எழுத்துக்களில் கூட இடையினத்திற்கு இடம் தந்த ஒரு செழுமையான வாழ்வியல் முறை நம்முடையது. அது இப்போது இடையினத்தை நடத்தும் விதம்... பெரும்பாலான வீடுகளில் பதின்பருவ ஆண்குழந்தைகள் தங்களுக்கு மீசை அரும்பவில்லை என்னும் கவலை முதல் பாலியல் பற்றிய அரைகுறை புரிதலுடனும் ஏராளமான கற்பனைகளுடனும் சில அச்சங்களுடனும் தடுமாறுவது இயல்பு. அப்போது சுற்றமும் உற்றாரும் அவர்களை நடத்தும் விதம் வாழ்நாளையே புரட்டிப்போடக்கூடிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். 'மீசையே மொளைக்கலை, பொம்பள முகம் மாதிரி இருக்கு' என்பதில் தொடங்கி, '9, ஓசை...' என பல்கிப்பெருகும்போது அவர்களை அரவணைத்து நடத்திச்செல்லவேண்டிய பெற்றோருக்கு நேரம் இருப்பதில்லை. பெண் குழந்தைகளுக்கோ, உடல் வளர்ச்சி போதவில்லையே, முகம் அழகாயில்லையே, உயரமாயில்லையே, தலைமுடி சிக்கல் என பலப்பல சிக்கல்கள். தங்களைப்பார்த்து வழியும் விடலைகளும் இந்த சிக்கலுக்குள் அடக்கம். சக வயது நண்பர்களிடம் ஆலோசனை பெறலாம் என்றால் அவர்களே அதிக குழப்பங்களை விதைப்பதுதான் நடக்கும். இவர்களது குழப்பங்களே இவர்களை பாலியல் சீண்டல்களிலும் சிக்கவைக்கிறது. சமுதாயத்த

காற்றின் கதை

கொடியசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடியசைந்ததா? காற்றின் கதை ########### காற்றின் கரங்கள் வருடிச்சென்றாலும் சாய்த்துச்சென்றாலும் மரங்கள் கோபம் கொள்வதில்லை. எங்கோ தொடங்கிய காற்றின் பொறியை  ஊதி அணைப்பதும் மரங்கள்தானே? ! 'இது என்ன புதுக்கதை?!' என்கிறீர்களா? இது மிக மிக பழைய கதை. அதிகம் சொல்லப்படாத கதை. காற்று, வீசுவதில்லை. சூரிய வெப்ப மாறுபாடுகளால் ஈர்க்கப்படுகிறது :-) சூரியனின் சூடுபட்டு தரை சூடாகி, அந்த சூடு தரைமேலுள்ள ஈரக்காற்றில்* ஏற, சூடாகிப்போன காற்று எடை குறைந்து மேலெழும்ப, அங்கு உண்டாகும் வெற்றிடத்தை அருகிலுள்ள ஈரக்காற்று நிரப்ப, இப்படித்தான் காற்று நகர்கிறது, வடக்கு தெற்காய் (நிலநடுக்கோட்டுப்பகுதிதான் அதிகமான சூடு படும் பகுதி. வட துருவமும் தென் துருவமும் பனிசூழ்ந்து குளிர் குளிர் குளிர் பகுதிகள்). இதனோடு பூமியின் சுழற்சியும் சேர்ந்துகொள்ள (வடமேற்கு திசையில் சாய்ந்த அச்சில் சுத்துதே சுத்துதே பூமி) நமக்கு வடகிழக்கு அல்லது தென்மேற்கு காற்று கிடைக்கிறது! (* கடல் நீர் சூரிய அடுப்பில் சூடாகி மேலெழும்பி நிலத்தில் நுழைந்

மண்ணீர் தண்ணீர் கண்ணீர்

இந்தியாவின் இன்றைய தேசிய கீதம், "கோடை எனை வாட்டுதே...". ஒவ்வொரு அரிசியிலும் உண்பவர் பெயர் எழுதியிருக்கிறது இறை. அதாவது, முகவரி கொடுத்தவர்கள் பெயர் மட்டுமே! இறைக்கு முகவரி தருவதா? ஆம். எப்படி? இறை தூதர்கள் வழியே? கிருத்துவமா? இல்லை, மரத்துவம். மரங்கள் இறை தூதர்கள். நாம் நடும் ஒவ்வொரு மரமும் நம் முகவரியை இறை சேர்க்கும். வேர் வழியே மண்ணில் இறங்கும் மழைத்துளிகள் நமக்கான அரிசிக்கு உயிர்தரும், வளர்த்தெடுக்கும், நமது பெயரை அந்த அரிசியில் பதியவைக்கும். இறை செய்வதோ அஞ்சல் சேவை மட்டுமே. மரங்கள் இன்றி இறைக்கும் உணவில்லை தெரியுமா?! தண்ணீர் வேண்டுவோர் மண்ணீர் சேர்ப்போம். சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்? நீரானாலும் சோறானாலும்!