முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காற்றின் கதை


கொடியசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடியசைந்ததா?

காற்றின் கதை
###########

காற்றின் கரங்கள்
வருடிச்சென்றாலும்
சாய்த்துச்சென்றாலும்
மரங்கள் கோபம் கொள்வதில்லை.

எங்கோ தொடங்கிய காற்றின் பொறியை 
ஊதி அணைப்பதும் மரங்கள்தானே? !

'இது என்ன புதுக்கதை?!' என்கிறீர்களா?

இது மிக மிக பழைய கதை. அதிகம் சொல்லப்படாத கதை.

காற்று, வீசுவதில்லை. சூரிய வெப்ப மாறுபாடுகளால் ஈர்க்கப்படுகிறது :-)

சூரியனின் சூடுபட்டு தரை சூடாகி, அந்த சூடு தரைமேலுள்ள ஈரக்காற்றில்* ஏற, சூடாகிப்போன காற்று எடை குறைந்து மேலெழும்ப, அங்கு உண்டாகும் வெற்றிடத்தை அருகிலுள்ள ஈரக்காற்று நிரப்ப, இப்படித்தான் காற்று நகர்கிறது, வடக்கு தெற்காய் (நிலநடுக்கோட்டுப்பகுதிதான் அதிகமான சூடு படும் பகுதி. வட துருவமும் தென் துருவமும் பனிசூழ்ந்து குளிர் குளிர் குளிர் பகுதிகள்). இதனோடு பூமியின் சுழற்சியும் சேர்ந்துகொள்ள (வடமேற்கு திசையில் சாய்ந்த அச்சில் சுத்துதே சுத்துதே பூமி) நமக்கு வடகிழக்கு அல்லது தென்மேற்கு காற்று கிடைக்கிறது!

(* கடல் நீர் சூரிய அடுப்பில் சூடாகி மேலெழும்பி நிலத்தில் நுழைந்து போர்வையாய் மாறுகிறது.)

கவியரசர் கண்ணதாசன் காலத்தில் கொடியசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடியசைந்ததா? என்ற ஆராய்ச்சியை மட்டுமே அறிந்திருந்த நாம், அம்மாவின் மூச்சுக்காற்று நிரம்பிய ஏர் பில்லோ சென்டிமென்டை தாண்டி இன்று எல் நினோ, லா நினா, மாடன் ஜூலியன் ஆசிலேஷன் என்றெல்லாம் அறிவு வளர்த்திருக்கிறோம். ஆனால் 'பில்டிங்கு ஸ்ட்ராங்கு...ஃபவுண்டேஸன் வீக்கு' என்பதாகவே இன்றுவரை இருக்கிறோம்.

எப்படி என பார்ப்போமா?

நிலப்பரப்பு முழுதும் இயற்கை அரண்களாய் மலைகளோ, மரங்களோ இருந்தவரையில் வெப்பக்காற்று குளிர்வதற்கு தொலைதூரம் செல்வது தேவையில்லாதிருந்தது. 'எங்கே கொதித்ததோ அங்கேயே குளிர்ந்தது' என குளிர்விக்க மலைகளும் மரங்களுமே போதுமானது, அன்றும், இன்றும், என்றும்.

Iran

படகோனியா

Patagonia

Galapagos

"கடப்பாக்கல்லு ஸ்லாபு அடுப்படிக்கு, ராஜஸ்தான் மார்பிள் வீட்டுத்தரைக்கு, இத்தாலியன் மார்பிள் பாத்ரூமுக்கு, பர்மா தேக்குல கட்டிலு, கனடியன் டிம்பர்ல டேரேஸ் ரூஃபு, மலேசியன் ரப்பர் வுட்டில ஃபர்னிச்சர்லே, எல்லாமே இம்ப்போர்ட்டுலே" என நாம் இம்போர்ட் செய்வதெல்லாம் அந்தந்த ஊர்களிலும், நாடுகளிலும் அழிக்கப்பட்ட மலைகளையும் மரங்களையும்தானே?!

மலைகள், மரங்கள் அழிந்து வெற்றிடம் உருவாவதால்தான் பசிபிக் பெருங்கடலில் எல் நினோ உருவானால் சூடான காத்து சூடு குறையாமலே ஃப்ரீயா வாக்கிங் வந்து நம் வீட்டுக்கதவை தட்ட, நமக்கு இங்கு வேர்த்துக்கொட்டுகிறது, நம் விவசாயிகள் வயிற்றில் புளியை கரைக்கிறது, டேங்க்கர் லாரிகளை நம் சாலைகளில் பறக்கவைக்கிறது...













பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் வெட்டிச்சிதைக்கப்பட்ட மலைகளையும் மரங்களையும் பெரும்புகை கக்கும் வாகனங்கள் சுமந்து வந்து பெருவணிக 'சாலைகள்' வழியே நம் வீடுகளில் அடக்கம் செய்து... நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றை நச்சாக்கி நம் வாழ்நாளையும் குறைக்கிறது. இப்படி வீட்டையே சுடுகாடாக்கி இறந்தவர் மத்தியில் வாழ்பவர் எப்படி நீண்ட நாள் வாழமுடியும்?!
எங்கு ஓடுவது இங்கிருந்து?
மலைகளையும் மரங்களையும் வெட்டி வீழ்த்துவதை நிறுத்தி, மரங்களை அதிகமாய் வளர்த்து, தேவைகள் குறைந்து வாழ்ந்தால் மட்டுமே இந்தக்காற்றின் கதையை அடுத்த தலைமுறைகளுக்கு சொல்ல நாம் உயிரோடிருப்போம், அவர்களும் உயிரோடிருப்பார்கள்...




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்