முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடையினம்

எழுத்துக்களில் கூட இடையினத்திற்கு இடம் தந்த ஒரு செழுமையான வாழ்வியல் முறை நம்முடையது. அது இப்போது இடையினத்தை நடத்தும் விதம்...

பெரும்பாலான வீடுகளில் பதின்பருவ ஆண்குழந்தைகள் தங்களுக்கு மீசை அரும்பவில்லை என்னும் கவலை முதல் பாலியல் பற்றிய அரைகுறை புரிதலுடனும் ஏராளமான கற்பனைகளுடனும் சில அச்சங்களுடனும் தடுமாறுவது இயல்பு. அப்போது சுற்றமும் உற்றாரும் அவர்களை நடத்தும் விதம் வாழ்நாளையே புரட்டிப்போடக்கூடிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

'மீசையே மொளைக்கலை, பொம்பள முகம் மாதிரி இருக்கு' என்பதில் தொடங்கி, '9, ஓசை...' என பல்கிப்பெருகும்போது அவர்களை அரவணைத்து நடத்திச்செல்லவேண்டிய பெற்றோருக்கு நேரம் இருப்பதில்லை.

பெண் குழந்தைகளுக்கோ, உடல் வளர்ச்சி போதவில்லையே, முகம் அழகாயில்லையே, உயரமாயில்லையே, தலைமுடி சிக்கல் என பலப்பல சிக்கல்கள். தங்களைப்பார்த்து வழியும் விடலைகளும் இந்த சிக்கலுக்குள் அடக்கம்.

சக வயது நண்பர்களிடம் ஆலோசனை பெறலாம் என்றால் அவர்களே அதிக குழப்பங்களை விதைப்பதுதான் நடக்கும். இவர்களது குழப்பங்களே இவர்களை பாலியல் சீண்டல்களிலும் சிக்கவைக்கிறது.

சமுதாயத்தின் மையத்தில் தனிமைப்பட்டு நிற்பது எவ்வளவு கொடுமை? வேறு வழியின்றி, தப்பிக்க விளிம்புநிலை தேடத்தொடங்கி ஒரு கட்டத்தில் சமுதாய விளிம்பிலிருந்து கீழே கீழே விழுந்து சிதைந்தவர்கள் ஏராளம்.

இடையினம் என்பதும் இயற்கையின் நியதிதான் எனப்புரியாத ஒரு பெருங்கூட்டம் இன்றுவரை இது ஒரு மனநோய் என்று மறுத்துவந்தாலும் இதே கூட்டத்தின் இன்றைய வாரிசுகள் உலகமயமான நுகர்வு பெருவாழ்வில், Hey I am Gay, Hey I am Lesbian, Hey I am bisexual, Hey I am bicurios என சமுதாய விளிம்புகளை விரிவாக்கிக்கொண்டிருக்கின்றனர். அறிவியலும் ஆய்வுகளும், 'ஆண், பெண், அது' என்பது பழங்கதை; பாலின அடையாளமே தேவையில்லை: என்ற நிலைக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது. மரபு சார்ந்த நம்பிக்கைகள் ஒருபுறம் நம் ஒரு காலைச்சுற்ற, அசுர வளர்ச்சி காணும் shrinking world தொடுக்கும் பன்முனை தாக்குதல்கள் நம் மறு காலைச்சுற்ற... இடையில் கிழிபடுவது நமது வாழ்வியல் கோட்பாடுகள்தான்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையான தகப்பனிடம் சிறு மகன் வைக்கும் வேண்டுகோள், 'நீ எப்படி வேணும்னா இருந்து தொலை. ஆனா எங்களோட இரேன்' - நம் எதிர்காலத்தலைமுறையிடம் நாமும் வேண்டும் நிலை தொலைவிலில்லை.

ஆண்-பெண் உறவே புவியில் வாழ்வு தொடர உதவும் என்பது பெரும்பாலான உயிர்களுள் இயற்கை பொதித்து வைத்திருக்கும் விதை. இது மாறிப்போனால் அவர்களை இயற்கையே ஒதுக்கிவிடும். நமது உதாசீனமோ அவமதிப்புகளோ தேவையில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்