முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இதயமே இதயமே, உன் மௌனம் என்னை...

கோவை நகரின் இதயத்துடிப்பை உணர எளிதான வழி, டவுன்ஹாலின் ஒப்பணக்கார வீதியில் ஏதாவது ஒரு சனிக்கிழமை மாலையில் நடந்து சுற்றுவது.  ரயில்வே ஜங்ஷனின் பின்புறம் தொடங்கி பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகள் துவங்கும் இடம் வரை பரவியிருக்கும் ஒரு பெரிய இதயம் இப்பகுதி. விலை உயர்ந்த நகைக்கடைகள், மலிவு விலை அலங்கார நகைக்கடைகள், சோப்பு, சீப்பு, செருப்பு, பெல்ட்டு, நாட்டு மருந்து, லாலா இனிப்பு, திரஜ்லால் மிட்டாய்வாலாக்கள், கடிகார கடைகள், பழைய புத்தகங்கள் விற்கும் கடைகள், இன்னும் ளராளமான கடைகளை உள்ளடக்கிய ஒரு மகா நெரிசலான பகுதி. ஏராளமான உணவகங்கள், இடையிடையே கோவில்கள் / மசூதி / தேவாலயம் + அங்கங்கே வட இந்திய சகோதரர்களின் வறுகடலை, அவித்த கடலை விற்கும் தள்ளு வண்டிகள் + நம்ம ஊர் பெண்களின் தட்டுக்கூடை பூக்கடைகள் என முடிவற்று நீளும் இப்பகுதி, இரவு நேரங்களில் நியான் வெளிச்சத்தில் நனையும்போது வேறொரு பரிமாணம் காட்டும். இந்தபகுதியின் தனித்தன்மை என்னவென்றால் இங்கு ஐந்து ரூபாய்க்கும் மகிழ்வு தரும் பொருட்கள் கிடைக்கும், ஐந்து லட்சத்துக்கும் கிடைக்கும். One of the few remaining Democratic spaces in which rich and poor jos...
சமீபத்திய இடுகைகள்

நியாண்டர்தால் இடியாப்பம்!

நம் தமிழ் உணவுகளிலேயே சிக்கலான உணவு இடியாப்பமாகத்தான் இருக்கும். ஊறவைத்த அரிசியோடு தேங்காய் கலந்து அளவாய் உப்பு இட்டு மாவாக அரைத்து, இட்டிலித்தட்டுகளில் கரண்டி கரண்டியாக ஊற்றி ஆவியில் வேகவைத்து, வெந்த பின்பு இட்டிலிகளை ஒன்றுக்கு இரண்டாய் இடியாப்பம் பிழியும் அச்சில் திணித்து பிழியப்பிழிய கீழ் தட்டில் மிருதுவாக நூல் நூலாய் இறங்கும் இடியாப்பத்தை தட்டு சுற்றிச்சுற்றி சேர்த்து, பின் தேங்காய் சர்க்கரை சேர்த்து கொஞ்சம், மிளகுத்தூள் சேர்த்து கொஞ்சம், கடுகு வரமிளகாய் தாளித்த எலுமிச்சைச்சாறு கொஞ்சம், புளியோதரை குழம்பு கொஞ்சம், சின்ன வெங்காய சாம்பார் கொஞ்சம், தயிர் கொஞ்சம் என தனித்தனியே சேர்த்து கிளறி, குடும்பத்தோடு அமர்ந்து உண்ணும் சுகம், விக்ரம் வேதா திரைப்பட பரோட்டா நல்லிக்கறி அனுபவத்தை விட மேன்மையானது என்பதை உண்டவர் உணர்வர்! நியாண்டர்தால் காலத்தில் இடியாப்பம் அறிந்திருக்கவில்லை. தீ பற்றியும் அறிந்திருக்கவில்லை.  பிற்பாடு பரிணாம வளர்ச்சியில் நவீன மனிதர்கள் வளர்ந்து நாகரிகம் வளர்த்து இடியாப்பம் உண்டு இன்று செவ்வாயில் ரியல் எஸ்டேட் கனவுகளில் மிதந்தாலும் நம் பரிணாம தொன்மத்தின் எச்சமாய் நம் உட...

ஓவ்!

தமிழ் என்பது மொழி மட்டுமா? நம் ஊரில் ஒரு உணவகம். காலை டிஃபனுக்கு கூடிய கூட்டத்தின் நடுவில் சுறுசுறுப்பாய் ஆவி பறக்கும் இட்லிகளை தட்டில் ஏந்திக்கொண்டு, பூக்களில் தேன் குடிக்க தத்தித்தாவும் சிறு குருவி போல அந்த பெண் வெகுவேகமாய் பரிமாறிக்கொண்டே வந்தார். என் எதிரில் உணவருந்திக்கொண்டிருந்த ஒருவர் அந்தப்பெண்ணை நோக்கி ஏதோ வேண்டுமென்று குரல் கொடுக்க, அவரைத்தாண்டி சென்றுகொண்டிருந்த பெண் நின்று திரும்பி, 'ஓவ்' என்றார். அந்த மனிதரும் அந்தச்சொல் மிகவும் பழக்கமான ஒன்றாக பாவித்து தான் கேட்டதை மறுமுறை கூறினார்.  தலையசைத்து நகர்ந்த பெண் சற்று நேரம் கழித்து உணவு ஒன்றை அவரிடம் தந்து சென்றார். அவர் என் இருக்கையை கடக்கும் முன் நட்பு புன்னகையுடன் அவரை நிறுத்தினேன். ஏனெனில் ஓவ் என்ற அந்த ஒற்றைச்சொல் அவருடன் எனக்கு நொடியில் ஒரு நட்பு உணர்வை தந்திருந்தது. 'தஞ்சாவூரா?' என்றேன். நூறு சூரியப்பிரகாசத்துடன், "ஆமாங்கண்ணே!" என்றார். மேலே நான் எதுவும் கேட்பதற்கு முன் அவராகவே, 'இதோ, இங்கணதான், வல்லத்தில வீடு. வல்லம் தெரியுமா? வந்திருக்கீங்களா?' என வாஞ்சையுடன் கேட்டார். 'வந்திருக்க...

எப்படி இருந்ந நாம், ஏன் இப்படி?

பாஸ்கர் சாவே எனும் பழுத்த இயற்கை விவசாயி, இந்திய பசுமைப்புரட்சிக்கு காரணமான திரு. M. S. சாமிநாதனுக்கு இந்திய வேளாண் மரபின் மேன்மை பற்றி (கடிதம் வழியே) 'நடத்திய' பாடத்தின் தொடர் பகுதி இது. (Actually part of an open letter Shri. Bhaskar Save wrote to M.S. Swaminathan). மழை வருமா? நன்கு பெய்யுமா? நீர்நிலைகள் நிரம்புமா? என கவலையோடு வானத்தை நோக்கும் ஒவ்வொரு விவசாயியும் அவசியமாய் வாசித்து, சிந்தித்து உணர வேண்டிய பாடம் இது. தமிழாக்கி பகிர்வதில் மகிழ்கிறேன். ----- உற்பத்தி, ஏழ்மை மற்றும் மக்கள் தொகை இந்தியாவிலிருந்து வெள்ளையர்கள் வெளியேறிய பின் இந்திய விவசாயம் நிதானமாக தன் சுயத்தன்மைக்கு வந்து கொண்டு இருந்தது. 75 சதவிகித இந்தியர்கள் வாழ்ந்த கிராமப் புறங்களில் எந்த வித வளர்ச்சி ஊக்கிகளுக்கும் தட்டுப்பாடு இன்றி இருந்தது. பசுமை புரட்சியை இந்தியாவில் திணித்ததின் உண்மையான காரணம் நம் அரசால் முன்னுரிமை அளிக்கப் பட்ட நகர தொழில்துறை சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிற்பதற்காக, (கெட்டுப்போகும் தன்மை குறைவான) சில தானியங்களை மட்டும் அதிகமான அளவில்  விற்பனைச்சந்தைக்காக  உ ற்பத்தி செய்யும் குறுகிய லட்சியமே...

நம் வேளாண் தற்சார்பு எங்கே தொலைந்து போனது? -பாஸ்கர் சாவே - 2

  பாஸ்கர் சாவே எனும் பழுத்த இயற்கை விவசாயி, இந்திய பசுமைப்புரட்சிக்கு காரணமான திரு. M. S. சாமிநாதனுக்கு இந்திய வேளாண் மரபின் மேன்மை பற்றி (கடிதம் வழியே) 'நடத்திய' பாடம் இது - சென்ற பகுதியிலிருந்து தொடர்கிறது. (Continuation of a part of an open letter Shri. Bhaskar Save wrote to M.S. Swaminathan). மழை வருமா? நன்கு பெய்யுமா? நீர்நிலைகள் நிரம்புமா? என கவலையோடு வானத்தை நோக்கும் ஒவ்வொரு விவசாயியும் அவசியமாய் வாசித்து, சிந்தித்து உணர வேண்டிய பாடம் இது. தமிழாக்கி பகிர்வதில் மகிழ்கிறேன். தற்சார்பின்மையின் மூல காரணம் தற்சார்பு என்பது நீங்கள் பசுமை புரட்சியை பரப்பிக்கொண்டு இருக்கும்போது அதிகம் பேசப்படாத ஒரு புதிய கவலையாகவே இருந்தது. கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளில் குன்றிக்கொண்டே இருக்கும் மண் வளம் கிட்டத்தட்ட நாற்பது நூற்றாண்டுகளில் நம் முன்னோர்கள் செய்த இயற்கை வேளாண்மையினால் குன்றாமல் இருந்தது என்ற உண்மையை உங்களால் மறுக்க முடியுமா? ஒரு தலைமுறைக்குள்ளாகவே வேதிப்பொருட்கள் அதிகம் கொண்ட உரங்கள் மற்றும் அதிக நீர் கொண்ட ஒற்றைப்பயிர் (பணப்பயிர்) விவசாயம்தான் நம் நாட்டின் பெரும்பான்மையான இடங்கள...

பாஸ்கர் சாவே - 1 : என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?

பாஸ்கர் சாவே எனும் பழுத்த இயற்கை விவசாயி, இந்திய பசுமைப்புரட்சிக்கு காரணமான திரு. M. S. சாமிநாதனுக்கு இந்திய வேளாண் மரபின் மேன்மை பற்றி (கடிதம் வழியே) 'நடத்திய' பாடம் இது. (Actually part of an open letter Shri. Bhaskar Save wrote to M.S. Swaminathan). மழை வருமா? நன்கு பெய்யுமா? நீர்நிலைகள் நிரம்புமா? என கவலையோடு வானத்தை நோக்கும் ஒவ்வொரு விவசாயியும் அவசியமாய் வாசித்து, சிந்தித்து உணர வேண்டிய பாடம் இது. தமிழாக்கி பகிர்வதில் மகிழ்கிறேன். ----- நம் நாடு அற்புதமான கரிம வளம், செல்வச் செழிப்பு,  பொன்னான மண், ஏராளமான நீர்வளம், ஏராளமான சூரிய வெளிச்சம், அடர் காடுகள், ஏராளமான பலவகையான உயிரினங்கள் இவைகள் கொண்ட, நல்ல நெறிகளுடன் மக்கள் வாழும் நாடு, அமைதி விரும்பும் விவசாய விற்பன்னர்கள் வாழ்ந்த நாடு. விவசாயம் நம் ரத்தத்தில் ஊறியது. அனால் இந்த தலைமுறை (தலை நரைத்த) இந்திய விவசாயிகள்  உங்களைப்போன்ற விவசாய அனுபவமே சுத்தமாக இல்லாதவர்களின் அறிவுரையினால்  தம்மை தாமே ஏமாற்றிக்கொண்டு, இறக்குமதி செய்யப்பட்ட, தொலை நோக்கு இல்லாத, மண்ணை மிக மோசமாக வீணடிக்க கூடிய விவசாய முறையை கடைபிடிப்பது எனக்கு வேத...

ஒரே குழப்பமா இருக்கு ஔவையாரே!

அறம் செய்ய விரும்பு. திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி அருகிலிருந்தே காவிரியும் பயணிக்கிறது.  அகண்ட காவேரியாக பல கிலோமீட்டர் தூரம் அவள் பயணம் என்றாலும் நெடுஞ்சாலை மட்டும் பல இடங்களில் வாய்க்கால் அளவு குறுகி (மறுபுறம் இரயில் வண்டி தடம் + பாசன வாய்க்கால்) திருப்பராய்த்துறை அருகில் மட்டுமே விரிந்த சாலையாக மாறும். சீமான் தத்தாச்சாரியார் மாம்பழக்கடை தாண்டி, முக்கொம்பு கடந்து குளித்தலை தாண்டி பேட்டைவாய்த்தலை சாலை இந்த நெடுஞ்சாலையில் சேருமிடம் ஒரு நடமாடும் சந்தை. நெல், வாழை, பலா, மா, மல்லி, முல்லை என கலந்து கட்டி சாகுபடி செய்யும் எளிய மனிதர்கள் நடத்தும் unofficial சந்தை. சீசனுக்கு விளைந்த பழங்களை, மலர்களை நெகிழிப்பைகளில் சிறு சிறு கூறுகளாக அடைத்து, சாலை சந்திப்பு முனையில் ஓட்டப்பந்தய வீரர்கள் போல ஆயத்தமாக நிற்பார்கள். வெயில் 100-102 என ஏறும் நண்பகல், மதியப்பொழுது என பாகுபாடு இல்லாமல் தலையில் துண்டு அல்லது முந்தானை கொண்டு மூடிக்கொண்டு, சாலை கடப்பதற்காக வேகம் குறைக்கும் வாகனங்களை நோக்கி இரு கைகளிலும் பைகளை தூக்கிக்கொண்டு ஓடி வருவார்கள். சில நிமிடங்களில் வணிகம் முடித்து அடுத்த வண்...