லோகா - பகுதி 1 - சந்த்ரா - திரைப்பார்வை ஒரு வழியாக OTT யில் வெளியானபின்புதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கல்யாணி ப்ரியதர்ஷன் தூக்கி சுமந்திருக்கும் பளு பெரியது. முழு அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார். கதையின் களமும் அது உருவாக்கப்பட்ட விதமும் வாவ்! சொல்லவைக்கின்றன. சூப்பர் ஹீரோ படங்கள் ஹாலிவுட்டில் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையை மாற்றி, நம் மண்ணில் இன்றும் வாழும், பயமுறுத்தும் கதைகளையும் அவற்றின் கதை மாந்தர்களையும் அவர்களது கதைகளின் நீட்சியையும் நமது நவீன உலகத்துடன் பொருத்தி இப்படி ஒரு மெகா ஹிட்டு தர மலையாள சினிமாக்களால் மட்டுமே முடியும்! மின்னல் முரளி ஒரு முன்னோட்டமென்றால் இந்த லோகா உலகம் ஒரு தேரோட்டமாய்! மண்ணோடு பிணைந்த கதைகள், தொழில் நுட்ப உத்தி, திரையாக்கம், நடிப்பு, இசை என அனைத்திலுமே வேற லெவல் என்று மனதார வாழ்த்தி ரசித்து மகிழலாம் :-) ஆனால் எனக்கு ஒரே ஒரு குறை மட்டுமே: 2014 இல் வெளியான SPRING என்கிற திரைப்படத்தின் கருவை முழுதாக தழுவி லோகா பட சந்த்ராவை உருவாக்கி இருக்கிறோம் என Acknowledgement Card போட்டிருந்தால் கூட மகிழ்ந்திருப்பேன். அக்கட பூமியில் இப்படி காப்பியடித்து ...
தீர்ப்பு மணியையே திருடிட்டாய்ங்களே கனம் கோர்ட்டார் அவர்களே! "ஏகப்பட்ட கடன், நிரந்தர வருவாய் தரும் வேலை கிடைக்கல, தொழில் செய்ய முதலீடு கிடைக்கல. கூட்டுற, கழுவுற, அள்ளுற வேலைக்குதான் நாங்க லாயக்குன்னு இந்த சமூகம் எங்கள எட்ட நிறுத்தி வேடிக்க பாக்குது. நாங்களும் உங்க மதந்தான், உம்பட சாமிதான் எம்பட சாமியும் என்று இறைஞ்சி ஓய்ந்துவிட்டோம்" என சென்னை புறநகர்ப்பகுதி குரல். "ஏகப்பட்ட கடன், நிரந்தர வருவாய் இல்ல, தொழில் முதலீடு சொந்தக்காரனே தரமாட்டேன்றான், நெசவு தொழில விடவேண்டியதாய்டுச்சு அம்பா" என்று மதுரை சௌராஷ்ட்ர குரல். திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, குத்தாலம், கும்மோணம், பாண்டி, மேட்டுப்பாளையம், குன்னூர், தோவாளா, விழுப்புரம், கிணத்துக்கடவு... தமிழகம் மட்டுமல்ல, நம் நாட்டின் எல்லா மாநிலங்களிலும் ஒலிக்கும் இந்தக்குரல், ஒரு உடலின் சில உறுப்புகளை ஏனைய உறுப்புகளே ஒதுக்க முயல்வதால் எழும் அவலக்குரல். 'பல ஆயிரம் அல்லது சில லட்சம் தரோம், பழைய கடன அடைங்க. புதுசா தொழில் செய்யவும் பணம் தாரோம். வேற்றுமைப்படுத்த மாட்டவே மாட்டோம்' என யாரேனும் சொன்னால் இவர்கள் என்ன செய்வ...