முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

LOKAH CHAPTER 1: CHANDRA ஒரு Copy Cat!

லோகா - பகுதி 1 - சந்த்ரா - திரைப்பார்வை ஒரு வழியாக OTT யில் வெளியானபின்புதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கல்யாணி ப்ரியதர்ஷன் தூக்கி சுமந்திருக்கும் பளு பெரியது. முழு அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார். கதையின் களமும் அது உருவாக்கப்பட்ட விதமும் வாவ்! சொல்லவைக்கின்றன. சூப்பர் ஹீரோ படங்கள் ஹாலிவுட்டில் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையை மாற்றி, நம் மண்ணில் இன்றும் வாழும், பயமுறுத்தும் கதைகளையும் அவற்றின் கதை மாந்தர்களையும் அவர்களது கதைகளின் நீட்சியையும் நமது நவீன உலகத்துடன் பொருத்தி இப்படி ஒரு மெகா ஹிட்டு தர மலையாள சினிமாக்களால் மட்டுமே முடியும்! மின்னல் முரளி ஒரு முன்னோட்டமென்றால் இந்த லோகா உலகம் ஒரு தேரோட்டமாய்! மண்ணோடு பிணைந்த கதைகள், தொழில் நுட்ப உத்தி, திரையாக்கம், நடிப்பு, இசை என அனைத்திலுமே வேற லெவல் என்று மனதார வாழ்த்தி ரசித்து மகிழலாம் :-) ஆனால் எனக்கு ஒரே ஒரு குறை மட்டுமே: 2014  இல் வெளியான SPRING என்கிற திரைப்படத்தின் கருவை முழுதாக தழுவி லோகா பட சந்த்ராவை உருவாக்கி இருக்கிறோம் என Acknowledgement Card போட்டிருந்தால் கூட மகிழ்ந்திருப்பேன். அக்கட பூமியில் இப்படி காப்பியடித்து ...
சமீபத்திய இடுகைகள்

தீர்ப்பு மணியையே திருடிட்டாய்ங்களே!

தீர்ப்பு மணியையே திருடிட்டாய்ங்களே கனம் கோர்ட்டார் அவர்களே! "ஏகப்பட்ட கடன், நிரந்தர வருவாய் தரும் வேலை கிடைக்கல, தொழில் செய்ய முதலீடு கிடைக்கல. கூட்டுற, கழுவுற, அள்ளுற வேலைக்குதான் நாங்க லாயக்குன்னு இந்த சமூகம் எங்கள எட்ட நிறுத்தி வேடிக்க பாக்குது. நாங்களும் உங்க மதந்தான், உம்பட சாமிதான் எம்பட சாமியும் என்று இறைஞ்சி ஓய்ந்துவிட்டோம்"  என சென்னை புறநகர்ப்பகுதி குரல். "ஏகப்பட்ட கடன், நிரந்தர வருவாய் இல்ல, தொழில் முதலீடு சொந்தக்காரனே தரமாட்டேன்றான், நெசவு தொழில விடவேண்டியதாய்டுச்சு அம்பா" என்று மதுரை சௌராஷ்ட்ர குரல். திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, குத்தாலம், கும்மோணம், பாண்டி, மேட்டுப்பாளையம், குன்னூர், தோவாளா, விழுப்புரம், கிணத்துக்கடவு... தமிழகம் மட்டுமல்ல, நம் நாட்டின் எல்லா மாநிலங்களிலும் ஒலிக்கும் இந்தக்குரல், ஒரு உடலின் சில உறுப்புகளை ஏனைய உறுப்புகளே ஒதுக்க முயல்வதால் எழும் அவலக்குரல். 'பல ஆயிரம் அல்லது சில லட்சம் தரோம், பழைய கடன அடைங்க. புதுசா தொழில் செய்யவும் பணம் தாரோம். வேற்றுமைப்படுத்த மாட்டவே மாட்டோம்' என யாரேனும் சொன்னால் இவர்கள் என்ன செய்வ...

சோளம் வெதைக்கையிலே!

  "அவர்" கிட்ட சொல்லிட்டு வெதச்சீகளா?! ட்ரம்ப்பின் அமெரிக்க சந்தையில் இந்த ஆண்டு 430 769 231 டன் சோளம்! அதாவது roughly நாற்பத்து நான்கு கோடி டன் சோளம். அமெரிக்க வேளாண் நிலங்களில் இந்த ஆண்டு ஏறக்குறைய 60 விழுக்காடு சோளமும் சோயாவும் (சோயா பீன்) மட்டுமே விளைவிக்கப்படுகின்றன. அமெரிக்க மொத்த வேளாண் உற்பத்தியில் 87 விழுக்காடு சோளமும் சோயாவும் (சோயா பீன்) மட்டுமே. இவை இரண்டும் பணப்பயிர்கள். இந்த பயிர்களுக்கு அமெரிக்கா ஒரு உலக சந்தையையே கட்டமைத்திருக்கிறது.  அமெரிக்க சோயா உற்பத்தியில் ஏறக்குறைய சரி பாதி, அதாவது 50 விழுக்காடுகள் ஏற்றுமதி சந்தைக்காக உற்பத்தி செய்யப்படுபவை. கடந்த இரு ஆண்டுகளில் சைனா, அமெரிக்க சோயாவை வாங்க மறுத்ததால் (ட்ரம்ப்பு வணிக வரி தகராறு) அமெரிக்கா இந்த ஆண்டு சோயா விதைக்கும் பரப்பை சுருக்கி சோளம் விதைத்து பெருக்குகிறது. அதாவது சோயா விதைப்பை 10 விழுக்காடு சுருக்கி அந்த பரப்பில் சோளப்பயிர் வளர்க்கிறது. இது வரை அமெரிக்க சோள ஏற்றுமதி, விளைச்சலி்ல் ஏறக்குறைய இருபது விழுக்காடாக இருந்துவருகிறது. இந்த ஆண்டு, சோள விதைப்பின் பரப்பு 10 விழுக்காடு கூடியதால் விளைச்சலும் 10 விழு...

இருவர்

  1980 இல் பாரதிராஜாவின் நிழல்களில் தொடங்கி 1987 இல் பாலச்சந்தரின் புன்னகை மன்னன் வரை தொடர்ந்த இளையராஜா-வைரமுத்து பீரியட், தமிழ் சினிமாவின் பொற்காலம். ஒருவர் திறமையின் மீது ஒருவர் கொண்ட மதிப்பும் மரியாதையும் இவர்களை நெருங்கிய நண்பர்களாக மாற்றி ஏராளமான ever green பாடல்களை நமக்கு கொடுத்தது. எந்த அளவு நட்பு என்றால் ராஜாவின் இசையில் வரும் படங்களின் பாடல்களில் சில வைரமுத்து எழுதுவதாக இருந்தால், படத்தின் எல்லா பாடல்களையும் வைரமுத்துவே எழுதவேண்டுமென ராஜா சொன்னதால் அவ்வாறே நிகழ்ந்தது. எங்கோ சிறு உரசல் விரிசலாக முதல் காரணம், வைரமுத்துவின் பாடல்களில் ராஜா திருத்தங்கள் சொல்லத்தொடங்கியது. (இளையராஜாவும் பாடல்கள் எழுதுவார், திரைப்பாடல்களும்தான். அவை தந்த அனுபவமாகவும் இருந்திருக்கலாம். 1985 இல் ராஜா எழுதிய 'இதயம் ஒரு கோவில். அதில் உதயம் ஒரு கீதம்' - cult song.) 1986 இல் புன்னகை மன்னன் திரைப்படம்தான் இவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றிய இறுதி படம். அது முடிந்தபோது இருவருக்கும் தீர்க்க முடியாத கருத்து முரண்பாடு; மெட்டுக்கு பாட்டா, பாட்டுக்கு மெட்டா?! தகராறு செய்தி திரைத்துறையில் பரவுகிறது. அடுத...

ஏழரை ஸ்டாப்பு: கும்மோணம் டு ராம்நாட் ரைட் ரைட்

பென்சிலா ஜெயிலா?! எனக்கு பென்சில்கள் மிக விருப்பம். நீண்ட உருளை வடிவில், முப்பட்டை வடிவில், அறுகோண வடிவில், அழி ரப்பர் தலையோடு, தலையில்லாமல் என வித விதமான பென்சில்களும. அவற்றை sharpner இல் வைத்து சுழற்றி சுருள் சுருளாய் பட்டை உரித்து மெல்ல மரச்சுருளின் உள்ளிருந்து கூர்'மை' எட்டிப்பார்க்க, அதை Sharpner இன் இன்னொரு துறையில் சுழற்றி குத்தீட்டி முனை பதத்துக்கு தயார் செய்து மகிழ்வாய் தாளில் எழுதத்துவங்க, "மளுக்" கென முனை முறியும் பென்சில்களை மட்டும் பிடிப்பதில்லை. அப்பா அலுவலக வேளையாய் வெளியூர்கள் சென்று வந்தால் கண்டிப்பாய் ஒன்றிரண்டு பெட்டிகளில் அடுக்கிய பென்சில்களும் (ஒரு பெட்டிக்கு 10 பென்சில் என நினைவு), செவ்வக வில்லை பால் வெண்மை அழி ரப்பர்களும் எங்களுக்காக வாங்கி வருவார். ரப்பரின் வாசனை தனி சுகம்! இரண்டாம் வகுப்பில் படிக்கும் எனக்கு பென்சில், ரப்பர் போன்ற உன்னத சொத்துக்கள் வேறு எவையும் ஆகா!. எங்கள் வகுப்பில் என்னைப்போலவே ஒருவனுக்கு பென்சில்கள்+ரப்பர்கள் மீது கொள்ளை பிரியம், அடுத்தவர்களின் பென்சில்கள் மேல் மட்டும்! அந்தப்பொறுக்கி வீரமணியிடம் (பல பத்தாண்டுகள் கழித்தும் ...

கூகிள் டேட்டா சென்டரும் அமெரிக்கரின் ஜட்டி பனியனும்

  கூகிள் நிறுவனம் சென்ற வாரம் ஆரவாரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது; 'இந்தியாவில் டேட்டா சென்டர் அமைக்கிறோம். அடுத்த ஐந்தாண்டுகளில் இதற்காக 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கியிருக்கிறோம்'. இந்த வாரம் ஆந்திராவின் முதல்வர், பெருமிதமாக  ' பாரத் வென்றது! (அதாவது, I.N.D.I.A தோற்றதாம்! தமிழகம் இழந்த முதலீட்டை அவர்களது அரசியல் கூட்டணி சார்பைச்சாடி கேலி செய்கிறாராம்!!) என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். தமிழக எதிர்க்கட்சி தலைவர், 'ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனம்!' என பிரச்சாரம் செய்கிறார். ஆனார இந்த ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளுக்கெல்லாம் இந்த டேட்டா சென்டரின் மூலம் திரு சுந்தர் பிச்சை பட்டை நாமம் அப்பியிருக்கிறார். குறிப்பாக மக்களாகிய நமது விசாலமான நெற்றியில் ஏராளமாய் தீட்டப்பட்டிருக்கும் நாமங்களுக்கு மேலே! கூகிளுக்கு திடீரென ஏன் இந்தியா மீது கரிசனம்? சுந்தர் பிச்சை இந்தியர், நம் நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு பெற துடிப்பவர். எனவே... என்று கழுத்து நரம்பெல்லாம் புடைக்கவேண்டாம். சென்ற சில மாதங்களில் அமெரிக்காவில் நடந்த நிகழ்வு ஒன்றை விவரிக்கிறேன். பிறகு விளக்குகிறேன், கூகிள் டேட்...

எது அறம்?

  ஒரு தனியார் வங்கி. இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்தானத்துக்கு போட்டி போடும் வங்கி. காசாளரிடம் ஒரு சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தேன். சலிப்புடன் விடை தந்துகொண்டே வேறு ஏதோ வேலையில் கவனமாயிருந்தார்.  திடீரென அவரது மேலாளர், வங்கிக்கிளையின் மேனேஜர், நேராக அவரது கேபினுக்கு வந்தார். வந்தவர், பள்ளிக்கூட குழந்தை ஒன்றிடம் பேசும் தோரணையில் குரலை உயர்த்தி, ஒற்றை ஆட்காட்டி விரலை நீட்டி, 'எத்தன முறை சொல்லிருக்கேன்? எல்லாத்தையும் செக் பண்ணதுக்கு அப்றமாதான் செக்குக்கு காசு தரணும்னு? இன்னொரு வாட்டி நடந்தா அப்றம் இமெயில் போட்றுவன், சரியா?' என சீறிவிட்டு, வாடிக்கையாளர்கள் எதிரே சக ஊழியரை அவமானப்படுத்தும் அவலம் பற்றிய துளி கவலையும் இல்லாமல் தனது கேபினுக்கு திரும்பினார். அந்த ஊழியருக்கு முப்பது வயது இருக்கலாம். வேதனையால் சினந்த முகத்தோடு மௌனமாக அமர்ந்திருந்தார். அவரது வீட்டில் கான்வென்ட் பள்ளியில் படிக்கும் குழந்தை இருக்கலாம். அன்று மாலை அவர் வீடு திரும்பியதும் அவரது குழந்தை, 'அப்பா, இன்னக்கி மிஸ் என்ன எல்லார் முன்னாடியும் திட்டிட்டாங்கப்பா' எனலாம், 'என்னையும்தான் என் மிஸ் இன்னக்கி அதே மாதிரி...