மாமாங்கம்! துறு துறு குழந்தைகளை ஷாப்பிங் அழைத்துச்சென்ற இடங்களில் சமாளிப்பது எப்படி என இந்த துறையில் விற்பன்னரான திருத்துறைப்பூண்டி லேட். சீனிவாசன் தாத்தாவிடம் கேட்டபோது அவர் சொன்னது: (அவருக்கு ஆறு குழந்தைகள்; அவரது அண்ணனுக்கு 12! அண்ணனை விடுத்து இவரிடம் கேட்டதன் காரணம் படிக்கையில் விளங்கும் :-) 'நீ டவுசர் போட ஆரம்பிச்ச டைம் அது. நியாபகம் இருக்கா? கும்மோணம் மாமாங்கத்தில என் கைய பிடிச்சிட்டு குதிச்சி குதிச்சி வருவ... கூட்டமான கூட்டம், எக்கச்சக்கமான கடைங்க... நீ என்ன பண்ணின, ஒரு கூலிங் க்ளாசு கடையில ப்ரேக் போட்டு நின்ன. சும்மாதான் நிக்கிறியோன்னு கொஞ்சம் அசந்தனா, அந்த நேரம் பாத்து ஒரு கண்ணாடிய பாத்து கைய நீட்டி, தாத்தா அது வேணும் தாத்தா... வாங்கித்தாங்க தாத்தா...ன்னு கேட்ட. சின்னப்புள்ள, ஆசையா கேக்குற... சரின்னுட்டு கடைக்காரன பாத்து, என்ன வெலப்பான்னு கேட்டேன். அவன் என்னடான்னா இருபத்தஞ்சு ரூபாங்கறான் கடங்காரன் (இன்றைய மதிப்பில் இரண்டாயிரம்)! நான் ஒண்ணுமே சொல்லாம ஹா ஹா ஹா ன்னு சிரிச்சிட்டு, 'அங்கே இன்னொரு கடைல டெல்லி அப்பளம் விக்கிறாங்க! வாழை இலை சைசுக்கு! போலாம் வா'ன்னு கண்ணை ...
லோகா - பகுதி 1 - சந்த்ரா - திரைப்பார்வை ஒரு வழியாக OTT யில் வெளியானபின்புதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கல்யாணி ப்ரியதர்ஷன் தூக்கி சுமந்திருக்கும் பளு பெரியது. முழு அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார். கதையின் களமும் அது உருவாக்கப்பட்ட விதமும் வாவ்! சொல்லவைக்கின்றன. சூப்பர் ஹீரோ படங்கள் ஹாலிவுட்டில் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையை மாற்றி, நம் மண்ணில் இன்றும் வாழும், பயமுறுத்தும் கதைகளையும் அவற்றின் கதை மாந்தர்களையும் அவர்களது கதைகளின் நீட்சியையும் நமது நவீன உலகத்துடன் பொருத்தி இப்படி ஒரு மெகா ஹிட்டு தர மலையாள சினிமாக்களால் மட்டுமே முடியும்! மின்னல் முரளி ஒரு முன்னோட்டமென்றால் இந்த லோகா உலகம் ஒரு தேரோட்டமாய்! மண்ணோடு பிணைந்த கதைகள், தொழில் நுட்ப உத்தி, திரையாக்கம், நடிப்பு, இசை என அனைத்திலுமே வேற லெவல் என்று மனதார வாழ்த்தி ரசித்து மகிழலாம் :-) ஆனால் எனக்கு ஒரே ஒரு குறை மட்டுமே: 2014 இல் வெளியான SPRING என்கிற திரைப்படத்தின் கருவை முழுதாக தழுவி லோகா பட சந்த்ராவை உருவாக்கி இருக்கிறோம் என Acknowledgement Card போட்டிருந்தால் கூட மகிழ்ந்திருப்பேன். அக்கட பூமியில் இப்படி காப்பியடித்து ...