முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மூணாம் ஸ்டாப்பு: கும்மோணம் டு ராம்நாட், ரைட் ரைட்!

கோவிந்தசாமி என் முதல் பேபி க்ளாஸ் தோழன். என்னைப்போலவே அரைக்கால் டவுடசரில் என்னைப்போலவே மூக்கு ஒழுகிக்கொண்டு. ஸ்டெல்லா டீச்சர் எங்கள் வகுப்புக்குள் நுழையும்போதே வானிலை சட்டென்று மாறிப்போகும். பிழையின்றி அனா ஆவன்னா, ஏ பீ சீ டீ, ஒண்ணு ரெண்டு மூணு எழுத கற்றுத்தந்தவரின் முகத்தில் சதா ஒரு மென்சோகம் குடியிருக்கும். எப்போதும் எளிமையான புடவை உடையில் வருவார். உணவுப்பற்றாக்குறை தேகம். கண்கள் கடல் அளவு பெரிது, இன்றும் மாறாது நினைவில் நிற்கிறது. ஆர். சி. மார்னிங் ஸ்டார் பள்ளியில் கல்ச்சுரல்ஸ் என்பது ஒரு S. S. ராஜமௌலி ப்ரொடக்சன் போல, so rich in settings and costumes. ஏதோ ஒரு பாடலுக்கு ஒரு பெரிய தாமரை மலர் ஸ்டேஜில் ஓப்பன் ஆகி உள்ளிருந்து நட்சத்திரக்கோல் ஏந்திய தேவதைக்குட்டிப்பெண் ஒருத்தி வெளியே வருவாள். அந்த precise மொமெண்டில் ஸ்டேஜில் மேகம் போல புகை சூழும்! இதெல்லாம் நடந்தது  கும்மோணம் என்கிற சிறிய டவுனில், பின்-1970 களில்  ஒரு சிறிய பள்ளியில்! இப்படிப்பட்ட ஒரு சரித்திர ஸ்டேஜில் ஒரு நாள் ஸ்டெல்லா டீச்சர் எங்களை ஏற்றிவிட்டார்! அவர் கேட்கும்போது யாராவது மறுக்கமுடியுமா? கோவிந்தசாமி, நான், வீரம...
சமீபத்திய இடுகைகள்

ஸ்டாப் - 02: கும்மோணம் டு ராம்நாட் ரைட் ரைட்!

கும்மோணத்தில் ஐயங்காரத்தெருவில் ஜாகை. வீட்டிலிருந்து பொடி நடையாய் கடலங்குடித்தெருவுக்கு நடந்தால் சில நிமிடங்களில் R.C. Morning Star பள்ளி. ஒரு எதிர்கால இயற்கை விவசாயி பளிங்கியும் பம்பரமும் இன்னபிற வாழ்க்கைக்கு அவசியமான கலைகளையும் படிப்போடு சேர்த்து கற்ற களம் :-) ஐயங்காரத்தெருவில் எல்லா வீடும் நாலு கட்டு வீடு. முதலில் ஒரு சிறிய வரவேற்பறை போல, அதை தாண்டினால் நேரே முத்தம் நோக்கி (ஆழ்வார்பேட்ட ஆண்டவரே, இந்த முத்தம் உங்க முத்தம் இல்லன்னு இவங்களுக்கு நான் எப்படி புரியவைப்பேன்?!) ரேழி, ரேழிக்கு வலதுபுறம் ஒரு பெரிய ஹால், ஹாலின் முதுகாக ஒரு அடுப்படி. இடது பக்க முத்தம் தாண்டி பின்கட்டில் பெரிதாய் ஒரு அறை, அதன் அடுப்படியும் முன்கட்டு அடுப்படியும் 'ஒருவர் முதுகில் ஒருவர் சாய்ந்து' போல அமைப்பில். அறை தாண்டி கொல்லைப்புறம் (நாலாம் கட்டு. அப்டியே ரிவர்சில போனா வரவேற்பறை முதலாம் கட்டு). நீஈஈளமான கொல்லைப்புறத்தின் முடிவில் பாம்பே டாய்லட். அதன் முதுகில் மதில் சுவர் நிற்கும். சுவர் தாண்டி பின்னால் திறந்தவெளி (வாய்க்கால் இருந்ததா?...நினைவிலில்லை). முதல் மூன்று கட்டில் வீட்டு உரிமையாளர் குடும்பம் கு...

கும்மோணம் டு ராம்நாட், ரைட் ரைட்! - 01

--- இது லாங் டிஸ்டன்ஸ் பஸ் ட்ரிப்பு, நெறைய ஸ்டாப்புல நின்னு நின்னுதான் போவும், பாத்துகிடுங்க! --- ஒற்றைப்பார்வையில் காதலாகி அப்பவே முடிவு பண்ணிட்டான்; 'ஸ்டெல்லாதான் எனக்கு wife ஆ வரணும்'. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை. ஆனால் அவளுக்கு நிகர் யாருமில்லை!  சின்ன சிக்கல் 1: அவனுக்கு வயது அஞ்சி. சின்ன சிக்கல் 2: அவள் வயசு பத்தொன்பது! பெரிய சிக்கல் 1: அலங்காரத்துக்கு அவனை கல்யாணம் பண்ணிகிட ஆசை. பெரிய சிக்கல் 2: அலங்காரம் வீட்டுக்காரரும் ஓகே சொல்லிட்டாரே! கிண்டர்கார்ட்டன் எல்லாம் வராத சிற்றூரில் பேபி கிளாசில் அவன் சேர்ந்த முதல் வாரத்திலயே ஸ்டெல்லா டீச்சர் மேல மையலாச்சி! அது பசங்க வழியா பள்ளிக்கூடத்துல வைரலாச்சி. அதுனால அந்த துறுதுறு பையனை 2 ஆம் வகுப்பு டீச்சர் அலங்காரத்துக்கும் ரொம்ப புடிச்சிப்போச்சி. அவனோட கல்யாண கனவுகளை நொறுக்குறதே அலங்காரத்துக்கு பொழப்பா போச்சி. இஸ்கூல் காரிடாரில் எங்க எப்ப பாத்தாலும் 'எப்ப கண்ணாலம் கட்டிக்கலாம்'னு தொரத்திகிட்டே இருந்தா பாவம் பையன் என்னதான் செய்வான்? அலங்காரம் கண்ணில பட்டுட்டா வம்பாச்சேன்னு... உச்சா ப்ரேக்கு கூட எடுக்காம எத்தனை நாளுதான் காலம்...

எங்கே செல்லும் இந்தப்பாதை?

எங்கே செல்லும் இந்த பாதை, யாரோ யாரோ அறிவார்? அவனை துரத்தும் கனவு எது என்பது அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அவனுக்கு அப்போது இருபத்தைந்து வயது. அவனது நாட்டில் எதற்குமே மதிப்பில்லை (hyperinflation எனப்படும் அதீத பண மதிப்பு இழப்பு), இளைஞர்களுக்கு வேலையுமில்லை. அவன் ஒரு நல்ல படகோட்டி. அவனது நாட்டின் ஆறுகளிலும் கடலிலும் படகு பழகியவன். ஒரு நாள் அவனுக்கு ஒரு எண்ணம் உதிக்கிறது; 'அப்டியே படக ஓட்டிகிட்டு மூவாயிரம் கி.மீ போனம்னா சைப்ரஸ் நாட்டுக்கு போயிடலாம். அங்க தாமிர சுரங்கங்கள்ல வேலை செய்ய  நிறைய ஆட்கள் தேவையாம்'. ஆண்டு: 1932 நாடு: ஜெர்மனி 'யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க' என அந்த வயதுக்கே உரிய அசட்டு தைரியத்தோடு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்புகிறான். நீர்வழிப்பயணம் அவனுக்கு புதிதல்ல. ஆனால் நெடிய பயணம் அவன் பழகியதில்லை. ஆனாலும் துடுப்பு வலித்து பல பல நாட்கள், மாதங்கள் பயணிக்கிறான். முதலில் டான்யூப் நதி வழியே படகை செலுத்தி ருமானியா நாட்டை அடைந்து, அங்கிருந்து அதே நதி வழியே பயணித்து பல்கேரியா நாட்டை கடந்து டான்யூப் அவனை ஏஜியன் கடலில் சேர்க்க, அங்கிருந்து மத்திய தரைக்கட...

வசந்த்த முல்லை போலே வந்து...

கடந்த நாற்பதாண்டுகளில் நம்மைச்சுற்றி எவ்வளவோ மாற்றங்கள் மிக வேகமாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் மாறாது இருக்கும் சிலவற்றில் சினிமாவும் ஒன்று. திரைத்தொழில்நுட்பங்களும் வெகுவேகமாக மாறினாலும் சினிமா தரும் மேஜிகல் உணர்வு மட்டும் இன்னும்  அப்படியே மாறாதிருக்கிறது. சினிமா என்பது எத்தகைய ஒரு மகத்தான ஆயுதம் என Gen Z பசங்களுக்கு கார்த்திக் சுப்புராஜ் தந்த ஜிகர்தண்டா XX, என்னை வேறொரு நினைவுத்தளத்திற்கு இழுத்துச்சென்றது. வலிவலம் வலிவலம் என்றொரு சிற்றூர். அந்த ஊரில் 1980களில் ஒரே ஒரு டெண்ட் கொட்டாய். அதில் மொக்கை படங்கள் ஓடிக்கொண்டிருக்கையில் பக்கத்து சிற்றூர் ஒன்றில் நல்ல படம் ஏதாவது ஓடினால் சைக்கிளிலோ அல்லது நடந்து சென்றோ படம் பார்க்கும் கூட்டம் நிறைந்த சமூகம் அது. எனது தாய்மாமா ஒருவரின் சைக்கிளின் பின்னிருக்கையில் ஒரு பௌர்ணமி இரவில் நான் அமர்ந்திருக்க, பகல் முழுதும் வேளாண் சார்ந்த பல அலுவல்களை முடித்து களைத்திருந்தாலும் சிவாஜி படம் பார்க்கும் ஆர்வம் அவரை உந்த, துணைக்கு அரை டவுசர் போட்ட என்னை டபுள்ஸ் மிதித்து ஐந்து கிலோ மீட்டர் நீளும் விளக்கு வெளிச்சமற்ற அந்த குறுகிய சாலையில் பயணித்து...

விதைப்போக்கன்

மழை பெய்துகொண்டிருந்த ஒரு முன்னிரவு வேளையில் உறவினர் ஒருவர் சில முறை தொடர்பு கொள்ள முயன்றதை தொலைபேசி காட்டியது. அழைத்தேன். சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, 'பாபு, உங்களோட ஒருத்தர் பேசணும்னு கேட்டுகிட்டே இருக்காரு. கான்ஃபரன்ஸ் காலில் அவரையும் அழைக்கட்டுமா?' என்றார். யார் என வினவினேன்.  'சொந்தகாரப்பையன்தான். சின்ன வயசில எங்களோட கல்யாணத்தில உங்க அறிமுகம் கெடைச்சதாம். பல வருசம் கழிச்சி இப்போ லீவுல ஊருக்கு வந்திருக்கார். வந்து என்னை பாத்ததில் இருந்து உங்களோட பேசணும்னு சொல்லிகிட்டே இருக்கார். இதோ இப்ப அவரை லைன்ல கூப்டுறேன்' என்றார். 'அத்தான்! எப்டி இருக்கீங்க அத்தான்!' என ஒரு குரல்! நானே மெய்யழகன் படம் பார்த்தபின்பு இன்றுவரை என் தஞ்சாவூரில் இருக்கும் சில மெய்யழகன்கள் நினைவுக்கு வந்து சில மாதங்களாய் அதன் தாக்கத்தில் சுற்றிக்கொண்டிருக்கும்போது இது யாரு இன்னொருத்தர்! என்கிற எண்ணம் மனதிலாட, பேசினேன். 'நான் குமார் பேசறேன்த்தான்! அண்ணன் கல்யாணத்திலதான் ஒங்கள பாத்தேன்... பாத்தோம். அப்போ நாங்கள்லாம் சின்ன பசங்க. லக்‌ஷ்மாங்குடி கிராமத்திலேந்து சென்னைக்கு கல்யாணத்து...

சுவடுகள், பாதைகள், பயணங்கள்

இன்றுவரை நிறைவேறா பெருங்கனவு. சிறு வயதில் நினைவு தெரியத்தொடங்கிய நாட்களில் இருந்து கல்லூரி முடிக்கும் வரை நாங்கள் வாழ்ந்த இல்லங்களில் (நேர்மையான அரசு ஊழியர்கள் தொடர் பணி மாற்ற தண்டனை பெற்று பல வீடுகளில் வசிக்க வேண்டிய நிர்பந்தம். அதில் எதுவும் சொந்த வீடு இல்லை!) ஒரு சில ஒளிப்படங்கள் மட்டுமே எங்களது வீட்டுச்சுவர்களில் நிரந்தரமாய் தங்கியிருந்தன. எங்களது குடும்ப ஒளிப்படம் ஒன்று, அண்ணாவும் அக்காவும் நேர்த்தியான சிறார் உடைகளில் படியப்படிய தலைவாறி அமர்ந்திருக்கும் ஒளிப்படம் ஒன்று. இவை இரண்டின் நடுவில் அளவில் பெரிதான படம் ஒன்று; கோலூன்றி நடக்கும் ஒரு தாத்தா. அவ்வயதில் எங்கள் வீடுகளுக்கு வந்து போகும் உறவுக்கார தாத்தாக்கள் எவர் போலவும் இல்லாது தனித்தன்மையான முகம். அந்தப்படத்தின் அடிப்பகுதியில் அவரது கைத்தடியின் இருபுறமும் ஒட்டப்பட்டிருந்த எங்கள் படங்கள். அப்பாவுக்கு ஒரு கனவு இருந்தது. கனவின் பின் ஒரு லட்சியம் இருந்தது. அந்த லட்சியத்தை தந்தவரது படம்தான் அது என்பதை நான் என் பதின்ம வயதில்தான் உணர்ந்தேன். அதுவரையில் அவரை மகாத்மா, தேசப்பிதா என என் வயதுக்கு புரியாத அடைமொழிகளில் மட்டுமே உலகம் எனக்கு அ...