முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மௌனத்தின் குரல்

அந்த பதின்ம வயது சிறுமியின் பெற்றோர்,  சகோதரன் என அனைவருமே கேள்திறன் +  பேச்சு திறன் இழந்தவர்கள். சிறுமி பேசத்தொடங்கிய நாள் முதலே அவள்தான் உலகின் குரல்களை அவர்களுக்கு ஒலி பெயர்த்து சைகை மொழி வழியே உணர்த்துபவள். மீனவ குடும்பம். சொந்த படகில் குடும்பமே அதிகாலையில் கடலில் இறங்கி மீன் பிடித்து காலைப்பொழுதில் விற்று என வாழ்வு நகர்கிறது. நேரத்திற்கு பள்ளி செல்லவும் படிக்கவுமே போராடுகிறாள் இந்தச்சிறுமி. பதின் வயதில் எல்லோருக்கும் தோன்றும் முதல் காதல், தான் யார் என அடையாளம் தேடும் தன்மை, தனக்கு என்ன தேவை என்கிற தேடுதல் அவளுக்கும் உண்டு. ஆனால் அவளது குடும்பம் வெளியுலகத்தொடர்புக்காக அவளை முற்றிலும் சார்ந்திருப்பதால் அவளுக்கு எதற்குமே நேரமில்லை. அதனால் அவளுள் நிகழும் ஏக்கங்கள், கோப தாபங்கள் எல்லாவற்றையுமே அவள் அவர்களுடன் சைகை மொழியில் மட்டுமே பகிர முடிகிறது. பாடல்கள் பாடுவதை அவள் நேசிக்கிறாள். அவளுக்கான சுதந்திர உலகம் அதுவே என உறுதியாக நம்புகிறாள். கல்லூரி படிப்பாக 'இசை'யை தேர்ந்தெடுத்து ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு அவளது பள்ளியின் இசை ஆசிரியர் வழியே கிடைக்க, கனவை நனவாக்க...
சமீபத்திய இடுகைகள்

ஏய்!

உலகம் ஃபுல்லா ரௌடிங்க தொல்லை தாங்கலபா! எவன பார்த்தாலும் "ஏய்!" "ஏய்!" னு சவுண்டு கிளப்பிகிட்டு திரியிராய்ங்க! ஒவ்வோரு "ஏய்" யும் பல ஆயிரங்கோடின்னு பெரும வேற... இன்னாதான் இர்க்குது இந்த "AI" ல பாத்தா காமெடியா கீதுபா! ஊர்ல ஒர்த்தன் ஓரு மெசினு பண்ணானாம். அது ஆய கலைங்க 64ஐயும்  அப்டியே செய்யுமாம். அந்த மெசினை சண்டைக்கு விட்டானாம். அதுக்கு எதிராளியா நின்னது இன்னொர்த்தன் பண்ண 64 ஆய கலை மெசினாம். ஃபைட்டான ஃபைட்டாம். முடியவே இல்லையாம்! மெசினு இத்து போற வரை சண்டை போடுமே தவிர ரெண்டுக்கும் சமாதானம் பேசவே தெரியாதாம்! ஏன்னா சமாதானம்னா என்னான்னே ரெண்டுக்கும்  புரியாதாம்! நம்ம மனுசப்பய எப்போ இன்னா செய்வான்னு அவனோட மானுஃபேக்சரருக்கே புரியாதாம். அவனோட வரலாறு பூகோளத்த எல்லாம் படச்ச கடவுளே வாயடைச்சி நிக்காராம்! இப்போ அவனே 'நாந்தான் கடவுள்'னு கெளம்பிருக்கானாம்! கடவுள்தான் 'டேட்டா'ன்னு வச்சிக்குவம். அவரு கோடானு கோடி அனுபவங்கள பொரட்டி பொரட்டி படிச்சி ஒவ்வொரு மனுசப்பயலயா உருவாக்கிக்கிட்டே இர்க்காராம். ஆனாலும் ஒர்த்தன் மாறி இன்னோர்த்தன் இல்லவே இல்லயாம். ...

அன்பாலே கூடு கட்டுவோம்

பறவைகள் எதுவும் தேவைக்கதிகமான அளவில் கூடு கட்டுவதில்லை. எத்தனை குஞ்சுகள் உருவாக்கலாம் என்கிற தெளிவான உள்ளுணர்வுடன், தன்னுழைப்பில் மட்டுமே அவை கூடுகளை உருவாக்குகின்றன. எதிர்காலத்திற்கென கூடுதல் அறைகள் அறவே கிடையாது. அந்த கூடென்பதும் வெறும் தாவரக்கழிவுகளால் மட்டுமே... அந்தக்கூட்டில் குஞ்சுகள் காலுதைத்து சிறகு விரித்து பறக்க வெளியேறும்வரை அவற்றை வளர்ப்பது தாய்ப்பறவையின் உடற்சூடு மட்டுமே, அது தரும் கதகதகப்பு மட்டுமே. காற்று மழை புயல் வெயில் கடுங்குளிர் இடி மின்னல் தாண்டியும் வாழும் இக்கூடுகள், மரம் சாய்ந்தாலோ கிளை முறிந்தாலோ மட்டுமே மண்ணில் வீழும்... சிறகு விரிந்த குழந்தைகள் எல்லாம் வாழ்வு பழக வெளியேறிய பின்பு தாய்ப்பறவையும் அதன் இணையும் அந்தக்கூடுகளில் தங்குவதும் இல்லை... பறவையைக்கண்டோம் விமானம் படைத்தோம் என மார்தட்டும் மனிதக்கூட்டம் மட்டுமே பறவைகளிடம் இருந்து வாழ்விடம் அமைப்பதைக்கூட இன்றுவரை கற்றுக்கொள்ளவில்லை. நினைத்த காலத்தில் நினைத்த இடத்தில் தன்னுழைப்பு மட்டுமே கொண்டு கட்டப்படும் அற்புதத்கூடுகள் எவற்றையும் மனிதர்கள் ஏனோ கொண்டாடுவதே இல்லை. வீடென்பது உடல் இளைப்பாறும் இடம் என மட்டுமே என...

காற்றில் கரைந்த கனவு

கனவு காண தைரியம் வேண்டும், தொலைநோக்கு பார்வை வேண்டும். நனவாக்க உறுதியும் உழைப்பும் வேண்டும். இத்தனை இருந்தும் கனவு நனவாக காலம் மனது வைக்க வேண்டும்... காந்திக்கு கனவு காண தைரியமும் தொலை நோக்கு பார்வையும் இருந்தது. அது உலகம் அறிந்த செய்தி. கனவை நனவாக்க உறுதியும் உழைப்பும் கொண்ட மனிதர்கள் அவருடன் இருந்தனர். இதோ இந்த வாரம் செவ்வாய் கிழமைதான் அவர் தனது பத்திரிகையில் 'காங்கிரஸ் என்கிற கட்சி தன் இலக்கை அடைந்துவிட்டது. இனி அதற்கு புதிய இலக்குகள் நிறைய இருக்கின்றன. இந்த இலக்குகளை அடைய அது தன் சுயத்தை கலைந்து உருமாற வேண்டும்' என எழுதினார். அந்த இலக்குகள் எவை என்பதையும் தெளிவாக எழுதியிருந்தார். அந்த இலக்குகள் எல்லாம் இருபத்தைந்து ஆண்டுகள் முன்பே அவர் வகுக்கத்தொடங்கியவை. அதற்கு பத்தாண்டுகள் பின்பு, அடிமைப்பட்டிருந்த இந்தியாவின் சுதந்திர எதிர்காலத்திற்கான அடிப்படை கட்டமைப்புகளை தெளிவாக சிந்தித்து வரையறுத்து, அவற்றிக்கு செயல் வடிவம் தர அதுவரை தான் ஏற்றிருந்த ஒரு கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அந்த புதிய இலக்குகளை நோக்கி தன் பயணத்தை  தொடங்கியிருந்தார்.  அந்த இலக்க...

கரும்புக்காடு

  காவல் துறை உங்களின் நண்பன் என்பது தமிழகத்தில் ஒரு புகழ் பெற்ற வாசகம். ஆனாலும் போலீஸ் என்றால் வீடு வாடகைக்கு கொடுக்க தயங்குவதில் இருந்து வடிவேலுவின் சிரிப்பு போலீஸ் வரை சமூகப்பார்வை சற்று கலவரமாகவே இன்று வரை தொடர்கிறது. முதலாம் வகுப்பு படிக்கையில் என் வகுப்பில் ஒருவன் தினமும் என் ஸ்லேட்டுக்குச்சி, பென்சில், ரப்பர் பிடுங்கிக்கொள்வான், தராவிட்டால் என் அப்பாவை அவனது போலீஸ் அப்பா அரெஸ்ட் செய்துவிடுவார் என மிரட்டுவான் (தனிப்பதிவே எழுதியிருக்கிறேன் முன்பு ஒரு முறை). நானும் கண்ணீருடன் சிலநாட்கள் தாரை வார்த்திருக்கிறேன். பிறகு சில நட்பு அரை டௌசர்கள் தந்த தைரியத்தில் எவ்வாறு அவனது மிரட்டலை வெற்றிகரமாக முறியடித்தேன் என்பதை அந்தப்பதிவில் வாசிக்கலாம் :-)) அப்பாவும் அவர் பங்குக்கு போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை சித்ரவதைகள் பற்றி  பல அழிச்சாட்டிய ரௌடி கதைகள் சொல்வார் (லாடம் கட்டுதல், நகக்கண்களில் ஊசி, நகம் பிடுங்குதல் இத்யாதி, ஆனாலும் அவர் கதைகளில் ரௌடிகள் அசராமல் சிரித்துக்கொண்டே இருப்பார்கள்). ராமநாதபுரத்தில் பள்ளி நாட்களில் நண்பனது வீட்டருகில் ஒரு A.S.I குடியிருந்தார். நல்ல மனிதராம். புதிதாக ...

மத யானையும் அப்பா அலமாரி தந்த அங்குசமும்!

  இளமையில் நான் வளர்ந்த சூழல், பள்ளி்கல்வி பெற்ற கிருஸ்தவ, இந்து, இஸ்லாமிய பள்ளிகள், அரசு பள்ளிகள் (R.C Morning Star, Ganapathi Vilas, Syed Ammal) எவற்றிலும் கிடைக்காத மத நல்லிணக்க உணர்வுகளை, என் குடும்பம் எனக்கு போதிக்காமலே போகிற போக்கில் கடத்திய மேஜிக்... இப்போதும் வியப்பாக இருக்கிறது. தாத்தா பழுத்த வேதாந்தி. ஆத்மானந்தா என பெயரெல்லாம் மாற்றிக்கொண்டு, கிராமத்து வீட்டில் சிவனடியார்களை குடில் அமைத்து தங்கவைத்து (அப்படி ஒன்றும் வசதியில்லை அவருக்கு, ஆனாலும் ஆன்மீக ஈர்ப்பு) அவர்களிடம் வேதாந்த வியாக்கியானங்கள் செய்து தெளிந்தவர். கவட்டைப்பலகை ஒன்றில் V வடிவில் பழுப்பான வேதாந்த புத்தகத்தை திறந்துவைத்து கண்ணாடிக்கண்கள் வழியே வாழ்வின் சாரத்தை தேடியவர். கடவுளுடன் பிணக்கு கொண்டு (செல்ல மகள்களுள் ஒருவரின் அகால மரணம்) சாமி படங்களை எல்லாம் புறந்தள்ளி...இதே மனிதர்தான் இடையில் பல காலம் நாத்திகராக வாழ்ந்தார். எனது சிறு வயது நினைவுகளின் அச்சாணி, 'கடவுளை நம்பு' என ஒவ்வொரு முறை நான் ஆசீர்வாத திருநீறு பெறும்போதும் அவர் சொன்னதுதான். எந்த கடவுள் என ஏனோ அவர் சொன்னதே இல்லை. அப்பாவுக்கு புத்தக அலமாரி வை...

2025 வந்தாச்சி!

2000 மாவது ஆண்டிலிருந்து 2010 வரை ஐரோப்பிய வாழ்வு, பணியிடம் என உலகை வெல்லும் பேராசையில் ஓடிக்கொண்டிருந்தோம் நானும் மனைவியும், குழந்தைகளுடன். 2010 இல், தாய்மண் திரும்ப முடிவு செய்து (return for good type of return) எங்களது அலுவலகங்களில் தெரிவித்ததும் அரைமனதாக ஒப்புக்கொண்டு வழியனுப்பும் விதமாக பல வாழ்த்து அட்டைகள் தந்தனர். பதினான்கு ஆண்டுகள் கடந்த பின் இந்த டிசம்பர் 31, இன்றைய தினம், பொங்கலுக்காக வீட்டை சுத்தம் செய்யும் பணியில் நாங்கள் இருவரும் reorganize செய்துகொண்டிருக்கையில் தற்செயலாக கண்ணில் பட்ட file ஒன்றில் அந்த வாழ்த்து அட்டைகளை கண்டோம். அவரவர் அலுவலக அட்டைகளை சற்று நேரம் கைகளில் விரித்து பார்த்துக்கொண்டோம். 'என்ன நினைக்கிற?' என்றார் மனைவி. 'இல்ல...ராப்பகலா ஆர்வமா ஜாலியா வேலை செய்த குழுக்களின் சக பணியாளர்கள், அன்று நல்ல நண்பர்கள், ஒருத்தர் பெயரும் நினைவிலில்லை... இதுவா அந்த பதினெட்டு வருட நினைவுப்பேழைகள்னு வியப்பா இருக்கு' என்றேன். அவரது அலுவலக நண்பர்கள் தந்திருந்த வாழ்த்து அட்டைகளை இன்னுமொரு முறை புரட்டிப்பார்த்தார். 'எனக்கு அப்படில்லாம் மறக்கல, முகங்கள் நினைவ...