தற்செயலாகத்தான் எனக்கு அறிமுகமானார். மன்னார்குடியில் ஏதோ ஒரு பள்ளியில் ஒரு சிவராத்திரி அன்று வேஷ்டி திரை கட்டி அதில் ஒரு படம் காட்டினார்கள். 'அழைத்து வரவி்ல்லை, இழுத்து வந்திருக்கிறார்கள்' என சங்கிலியாய் பிணைக்கப்பட்டு அரசவையில் அரசன் முன் அடிபணியா சீற்றத்தோடு அவர் முழங்கத்தொடங்கிய அந்த நொடியில் தமிழ் மீது நான் கொண்ட காதல் இன்றும் தொடர்கிறது. அந்தப்படம் முடியும்போது அரை டவுசர் பார்வையாளர்கள் நாங்கள் அனைவரும் சிவாஜி ரசிகர்களாக மாறிவிட்டிருந்தோம். அதன் பின் சாரங்கதாரா, தூக்குதூக்கி, திருவிளையாடல், குங்குமம், பராசக்தி (ஆமாங்க, படம் வெளிவந்த பொழுது காணத்தவறியிருந்தால் அல்லது நாங்கள் பிறப்பதற்கு முன்னால் ரிலீசான படங்களை பின்னால் ஏதாவது ஓரு வருடம் நாங்கள் படித்த ஊரில் சினிமா தியேட்டரில் அல்லது டென்டு கொட்டாயில் சிவராத்திரி, பொங்கல், முழாண்டு விடுமுறை போன்ற விஷேச நாட்களில் படம் வந்தால் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு பெற்ற தலைமுறை நாங்கள்!) போன்ற படங்கள் அவரது நடிப்பின் உயரத்தால் எங்களை தொடர்ந்து வசீகரிக்க, அவரது வசன உச்சரிப்பு எங்கள் தமிழார்வத்தையும் தொடர்ந்து தூண்டியது. ஒரு விதத்தில் ...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!