நாட்டின் வளர்ச்சிக்கு மகுடமாய் திகழும் ஒவ்வொரு பெரு நகரிலும், தினம் காலையில் ஒரு கூட்டம் எழுந்ததும் விரைந்து கட்டிட காடுகளின் விளிம்பில் இருக்கும் புதர்களின் / மரங்களின் பின் சென்று மறையும். கடனை கழித்தபின் மீண்டு கூடு அடையும். அக்கம்பக்கம் வீடுகள் உள்ளனவே, மாடிகளில், ஜன்னல்களில் யார் எட்டிப்பார்த்தாலும் நம் பணி அவர் கண்ணில் பட்டு சங்கடப்படுத்துமே, சுற்றுச்சூழல் நாற்றமெடுக்குமே என்ற கவலையெல்லாம் துளியும் இன்றி. கழிப்பறைகள் கட்டிக்கொடுத்தால் போதுமா? பெரு நகரத்தூண்களை கட்டியெழுப்ப உழைப்பவர்களுக்கு சுகாதாரமான தங்குமிடம் யார் பொறுப்பு? என் மலம் என் பொறுப்பு என்ற உணர்வை எப்படி இவர்களுக்குள் விதைப்பது? நகரங்களில் விளிம்பு நிலை மனிதர்களின் இன்னல் இப்படியென்றால் கிராமங்களில் வேறு மாதிரி... கிராமம் முழுதும் நம் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகள், பயன்பாட்டிலில்லாமல் பூட்டிக்கிடக்கின்றன. பெண்களும் சாலை ஓரங்களில்தான் இன்றளவும் ஒதுங்குகிறார்கள்... 'ஏங்க, கழிப்பறைதான் வீட்டுக்கு ஒண்ணு இருக்குல்ல, போங்களேன்!' என்றால் 'எப்புடிங்க, திங்கிற இடத்துக்கு பக்...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!