முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விவகார ரத்து!


விவாக ரத்து - காகிதப்பூ போன்ற சொற்கள்.

காலையில் தேநீர் அருந்துதல் போல நாம் அதிர்வின்றி கடக்கும் சொற்கள். 

மண முறிவும் அதற்கு காரணமான / அதனால் ஏற்படும் மன முறிவும் - நம் காலடியில் வெடிகுண்டு போல; பதட்டம் தருபவை.

இதுவும் கடந்துபோகும் என்பதாகவே சொற்களும் வலுவிழந்து போகின்றன.

ஒரு ஆணும் பெண்ணும் கருத்தொருமித்து செம்புலப்பெயல் நீராய் கலந்தது காப்பியங்களில் மட்டுமே. 

1990s, 2000 வரை பல பொருத்தம் பார்த்து பண்ணிய கல்யாணங்களும், அதன் பின் ஐ.டி யின் கலாசார புரட்சியால் இன்றுவரை நிகழும் பல கல்யாணங்களும் ஆண், பெண் இருவரது (ஆண்) சமுதாய கட்டமைப்பு சார்ந்த வேறுபாடுகளினால் மட்டுமே முறிந்தன. ஆனால் சில ஆண்டுகளாக நம் வாழ்வியல் முறைக்கு ஒவ்வாத வேறு நாடுகளின் கலாச்சாரங்களின் எச்சங்கள் நம் மீது தெறித்து தெறித்து நம் வண்ணங்களை மாற்றிக்கொண்டிருக்கின்றன.

ஒரு பக்கம் நாம் முழுதாக அறிந்து/புரிந்து கொள்ளாத நம் 'சமுதாயம் சார்ந்த' நெறிகள்; மறுபுறம் கட்டற்ற தனி மனித சுதந்திரம் என்பதாக ஊடகங்கள் காண்பிக்கும் கனவுக்குமிழ்கள்... நம் சமுதாயம் தடம் மாறிக்கொண்டிருப்பதால் இன்று மண முறிவு பெற்றுத்தரும் இடங்களில் அலைமோதும் கூட்டம், டாஸ்மாக் கடைகளை விட அதிகமாய்!

பெண்ணை தோழமையாய் பாவிக்க தவறுவதே அடிப்படை சிக்கல். ஒரு புகழ்பெற்ற கானகப்பழமொழி இது 'வேட்டையாடப்படும் விலங்கு தப்பிக்க வழியேயில்லாதபோது வேட்டைக்காரனையே வேட்டையாடும்'!. பெண்ணை விலங்காய் அணுகுபவர்...வேட்டையாடப்படுகின்றனர்.


பன்னீர் புஷ்பங்களே...
கானம் பாடு...
உன்னைப்போலே யெந்தன் உள்ளம் ஆடுது...
புது தாளம் தொட்டு...ஓ....
புது ராக மெட்டு...

ஆண் கொண்ட தாகம்
தீர்க்கின்ற தேகம்
பெண்ணென்ற ஓரினமோ...
இது யார் பாவம்...

ஆண் செய்த சட்டம்
அவர் போட்ட வட்டம்
அதர்கென்று பெண்ணினமோ...
இது யார் சாபம்...

ந்யாயங்களோ பொதுவானது...
புரியாமல் போனது....
(பன்னீர்)

பாஞ்சாலி வாழ்ந்த
பரிதாப வாழ்வை
பாராட்ட யாருமில்லை...
நிஜ வாழ்க்கையிலே...

பலபேரைச் சேரும்
பரந்தாமன் தன்னை
புகழ் பாட கேட்டதுண்டு
இந்த பூமியிலே...

ந்யாயங்களோ பொதுவானது...
புரியாமல் போனது...
பன்னீர் புஷ்பங்களே...
கானம் பாடு...

40 ஆண்டுகளுக்கு முந்தைய நிஜம் இன்றும் நிஜமாக இருப்பதால் வரும் சிக்கல்.

பெண்களின் பொருளாதார சுதந்திரம், ஆண்களே தேவையற்ற ஒரு உலகை நோக்கி அவர்களை நகர்த்துகிறது (கரு முட்டை வங்கிகள், விந்து வங்கிகள், ஒரு பால் மணம் etc). 

சுதந்திரம் ஏராளமான பொறுப்புகளை உள்ளடக்கியது (freedom means immense responsibility) என்றும், ஆணும் பெண்ணும் சமமல்ல, இரு வேறு உயிரினங்கள்; ஒத்திசைவது மட்டுமே நல்லிசைக்கு அழகு என்றும் இளையவர்களுக்கு 'வாழ்ந்து காட்ட' பல்லாண்டு மணமானோர்க்கும் நேரமும் ஆர்வமும் இல்லை.

சொல்லித்தெரிவதில்லை இக்கலை! நாம் வாழ்ந்து வழி காட்டவேண்டியது...

எத்தனை கோடி முகம், எத்தனை செப்பு மொழிகள் இருந்தாலும் சிந்தனை மட்டும் மேற்சுட்டிய இரண்டுமாயிருந்தால் மண வாழ்வு மேம்படும், நமக்கும் நம்மைப் 'பார்த்து' வளர்பவர்களுக்கும்.

ஆண்களால் உருவாக்கப்பட்ட சமுதாய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகவே தம்மை குறுக்கி வாழ்ந்தவர்கள் தனி மனித தேவைளும் ஆசைகளுமே வேண்டும் என வேறு தடம் தேடி பயணம் தொடங்கியாச்சு. உணர்ந்து, புரிந்து வழிகாட்டும் கடமை நமக்கு உண்டு. இந்த பயணம் தவிர்க்க இயலாதது.

(பின்குறிப்பு : இணைத்துள்ள படங்களை மூன்றாவதிலிருந்து முதல் வரை வரிசைப்படுத்தினால் பழமையிலிருந்து புதுமைக்கான கரு கிடைக்கும். இதில் புதுமை என்பது ஆதிப்பழசு; சிவனார் வாழ்ந்தது!)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்