முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேசுங்கய்ய்யா!


ஒரு சின்ன ஊர்ல ஒரு வேத்தாளு கையில ஒரு பெரிய்ய்ய கொடி ஒண்ண புடிச்சிகிட்டு வந்தானாம்.

வந்தவன் ஊர் மைதானத்தில அத நட்டுவச்சானாம்.

வேடிக்கை பாக்க ஊரே கூடிடுச்சாம்.

பாதிப்பேரு 'கொடி சூப்பர்ல' ன்னும் மீதி பேர் 'கொடி கேவலமா இருக்கப்பா' ன்னும் பேசிகிட்டாங்களாம். கொஞ்ச நேரத்திலயே புடிச்ச கும்பலுக்கும் புடிக்காத கும்பலுக்கும் அடிதடி, அமளி துமளி ஆயிப்போயி சண்டைய நிறுத்த படுத்த படுக்கையா இருக்கிற ஊர்ப்பெரிசை தூக்கிட்டு வர ஆள் அனுப்புனா... போனவய்ங்க செத்த நேரத்தில அலறிகிட்டே திரும்ப ஓடி வந்தானுங்களாம் 'பூட்டெல்லாம் ஒடச்சிகிடக்கு! ஊர் மொத்தத்தையும் களவாண்ட்டாங்களே!' ன்னு கூவிகிட்டே!

நாட்டு நெலம அப்புடி...


ரெண்டு நாள் முன்னாடி ஒயிட் ரஜினி படத்தோட ஒரு பதிவு Facebook ல போட்டு ரெண்டே ரெண்டு கேள்வி கேட்டிருந்தேன். இன்னைய வரை மக்கள் அந்த பதிவோட சாரத்த விட்டுட்டு ரஜினி பற்றிய பின்னூட்டங்களையே இட்டுகிட்டிருக்காங்க.

ஏழு கோடி கருப்பர்களால் வெளி நாட்டு கோக் பெப்சியை புறக்கணிக்க முடிந்தது, ஆனால் வெண்மை / வெளுப்பை /அழகை மையப்படுத்தி மட்டுமே விற்கப்படும் பொருட்களை புறக்கணிக்க முடியவில்லையே, ஏன்?

நம்மைப்பிடித்திருக்கும் பெரு வியாதிகள் சில இதோ; இவற்றிற்கு அறிகுறி ஏதும் கிடையாது; மனதின் வழி வாழ்வை மடக்குபவை இவை:

1. அதீத கற்பனை (assumptative)

2. ராமனானாலும் பாபரானாலும் ரூட்டும் கேட்டும் ஒண்ணு; ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நானே என் வாழ்வுக்கு ராஜா என்ற 'விட்டேத்தி'யான மனப்பான்மை (indifference, apathy)

3. என்னை பாதித்தாலும் கண்டுக்க மாட்டேன் என்ற பொறுப்பற்ற நிலைப்பாடு (irresponsibility)

4. பாத்துகிட்டே இரு; இதுக்கெல்லாம் தீர்வா யாராவது கண்டிப்பா வருவாங்க என்ற பற்றற்ற நிலை (EVerybody waiting on somebody to fix OUR problems)



சாலையில் தம் வீட்டுச்சிறார் கை பிடித்து அழைத்துச்செல்லும் சான்றோர் நாம், காலில் இடறும் கல்லை என்ன செய்கிறோம் என்பதில் தொடங்குகிறது நம் விரல் பிடித்து நடக்கும் எதிர்கால சமுதாயத்தின் கட்டமைப்பு.

இன்று ஞாயிறு... கொஞ்சம் டைம் ஒதுக்கி வீட்டுல இருக்குற எல்லாத்தோடயும் இதப்பத்தி பேசுங்கய்ய்ய்யா! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்